11.9.05

எத்தனைக் குறைகள் இருந்தாலும்...

சோலையில் ஆயிரம் மலர்கள் மலரினும் எல்லாம் மல்லிகை மலராகுமா? உலகில் எத்தனை நாடுகள் இருப்பினும் எல்லாம் என்றன் நாடாகுமா? எத்தனைக் குறைகள் இருந்தாலும் -- என் இந்திய நாட்டுக்கு இணையேது? கோடியே நிறைகள் குவிந்தாலும் -- அயல் நாட்டினில் எனக்கு மகிழ்வேது? மொழி,இனம் கெடுக்க முன்வரு வோரையும் மதிக்கும் என் தமிழ்நாடே! தமிழர் என்றே தம்மை உணராதோ ரையும் தாங்கிடும் தமிழ்நாடே! -- இன்னும் எத்தனை குறைகள் இருந்தாலும் -- நான் உன்மேல் அன்புகொள்வேன் -- நான் உன்னிடம் வாழ்ந்திருப்பேன்!...... (தேவமைந்தன், புல்வெளி, 1980) [ப:1976]

No comments: