27.9.18

ஐந்து தூண் மண்டபம்!

ஐந்து தூண்கள் உள்ள மண்டபத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது, நடக்கவும் பேசவும் அவதானித்திருக்கிறீர்களா?
அந்த ஐந்து தூண்களுக்கும் 'சால்பு' என்று பெயர். அவற்றின் இயல்புகள்:
1. அன்பு (LOVE)
வேண்டியவர் வேண்டாதார் யாரிடமும் காட்டப்படும் அன்பு.
2. நாணம் (MODESTY)
நிகழ்சமுதாயத்தில் மற்றவர் யாருக்கும் நேர்முகமாகவோ மறைமுகவோ தீமை செய்ய வெட்கப்படுதல்.
3. ஒப்புரவு (ALTRUISM)
சகமாந்தர் அனைவரையும் சமமாக உணர்தல்.
4. கண்ணோட்டம் (COMPASSION) சக உயிர் எதுவாயினும் அவற்றை/அவர்களை நேசித்தல்.
5. வாய்மை (TRUTHFULNESS)
நிகழ்சமூகத்தில் வெறியர்களிடம் யாரையும் காட்டிக்கொடுக்காத வாய்மை மொழிதல்.
இத்தகைய ஐந்து சால்பு எனும் தூண்கள் காலங்காலமாய்த் தாங்குகிற மண்டபங்களை மட்டுமே 'சான்றோர்'கள் என்று சொல்ல வேண்டும்.
மற்றவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மக்களே.
------------------------------------------------
*அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்*
*The pillars of excellence are five -- love, modesty,
Altruism, compassion, truthfulness*

#Tirukural #nobility #சான்றாண்மை #nobles #சான்றோர்

10.9.18

*காந்திக் கணக்கு* - தலைகீழாக மாற்றிவிட்டார்கள்!

காந்திக் கணக்கு
----------------------------
காந்தி கடைசிவரை சில்லறைச் செலவுகளை எண்ணி எண்ணி கணக்கு வைத்திருந்தார். பிறரிடமும் அதேபோல பைசாக்கணக்கு கேட்டார். கடைசி காங்கிரஸ் தொண்டனும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அவரது கணக்கு கேட்கும் போக்கில் மனம் வெறுத்து 'மகாத்மாக்களை வழிபடலாம். சேர்ந்து பணியாற்ற முடியாது' என்று கணக்குப்புத்தகங்களை அவர் முன் வீசிவிட்டு ராஜாஜி வெளியிருக்கிறார். ஆனால் 'ஒரு பைசா என்பது பல லட்சம் ரூபாயின் முதல் அலகு' என காந்தி எண்ணினார். ...ஒரு விஷயத்தைச் செய்ய மிகச் செலவுகுறைந்த வழி என்ன என்பதையே எப்போதும் அவர் கவனித்தார்.
- இன்றைய காந்தி.

7.9.18

என் இணையதள குரு.
Professor Pas Pasupathy
Professor Emeritus,
University of Toronto.
Canada.


"தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கி கும்பிட்டார். அதுவே இந்தியா முழுக்க சென்று சேர்ந்த செய்தி."