17.12.23

இறந்த பின்...

இறந்த பின் செய்யப்படும் பந்தம் பிடித்தல், பால் ஊற்றுதல், கருமாதி திதி முதலான எல்லாச் சடங்குகளையும் உளமார வெறுக்கிறேன். அஸ்தியை ஆற்றில் கரைத்தலையும் வெறுக்கிறேன். அன்னதானம் என்ற பெயரில் நடக்கும் பல விளம்பரச் செயல்களையும் வெறுக்கிறேன். மெய்யாகவே பசித்தவர் இடம் தேடிச்சென்று பத்துப் பேருக்குத் தரும் உணவும் உதவியும் மட்டுமே உயர்ந்தவை. இறந்தவர் படங்களை வைத்து அமாவாசை முதலான சிறப்பு நாள்களில் படைத்தல் தீயதிலும் தீயது. இறந்தவர்கள் படங்களை சுவர்மேல் மாட்டுவதை என் துணைவியார் கலாவதி மிகவும் வெறுத்தார். ஒருவர் இருக்கும் வரை இயன்றவரை நன்றாகக் கவனித்தாலே போதும் என்று அடிக்கடி என்னிடம் சொன்னார். என் கருத்தும் அதுவே. இறந்தவர்கள் நினைவான அறச்செயல்களை எந்த நாள் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் விளம்பரமின்றிச் செய்யலாம்.

No comments: