நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
(திருக்குறள் ௩௭௯ )
நன்றுஆகுங்கால் நல்லவாக் காண்பவர் = நல்லது ஆகும்போது நல்லது நல்லது என உவகை அடைந்து மகிழ்பவர்,
அன்றுஆகுங்கால்
அல்லல்படுவது எவன்? = நல்லதுஅல்லாதது (கெட்டது அல்ல; unpleasant போல) ஆகும்போது புலம்பி வருந்துவது ஏன்?
அதிகாரம் *ஊழ்* என்பதால் -
ஆகூழ் ~ நல்வினை - பொன் விலங்கு.
போகூழ் ~தீவினை - இரும்பு விலங்கு.
ஆகு + ஊழ். ஆவதற்குக் காரண ஏதுவான வினை/ செயல்.
காட்டு - இந்த அரிசி, மாவுக்கு ஆகி வரும். திருமணமான அவ்விணையருக்கு மகவு ஆகிவருகிறது.
போகு+ ஊழ். போவதற்குக் காரண ஏதுவான வினை/செயல்.
காட்டு: இந்த அரிசி, மாவுக்கு ஆகிவராது.
அன்று அவரிடம் திரண்டிருந்த செல்வம், இன்று போயே போய்விட்டது.
I miss you.
Stop-loss Order. [A stop-loss order is a risk-management tool that automatically sells a security once it reaches a certain price (either a percentage or a dollar amount below the current market price). It is designed to limit losses in case the security's price drops below that price level.]
He lost his spouse. She lost her spouse.
முடிபு: நல்வினைப் பயனாக நன்மை வரும்போது இன்பம் அடைகிறவர், தீவினைப் பயனாகத் தீமை வரும்போது ஏன் துன்பப்பட வேண்டும்?
கொண்முடிபு:
நன்மையும் வேண்டாம் தீமையும் வேண்டாம்; பொன்விலங்கால் தளைப்பட்டாலும் இரும்புவிலங்கால் தளைப்பட்டாலும் தளை தளையே - என்று செயல்புரியாமல் சோம்பிக் கிடப்பதை விட, நல்லதோ கெட்டதோ எதுவரினும் வரட்டும்... நான் ஓயாது செயல்படுவேன்.
COME WHAT MAY... I SHALL CONTINUE MY UNCEASING ACTIVITIES.
Courtesy: http://kalapathy.blogspot.com
No comments:
Post a Comment