26.8.05

செருப்பின் இடையே சிறு கல்!

சாலையில் வழுக்கும் விமானத்தைப் போலவே சகலவித்தைகளையும் காட்டுமெங்கள் நகரப்பேருந்து, பக்கவாட்டில் முளைத்த தலைகளோடும் - வியர்த்த மானுட உடம்புகளோடும் அந்தக் காலத்தின் அழகுவழிந்த "ருக்குமணிவண்டி" போலவே, ஆனால் கொஞ்சம்போல சலசலத்தும் கலகலத்தும் அலுப்போடும் ஆயாசத்தோடும் வந்து சேர்ந்தது. ஓடிப் பிடிக்க விரைகிறேன். அப்பொழுது பார்த்து- பாதத்தோடு செருப்பும் இழுக்கிறது. ஓட முடியவில்லை. இழுத்து இழுத்து நடக்கிறேன்............. ஓரிரு உடம்புகளை உள்ளே இழுத்துக்கொண்டு பேருந்து- என் வாடிக்கை மறந்து ஓ!...நழுவிப் போகிறது...... எரிச்சலோடு செருப்பை உதறுகிறேன். கிஞ்சித்தும் அலட்டல் இல்லாமல் வந்து சாலையோரம் விழுகிறது, ஒரு சிறு பருக்கைக் கல். அன்றாடம் எம் இயல்பான வாழ்வில் இடையிடும் அற்பச் சிறுமதியோ, அது?

2 comments:

நல்லவன் said...

ஐந்து தொடுப்பு எதற்கு

நளாயினி said...

"எரிச்சலோடு
செருப்பை உதறுகிறேன்.
கிஞ்சித்தும் அலட்டல் இல்லாமல்
வந்து சாலையோரம் விழுகிறது,
ஒரு சிறு பருக்கைக் கல்.

அன்றாடம் எம்
இயல்பான வாழ்வில்
இடையிடும்
அற்பச் சிறுமதியோ, அது?"

தலையில் காக்கா எச்சம்.
தற்செயல் நிகழ்வு.
தடை தாண்டு.

nalayiny