14.8.05

ஆதலால்.......

முயற்சி செய்து முயற்சி செய்து தோற்றே போனேன். என் 'உள்'ளில் அந்த முகம், வேறெந்த முகத்தையும்--மட்டுமல்ல வேறெந்த முகம்குறித்த தரவுகளையும்கூட, ஞாபகப் பேழையுள் எனது 'நான்' சேமிக்க விடாமல் அலம்பல் செய்கிறது. ஏன் என் தோழி--என் ஏழுவயது முதல், சரசக்காவின் நொய்யல் ஆறுநோக்கிய நெடுஞ்சாலையோரத்து வீட்டில் சந்தித்துப் பழகினாள்? தன்னை எனக்கு உணர்த்தாமல் என்னையே எனக்கு உணர்த்திவிட்டாள்? என் தோழி, எனக்குத் தோழியாகவே நீடித்து இருந்தாள். ஆனாலும் கணம் ஒருபாழில் நினைவிழந்து போனாள். கால இடைவெளியும் மரண மறதியும் எங்கள் நட்புக்குத் தம்மை விட்டுக் கொடுத்தன-- இன்றிருக்கும் நான் அன்றிருக்கவில்லை ஆதலால்.

No comments: