17.9.05

எது?

தாள்களை எழுதத் தந்து பேனாவைக் கையில் திணித்து எழுதம்மா எழுது என்றுன் மோவாயை ஏந்தி நின்று எத்தனைதான் கெஞ்சினாலும் தொலைக்காட்சி தன்னைவிட்டுக் கண்திருப்பா திருப்பவளே! என்னைமட்டுமா எழுதவைத்தது? என்னைமட்டுமா உழுதுபார்த்தது? என்னைமட்டுமா பேசவைத்தது? எத்தனை எத்தனை யோபேர் எழுதவும் பேசவும் இடம்கொடுத்தது - உன்னை மட்டும் வண்ணப் பெட்டி முன்வைத்தது ஏன்பெண்ணே? (தேவமைந்தன், 16/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)

No comments: