29.6.24

விழியிரண்டும் வெளிச்சம் பெற்று...


நான் இருக்கும் கூட்டுக் குடும்பத்தார் இல்லத்தில், என் புலன | வாட்சப் நண்பரும் பெரியண்ணனுக்கு வினைவலருமான மரமேறும் கலைஞர் திரு. முருகன் குலைகுலையாய் நுங்கு கொண்டுவந்து நடைமேல் போட்டு அத்தனை நுங்குகளையும் நோண்டிக் கொடுத்தார். 
எனக்கு கல்நுங்கு ஆகவும் பிடிக்கும். மனதுக்கேற்ப கல்நுங்குகளும் மென்னுங்குகளும் கிடைத்தன. மகளார் அறிவுரைப்படி தோலுடன் தின்றேன்.
கண்விழிகளில் படலமிட்டிருந்தது. புலனம் | வாட்சப் பார்க்கமுடியவில்லை. என் அண்ணார், மாமா அனுப்புகைகளைச் சற்று நேரம் பார்க்காதிருந்தாலே 'லுக் அவுட் நோட்டீ'சை விடுத்துவைத்துவிடுவார்கள். அந்தக் கவலையிலிருந்தவனுக்கு நுங்குகள் உள்ளே போனதும் விழிகள் பட்டப்பளிச்சென்று படலம்நீங்கின.
'சற்றே நகரும் பிள்ளாய்!' என்று எனக்குள் திணிபட்டிருந்த அறிவியல் நந்திக்கு ஆணையிட்டேன். எனக்குள் கலா Kalavathy P. இருந்து என் உடல் மூலம் தனக்கு மிகவும் விருப்பமான நுங்குகளை இரசித்துத் தின்றார் எனத் தோன்றுகின்றது.

# பனைஇருந்தால்நுங்கூட்டும்செத்தால்கிழங்கூட்டும்

#நுங்கு #பனை #தேவமைந்தன் #பனங்கிழங்கு #palmira #nungu #Roots

No comments: