26.10.21

சாதி சமய சழக்கை விட்ட ஆல்வள்ளி...

 *சாதிசமயச் சழக்கு*கள் இல்லாத ஆல்வள்ளி, தோட்டத்தில் தென்னையின்மேல் *விட்டு விடுதலையாக*ப் படர்ந்திருக்கிறது.

#உயர்பிறவி

24.10.21

"நா! காந்தி பக்தனுங்கோ..."

அண்மையில் திருவாளர் சுப்பிரமணியன் சுவாமி காந்தியடிகளை 'பிராமணர்' என்று தன் ஆய்வுப் பேச்சொன்றில் சொல்லியுள்ளார். திருவாளர் சொக்கு சுப்பிரமணியன் புதுச்சேரியில் நடத்திய 'வண்ணங்கள்' என்ற சிற்றேட்டின் சிறப்பு வெளியீடான 'ஊமைக் காயங்கள்' என்ற கையேட்டில் இச்சேதியை - 'நா! காந்தி பக்தனுங்கோ...' என்ற கவிதைவழி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலப்படுத்தியுள்ளேன். இதை என் கவனத்துக்குக்ண கொண்டு வந்தவர் புதுச்சேரி உளவியல் மருத்துவர் எஸ்.இலட்சுமணன் அவர்கள்.அவருக்கு மிக்க நன்றி. - தேவமைந்தன்