24.5.06

ஆன்மீகம்: அருட்பெருஞ்ஜோதி அகவல்

ஆன்மீகம்: அருட்பெருஞ்ஜோதி அகவல் 25.1.1872 அன்று சபையில் நடந்த முதல் தைப்பூச ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து வள்ளலார் 18.4.1872 அன்று ஒரே இரவில், மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 1596 வரிகளுடைய ‘அருட்பெருஞ்ஜோதி அகவலை’ இயற்றினார். கல்வெட்டுகள் சபையின் முன்மண்டபத்தில் நாற்புறமுள்ள 12 தூண்களிலும் ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ முழுமையும் பொறிக்கப்பெற்றுள்ளது. அதனால், முன்மண்டபம் ‘அகவல் மண்டபம்’ எனப் பெயர்பெற்றது. இதுபோல், உட்பிரகாரத்தில் ‘அட்டகம்’ பொறிக்கப்பெற்றுள்ளது. எண்கோண வெளித்திருச்சுற்றிலும், உட்திருச்சுற்றிலும், சிற்சபையிலும், பொற்சபையிலும், திருவாயில்களின்மேலும், சாளரங்களின்மேலும் திரு ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற திருவருட்பாப் பாடல்களும், மகாமந்திரமும் பொறிக்கப்பெற்றுள்ளன. -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

No comments: