20.9.05

மன விடுதலையை அருள்வாய்!

விடுதலையை அருள்வாய்- தாயே, மன விடுதலையை அருள்வாய்! இன்பமும் துன்பமும் விடும்நிலை எய்திட இயல்பாய் வாழ்ந்துநான் உண்மையை அறிந்திட (விடுதலையை...... உயிர்கள் அனைத்தும் ஒன்றென உணர்ந்தேன் உண்மையாய் வாழ்வதே உயர்வெனத் தெளிந்தேன் பொய்ம்மை வாழ்வினை நஞ்சென வெறுத்தேன் தூய்மையே உலகின் தூண்எனப் புரிந்தேன் (விடுதலையை...... அரிமா வன்புலி மானினம் நரிகளும் ஆவொடு பாம்புதேள் அனைத்தும் உன்வடிவே மலரொடு செடிகொடி மலைகளும் அருவியும் மாண்புறு பறவையும் நீயெனக் கொண்டேன் (விடுதலையை...... (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: முகப்புப் பாடல்)

No comments: