31.8.05

ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் முகவர்களோடு......

ஐயாமார்களே! மனமார்ந்த நன்றிகள், தாங்கள் அவ்வப்பொழுது என்மனத் திரையில் நிகழ்த்திக் காட்டும் தந்திரக் கணக்குகளுக்கு! அவற்றுக்கான விடைகளுக்கும்.. (அவை தங்களுக்காவது புரிந்திருந்தால்..) ஒன்றரை மணிநேரத்தில் ஓராயிரம் திட்டங்கள்; கற்பனை வானத்தில் பெரும்பணச் சிக்கனங்கள்...... இந்த அனுபவத்தை அவ்வப்பொழுது மறவாமல் சலிக்காமல் வந்துதரும் தங்களெல்லோருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள்! எதற்காக என்றால்- இயல்பாக வறண்டுகிடக்கும் என்வாழ்க்கைக் குளத்தில், நீங்கள் 'மாஜிக்' நிகழ்த்தும் தருணங்களில் மட்டுமே அல்லிப் பூக்கள் அழகாக மலர்ந்து சிரித்து கொஞ்ச நேரமாவது நெஞ்சைக் குளிர்விக்கின்றன. (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976)

No comments: