20.9.05

காக்கை அலைக்கும் சிறுவர்

புலம்தரு செந்நெல் புழுக்கிய முன்றில். விடாதொரு காக்கையை அலைக்கும் சிறுவர்: கயிற்றால் காலைக் கட்டியே இழுத்தும், சிறகுகள் பிடித்துச் சிவ்வெனப் பிய்த்தும், நொய்யவும் நோகவும் தரைதனில் அறைந்தும், சிலுக்கெனச் சிதைந்து போகவும் வைக்க-- எவர்தாம் இவர்க்குஅதி காரம் வழங்கினர்; வாழ்வா? ஓ!அது கொடிதே. (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: சிறிது மாற்றப்பெற்றது.)

No comments: