4.3.06

எது மேல்?

முகத்தை மறைத்து, முகவரி மாற்றி, மற்றவர் ஆக்கம் மனதினுள் வெறுத்து; நானே தெரிந்தவன், நானே எழுத்து, நானே அரசியல், நானே சரித்திரம், நானே உலகம்; எனக்கே தெரியும்; லண்டனும் யு.எஸ்’சும் எவனுக்குத் தெரியும்? என்று அன்றாடம் தனக்குள் ளாகவே முணுமுணுத்து இருக்கும் முதுமை மேலா? அடித்தவன் காலடி அமர்ந்திட மறுத்து; அடிபட்டவர்களை அன்புடன் அணைத்து, நொந்தழும் கண்ணீர் நாடியே துடைத்து, காய்ந்த வயிற்றைக் கனிவுடன் நிரப்பி, இழந்த நம்பிக்கையை - பழகிப் பேசியும், பாசம் பரிவு நேசம் காட்டியும் - மீண்டுமே ஊட்டி; பண்ணை மனத்தால் பாதகப் பட்ட நந்தன் சொந்தமாய் நாளும் அலைந்து; உந்தும் வேண்டாம், ஊர்தியும் வேண்டாம், ரதம் - அதன் நினைப்போ வேண்டவே வேண்டாம்! என்றே உங்கள் நுகத்தடி மறுப்பதால், மனிதம் மலர்ந்திடும் முகத்துடன் நலியும் இளமை மேலா?

No comments: