5.4.06

மாடல்ல! மனுஷிதான் நான்! - மங்கை பசுபதியின் கவிதை

மாடல்ல! மனுஷிதான் நான்! -மங்கை பசுபதி மாடல்ல, நீங்கள் பல்பிடித்து விலைபேச! ஆடல்ல நீங்கள் விரல்மறைத்து விலைபேச! உம்மைப்போல் நாங்கள் உயிருள்ள பிறவிகள்தாம்! ஐரோப்பா மண்டலத்தில் பிறந்திருந்தால் நாங்கள்; விலைபேச வருவீரா? வரும்நேரம், நாங்கள் வீட்டில்தான் இருப்போமா? இருந்தாலும் - உம்மைத்தான் மதிப்போமா? காலம்தான் மாறிடினும் இந்தியர்கள் மாறவில்லை! “கழிப்பிடம் சென்றுவந்தால் கைகழுவவேண்டும்” என்று விளம்பரங்கள் இந்தநாளும் ‘பிரச்சார பாரதி’யில்! கைகழுவி வாருங்கள் - பின்னர் பெண்ணின்விலை பேசுங்கள்! பீகார், ராஜஸ்தான், ம.பி., உ.பி. - இங்கெல்லாம் கற்றவர் விகிதம் குறைவு! தமிழகம் கேரளம் வங்கம்இம் மூன்றும் - கல்வி அறிவு பெற்றோர் அதிகம் கொண்டும் திருந்தவிலை இன்னும்தான் முழுதாய்! முப்பத்து மூன்று பெர்செண்ட் இன்னும் சித்திக்க வில்லையே பையா! நீ ஆணாக வில்லையே இன்னும்! - நல்ல ஆணாக இருப்பவர்கள் பெண்களுக்கு - முந்தி ஏற்ற இடம் தருவார்கள் அன்றோ? பெண்ணை மதிக்காத தேசம் பாழ்பட்டுப் போகும் என்று மண்ணில் உரக்கவே சொல்லுங்கள்! தனைப்பெற்ற தாயைப் போன்றவர்கள் பெண்கள் - என்று உணராத ஆணுமொரு ஆணா?- தன்னை மதிக்காமல் வாழ்பவளும் பெண்ணா? நன்றி: திண்ணை.காம்

No comments: