23.8.05

மக்கள் ஆள்கிறார்களா?

மாதத்தின் முதல் வாரம் மட்டுமே மனிதராக வாழக்கூடியவொரு மாதச்சம்பளக் காரரிடம்போய் கட்டாய வருமானவரி வசூல். மடிக் கம்ப்யூட்டரின் 'மெமரி'யில், மனிதமூளையால் எண்ணமுடியாத- எண்ணமுயன்றால் விக்கிக்கொள்ளும்- சொத்துக் கணக்குகள் குவித்த உபரி-உதிரி மனிதப்போலிகளிடம் மண்டிபோட்டுத் தேர்தல்வசூல் மட்டும்தானா? ரேஷன் கார்டை ஒழுங்குபடுத்த- மக்களாட்சி மன்னர்களுக்கு வயிற்றில் அடிபடும்படி "நாளைக்கு வா!" "ஒவ்வொரு மாதத்திலும் இந்த இந்தத் தேதிகளில் இந்த இந்த மணிகளுக்குள் வா! 'க்யூ'வில் நில்!" என்ற அடுக்கடுக்கு நிபந்தனைகள். தொழில் தொடங்கித்தான் வாழ முடியும் என்றநிலை இளைஞருக்கு 'செக்யூரிட்டி' பிடுங்கல்கள்! ஊரோடு உலகையும் ஏமாற்றி உலையில் இடுபவர்க்கு-- "சொல்லி அனுப்பினால் நாங்கள் வரமாட்டோமா?" --உபசாரங்களோடு கோடிக்கணக்கில் கடன்வசதிகள், மக்களாட்சி மன்னர்கள் செலுத்தும் வரிப்பணம், நரிகளுக்கும் பேராசைப் பேய்களுக்கும்-- வாரிவழங்கல். ஒரே ஒரு சந்தேகம்-- தேசபக்தி குடிசனங்களுக்கு மட்டும்தான் பரிந்துரையா?

No comments: