19.3.06

ஒரு தத்துவத்தின் பரிணாமம் -- தேவமைந்தன்

“உலகத்தில் வாழ்வோர் இருவேறு வகையினர். பணமூட்டைகள் குவிப்பவர் ஆகஇருப்பவர் வேறு; தெளிவான அறிவுஉடையவர் ஆகவிளங்குபவர் வேறு;” என்றார் திருவள்ளுவர். பிற்காலத்து அறிவாளி வேய்ன் டபிள்யூ டையர் சொன்னார்: "செய்பவர் ஒருவகை; செய்யாதோர் மறுவகை. இந்த இரண்டே வகையினர்தாம் இருக்கிறார்கள் உலகில்!" பெரிய திரையும் சின்னத் திரையும் மாறி மாறிக் கொட்டிய நஞ்சு உச்சிக்கு ஏறிய நிகழ்யுக அறிவுக் கொழுந்து சொன்னது: "ஒலகத்தில இருக்கிறது'களெ ரெண்டே வகையா'ப் பிரிச்சுறலாம் - ஒண்ணு 'சொணை;' இன்னொண்ணு 'சொறி.'

No comments: