17.9.05

அன்பு ஆன அப்பாவுக்கு... ...

தழைத்த வாழையின் இருப்பும் கனமும் அடிவாழைக்கு அவஸ்தை ஆயிற்று. அறிந்தோ அறியாமலோ அதை உணர்ந்து வாழைப் 'பெரிசு' பக்கவாட்டில் சாய்ந்து வீழ்ந்தது. அடிவாழை இப்பொழுது தலைவாழை ஆனது. தன்மேல் அடிக்கத் தொடங்கிய வெயிலும் வறண்ட காற்றும் எப்படிபபட்டவை என்பதை இப்பொழுதுதான் தெரிந்துகொண்டது.. இத்தனைக் காலம் அத்தனைக் 'கிழம்' இத்தனையும் தாங்கியதா?... ****************************** தன் அடிவாழைகளுக்கு தான் சுமையாகாமல் தவிர்ப்பது எங்ஙனம் தவிர்வது எவ்வாறு என்று ஓயாமல் சிந்திக்கிறது, இப்பொழுதெல்லாம் - அந்தப் புதியதும் இளையதுமாய் இருந்த பழைய அடிவாழை. (தேவமைந்தன், 28/01/1988: போன்சாய் மனிதர்கள், 1993)

1 comment:

NambikkaiRAMA said...

அருமையான சிந்தனை!