7.2.06

வளர்ந்திருக்கிறேன், ஐயா! -தேவமைந்தன்

அடையாளம் தெரியாதவராய் வாழ்வதில் அர்த்தம் உண்டு. அடையாளம் தெரிவதில் முரண்பாடு முனைந்து நிற்கும். அடையாளங்களால் குலைப்பதும் எதிர்வில் குலைந்துபோக நேர்வதும் வினை - எதிர்வினை. நெற்றியில் தீட்டப்படாவிட்டாலும் மார்பில் அது பூட்டப்படாவிட்டாலும் இனம் சாதி குலம் எல்லாம் நாட்டுடன், அடையாள ஆதிக்கங்களே. அடையாளம் முதலில் சுகமாகலாம். பின்னால் அது பிசாசாய்ப் பீடிக்கும். பதவி பலகை புத்தகம் சொற்கள் உதவி வாக்குறுதி செய்தி தகவல் - எல்லாம் மர்மக் கைகால் விலங்குகள். அடுத்த ஊரில் நகரில் மாநகரில் அடையாளம் தெரியாதவனாய் உலவுவதில் உள்ள அனுபவத்தை உணர்ந்த பின்பும் சொந்த வாழ்க்கையில் சுமப்பதேன் அடையாளங்கள்? (போன்சாய் மனிதர்கள், 1993. சிறிய மாற்றங்களுடன்.)

No comments: