7.9.05

அவலச் சிரிப்பு

கூரை பிரிந்த குள்ளக் குடிசையின் வெளியே தெருவில் சாக்கடை ஓரம் குவிந்த குப்பை அருகில் ஒருவன். துன்பம் பொதிந்த அழுக்கு மூட்டையாய்; முற்றுப் புள்ளியே இல்லாக் கதையாய்ச் சுருண்டு படுத்து, வாழ்வதே சுமையாய் வாழும் நிதர்சனம் மறந்துபோய், உறக்கம் தன்னில் சிரிக்கின் றானே. (தேவமைந்தன், "முல்லைச்சரம்", திசம்பர் 1975)

No comments: