25.8.05

போன்சாய் மனிதர்கள்

விதவிதமான தொட்டிகளில்மொழிபேசும் நிலைமறந்துஓடிஆடும் வெளிமறந்துசின்னத் திரைமுன்சிலைகளாய் அமர்ந்திருக்கும்போன்சாய் மனிதர்கள்!வீட்டுக்கு முன் அசையும்முருங்கை மரம்கூடஅந்தச்சின்னத்திரையில் வந்தால்தான்கொஞ்சம் பார்ப்பார்கள்! வீடுதோறும்கட்டை குட்டையாய்கறுப்பாய் வெளுப்பாய்சிவப்பாய் மாநிறமாய்,கூடத்தின் தொட்டிகளில்--சாட்டிலைட்டுகள் தாம்மட்டும்விண்ணில் இயங்கி, கீழேமண்தொட்டிகளில் நட்டுஇயக்கும் இந்தபோன்சாய் மனிதர்கள் 21-ஆம் நூற்றாண்டுக்காக. (28/02/1993: தேவமைந்தன், ''போன்சாய் மனிதர்கள்,'' திசம்பர் 1993)

No comments: