14.9.05

என்றும் புலம்பாதவள்.

வாசுகியாய் வாழ ஆசை! வள்ளுவன்தான் வாய்க்கவில்லை. உங்களைப்போல் புலம்ப மட்டும் எனக்கு வராது! சலித்துக்கொள்ளத் தேவை எனக்கில்லை. எதற்காக? என்னிடத்தில் குறை இல்லாதபொழுது நான் ஏன் சபிக்கவேண்டும்? சலித்துக்கொள்ளத்தான் வேண்டும்! சராசரியாய் வாழ இஷ்டமில்லை எனக்கு. ஏன், எதற்காக நான் அலட்டிக்கொள்ளவேண்டும்? அலங்காரப் பதுமையும் அல்ல, பசப்பலும் பாசாங்கும் எனக்கெதற்கு? கணவன் வாய்த்தாலும் - அவன் அடிமனத்தையும் ஊடுருவக்கூடிய நான், நாத்தனார் மாமியாரை என்வசம் பூட்டிவைப்பேன் - 'டெஸ்க்டாப் ஐகான்'களாய். உள்நோக்கம் எதுவும் எனக்கில்லாததால். புலம்புவதில்லை இனிமேலும். புகழோடு வாழ்ந்தும் புரியாமலென்னிடம் விளையாடப் பார்த்த வீணரை,நான் விட்டதில்லை. கொங்கண முனிவர்களும் துர்வாச ரிஷிகளும் காயம்பட வைத்தவள்நான். அப்படி ஒன்றும் அபூர்வமான பிறவி அல்லள். தன்னை உணர்ந்த எவருக்கும் சாத்தியப்பாடு இது என்னை உணர்ந்தவள் என்பதால் நான்...............

No comments: