4.10.05

சுவர்கள்

நெஞ்சம் நிறைய கசப்பு - என் மூளை நிரம்ப செய்தி நினைவு முழுதும் புண்கள் - என் நோக்கம் மறுக்கும் வெளிச்சம். வானம் மறைக்கும் சுவர்கள் - தேன் கூடு மறைக்கும் பாறை - கொடித் துண்டு மறைக்கும் கொய்யா - நம் எண்ணம் மறைக்கும் எதையும். பண்பை வீசி எறிந்து - நல்ல அன்பை நாளும் துறந்து - செயல் எங்கே கூடும் என்று - சந்தை நாய்போல் என்றும் அலைந்து - திரியும் வாழ்வுக் கின்று வாழ்வு. செய்து தந்தால் நல்லர் - செய்யக் கற்றுத் தந்தால் வீணர் - சிரித்துக் கழுத்தை அறுப்பவர் நல்லர் - கடுத்து நன்மை செய்பவர் அல்லர் - இவை நிகழ்வில் திகழும் நெறிகள். நல்லவை கெட்டவை எல்லாம் நம்மால் மட்டுமே ஆகும் மற்றவர் உற்றவர் ஆகார் கற்றவர் விழிப்பில் வாழ்வார். குறுகலான எண்ணம் குந்திக் குமைய வைக்கும் நம்மை அகன்று விரிந்த எண்ணம் - என்றும் ஆக்கி வளர்க்கும் உண்மை.

No comments: