17.12.05
ஒரு பீனிக்சாக......
16.12.05
இடைவெளி விடாதீர்கள்!
3.12.05
கணங்களைத் தொலைத்திடும் நிகழ்ச்சிகள்!
23.11.05
அருளியின் 'நம் செம்மொழி'-அருஞ்சுவை மொழி வரலாற்று நூல்
22.11.05
'சும்மா இரு'க்க முடியாதா?
21.11.05
மரித்தவர்களோடு வாழ்கிறேன்!
20.11.05
வித்தியாசமாய்ச் சிந்தித்த அம்ப்ரோஸ் பியர்ஸ்
கவிஞர் வேந்தர்வேந்தன் - ஆரவாரமற்ற புரட்சிப் பாவலர்
19.11.05
மலைநாட்டுத் தமிழ்முரசு 1958ஆம் ஆண்டு மலர்
பிரெஞ்சுப் பேராசிரியர் - நண்பர் திரு. நாயகர், இம்முறை 'தமிழ் முரசு' வெளியிட்ட பழைய ஆண்டு மலரை வாசிக்கத் தந்தார். பழைமையிலும் புதுமை காணும் நண்பர்கள் நாங்கள். அம்மலர், 1958ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. தமிழ் முரசின் ஐந்தாவது ஆண்டு மலர் அது.
இப்பொழுதெல்லாம், 'தீவளிக்குத் தீவளி' வெளியிடப்பெறும் - அதாவது, ஒரு மலரை மூன்றாகப் 'புய்த்'து வெளியிடும் வியாபாரம் தெரியாமல் - அல்லது, அப்படியெல்லாம் செய்வது மலை நாட்டுத் தமிழ்ப் பெருமக்களுக்குப் பழக்கமாய் இராது என்பதால் - தெம்மி 1/4 அளவில் முந்நூற்று முப்பது பக்க அளவில் வெளியிடப் பெற்றது. கண்ணையும் மனத்தையும் உறுத்தாத ஏராளமான சித்திரங்களும் ஒளிப்படங்களும் பின்னணி ஓவியங்களும் கூடியது. "தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் படிக்கும் பொருட் செறிவும், கண்டு மகிழும் கலையழகும் கொண்டதாக" மலர் உருவாகியிருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. டாக்டர் மு.வ., பாஸ்கரத் தொண்டமான், குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் தனிநாயக அடிகளார், கவியோகி சுத்தானந்தர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், வெள்ளை வாரணனார், ம.பொ.சிவஞானம், டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி, பூ. ஆலாலசுந்தரனார், அ.கி.பரந்தாமனார், இராஜாமணி அம்மையார், வல்லிக்கண்ணன், அப்துல் வஹ்ஹாப், வி. மரிய அந்தோனி போன்ற மேலும் பல அறிஞர்களின் கட்டுரைகளும், டி.கே.ஷண்முகம், கே.ஏ.தங்கவேலு, சிவாஜி கணேசன், பிரேம் நசீர், ஜெமினி கணேசன், எம்.என். ராஜம், சாவித்திரி , ராகினி, பத்மினி போன்ற கலைஞர் சிலரின் கட்டுரைகளும் மலரில் வெளிவந்துள்ளன. அறிஞர்களுக்குத் தமிழ் முரசு தந்துள்ள அகத்தியம் பாராட்டத்தக்கது.
கச்சேரிகளில் தமிழ் உருப்படிகள் ஆகச் சில, கடைசியில் அப்பொழுதும் இப்பொழுதும் பாடப்படுவதுபோல சினிமாக் கலைஞர்களின் கருத்துரைகள் மலரில் கடைசியில் இடம்பெற்றுள்ளமை, மிகவும் பொருத்தமாகவும் நம் பழைய தமிழர்களின் நடுவுநிலைமையை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது.
இம்மலர் ஒரு கடல் என்றால், அதில் ஓர் அலை இதோ: பக்கம் 76இல் இடம்பெற்றுள்ள பாவேந்தர் பாட்டு -
பட்டுக் குஞ்சுகள் எட்டைக் கோழி
இட்டுக் கொண்டே போகும்
எட்டுக் குஞ்சும் தாய்சொல் லுக்குக்
கட்டுப் பட்டே மேயும்
தட்டுக் கெட்டுப் போனால் ஒன்று
தட்டிப் போகும் பருந்தே
விட்டுத் தப்பி னாலும் பூனை
விட்டுவி டாது விருந்தே.
( பாரதிதாசன், 'குயில்.' )
18.11.05
தகுதிக்குத் தமிழ்மாமணி மு.இறைவிழியனார்
17.11.05
உலக நகரம் ஆரோவில்லின் தமிழ்க் கவிஞர்
16.11.05
ஒரு கை ஓசைகள்
13.11.05
ஆகாசம்பட்டு - கி.ராஜநாராயணன் நோக்கு
8.11.05
"எனக்கு வாழ்க்கை போரடித்ததில்லை" - லமார்த்தீன்
3.11.05
நான் - எனக்கு மட்டும்தான்!
1.11.05
தித்திக்கிறதா தீபாவளி?
26.10.05
ஐயே மெத்தக் கடினம்!
22.10.05
தங்கப்பா சொல்லும் மக்கள் பாவலர் இலக்கணம்
19.10.05
மீண்டும் டினோசார்களிடமா?
16.10.05
'சுந்தரி'(1917) சமூக நாவல் காட்டும் வ.ரா.'வின் பின்னணி
11.10.05
சொந்த வேர்கள்
8.10.05
'முட்டாள்கள் தினம்' - படையல்கள்
பாடும்போது..
புதுமூலர்
4.10.05
சுவர்கள்
2.10.05
என்னை எழுதும் அந்தக் கைக்கு......
30.9.05
ஒரு தீர்மானத்துக்கு வருவோம்!
25.9.05
ஒரு விடியலுக்கு முன் விளைந்த எண்ணப்பதிவுகள்
20.9.05
எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
காக்கை அலைக்கும் சிறுவர்
மன விடுதலையை அருள்வாய்!
17.9.05
அன்பு ஆன அப்பாவுக்கு... ...
சூரியகீதை
எது?
சொந்தபந்தங்கள்
படிப்பினைகள்
14.9.05
என்றும் புலம்பாதவள்.
11.9.05
எத்தனைக் குறைகள் இருந்தாலும்...
அரிது அரிது! குருவியாய்ப் பிறத்தல் அரிது!
9.9.05
எல்லைக்கு உட்பட்டும் - எத்தனைக் குதிகுதிப்பு?
8.9.05
எப்படியும் காதல் வருமாம்!
7.9.05
வாழவேண்டிய வாழ்க்கை
பிள்ளை ஒன்று......
ஒருவரை ஒருவர்..............
நானாக நான் வாழ வேண்டும்
ஆன்மநெடும் பயணமதில்
ஒருநாளை வாழ்க்கையிலே
நானாக நான்வாழ
முடியாமல் போய்விடுமோ?
காலையிலே 'நான்' பிறந்தேன்
கருமிரவில் 'நான்' செத்தேன்;
நாள்தோறும் பலப் பலவாய்ப்
பிறவிகளைப் பெறுகின்றேன்.
'நான்' 'எனது' அற்றுவிட்டால்
பேரின்பம் இருக்குமென
நானும் நம்பினேன்; பின்
மகிழ்வுற்றேன்; மெதுவாய்என்
நான்எனதாம் சட்டைகளைக்
கழற்றினேன்-கழற்றினேன்......
''வான்தெய்வம் கண்ணன்தான்
வரவேண்டாம்''-என்பதுபோல்
நான்எனதாம் சட்டைகள்
வளர்ந்துவரக் கண்டேனே...
நேற்றென்னை மீன்கொத்தி
கேட்டது: ''ஏ நண்பா!
காற்றினிலே நான் பறந்து
மிதப்பதுபோல் மிதப்பாயா?''
இன்றென்னைக் கரிக்குருவி
கிண்டிற்று: ''ஏ நண்பா!
என்போல ஆட்டின்மேல்
அசைபயணம் கொள்வாயா?''
பசுவொன்றும் எனைப்பார்த்துக்
கத்திற்று: ''ஏ அன்பா!
பார் என்போல் பால்தந்து
வாழ்வாயா? மேய்வாயா?''
எருமையொன்று எனைமறித்து
வினவிற்று: ''ஏ அன்பா!
என்னைப்போல் குளத்தினிலே
நெடுநேரம் அமிழ்வாயா?''
ஓர் அறிவாம் ஆறு அறிவாம்
ஒவ்வொன்றும் பல வகையாம்
பேருக்கே நம் பெரியோர்
பிதற்றியதாம் இலக்கணங்கள்......
ஒரு
பறவைபோல் பசுவைப்போல்
வாழ்ந்திடவும் இயலாத
வேடிக்கை மனிதருக்கு
இவையெல்லாம் விளம்பரங்கள்!
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976. முன்: 'முல்லைச்சரம்,' நவம்பர் 1974)
அவலச் சிரிப்பு
கொசுவண்ணே, உனக்கு ஒரு கும்பிடு!
31.8.05
ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் முகவர்களோடு......
ஐயாமார்களே!
மனமார்ந்த நன்றிகள்,
தாங்கள் அவ்வப்பொழுது
என்மனத் திரையில்
நிகழ்த்திக் காட்டும்
தந்திரக் கணக்குகளுக்கு!
அவற்றுக்கான விடைகளுக்கும்..
(அவை தங்களுக்காவது புரிந்திருந்தால்..)
ஒன்றரை மணிநேரத்தில்
ஓராயிரம் திட்டங்கள்;
கற்பனை வானத்தில்
பெரும்பணச் சிக்கனங்கள்......
இந்த அனுபவத்தை
அவ்வப்பொழுது மறவாமல்
சலிக்காமல் வந்துதரும்
தங்களெல்லோருக்கும்
மீண்டும் மீண்டும் நன்றிகள்!
எதற்காக என்றால்-
இயல்பாக வறண்டுகிடக்கும்
என்வாழ்க்கைக் குளத்தில்,
நீங்கள் 'மாஜிக்' நிகழ்த்தும்
தருணங்களில் மட்டுமே
அல்லிப் பூக்கள்
அழகாக மலர்ந்து சிரித்து
கொஞ்ச நேரமாவது
நெஞ்சைக் குளிர்விக்கின்றன.
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976)
27.8.05
எங்கள் இருப்பும் இங்கேதான்!
உங்கள் தெருவில் ஒரு பாடகன் [1976]
முளைகள்
26.8.05
செருப்பின் இடையே சிறு கல்!
Sir! Shall I Ask You A Simple Question?
25.8.05
போன்சாய் மனிதர்கள்
23.8.05
மக்கள் ஆள்கிறார்களா?
21.8.05
புல்வெளி மலர்கள்
19.8.05
வேறு வழி இல்லாததாலும்
ஓ! வண்டிக்காரா......
ஓ! வண்டிக்காரா, வண்டிக்காரா!
சற்றே நில்லேன்! சொல்வதைக் கேளேன்!
நீண்ட வழிதனில் விழிகளை நாட்டியே
காலமும் நேரமும் கடிதே ஏகிடச்
செல்லும் வண்டிக்காரனே சற்றுநில்.
செக்கர் வானில் செழுங்கதிர் சாயவும்
பஞ்சுப் பொதிகளாய் முகில்கள் படரவும்
இயற்கையின் கூந்தலாய் இருள்தான் நெளியவும்
குழந்தை முகமெனத் திங்கள் நகரவும்
பொழுதும் போனது: சற்றே நில்லேன்.
எங்கோ விரைவாய் என்றும் போவதேன்?
வளையும் வழிகளில் விழைந்து விரைவதேன்?
வலியவுன் மாடுகள் வழிசென்று இளைத்தன.
தென்றல் வீச அல்லி சிலிர்க்கும்
பொய்கை அதோ பார்!
வண்டியை நிறுத்து.
நம்மைச் சுமந்தே இழுத்த காளைகள்
நீரை அருந்தி மென்புல் நுகர்ந்து
நிலத்தில் சாய்ந்து நீள்வால் சுழற்றி
மெதுவாய் அசையிட்டு அயரவே விட்டிடு.
நாமும் கொஞ்சம் -- மீதிப் பயணம் தொடரும் முன் -- சென்றவை மறந்துதான் சாய்ந்த் திருப்போமே.
( தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976 )

