26.2.06

சூரியனாய் வெளியே வா!

உன்னிடம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதால்தான் கடும் விமர்சனத்திற்கு நீ ஆளாக வேண்டிவருகிறது. செத்துப்போன நாயை எவரேனும் உதைப்பதை பார்த்திருக்கிறாயா? அட, அதுபோல நீ இருந்தால் அது உன் இருத்தலைத்தான் அர்த்தப்படுத்துமா? கல்லாக உன்னை இருக்கச் சொல்பவர்கள், படியாக உன்னை ஆக்கிப் பாதம் பதித்து மேலேறவே அப்படிச் சொல்கிறார்கள். தாய்க்கு எல்லாப் பிள்ளைகளும் உசத்திதான். உன்வழியில் நீ உழை. பெற்ற தாய்க்குச் சோறுபோடு. வாழும்பொழுதே வேண்டிய துணிமணி வாங்கித்தா. போனபிறகு கோடிபோர்த்தி என்ன லாபம்? அவரவர் அவரவர் வழியில் போகட்டும். முடியாது என்பதற்கு மறுபக்கம்தான் முடியும் என்பது. முடங்கச் சொல்பவர்கள் உன்னை அடங்கச் சொல்கிறவர்கள் உன்னை அடக்கம் செய்கிறார்கள் - நீ வாழும்பொழுதே... ஆமாம். திரைகள் கிழி. தடைகள் தகர். விண்மீனாய் அல்ல, ஒரு சூரியனாய் வெளியில் வா.

No comments: