21.7.17

வம்ப மழையில் நனைந்தவை கம்பிகள் மட்டுமே!

நாட்டு ஓட்டு வீட்டின் நடுவில்
தொட்டிக் கட்டு வீட்டின் உள்ளில்
அலம்பிச் சலம்பிப் பெய்யும் மழைநீர் பார்த்தவன்,
அடுக்ககம் ஒன்றின் கூட்டினுள் இருந்தே,
கடுப்புடன் முகிலினம் வேண்டா வெறுப்பாய்
வம்பாய்த் தெளிக்கும் நீரைக்
கம்பிகள் ஊடே காணுகின் றேனே.
- தேவமைந்தன்
ஆடி ௫ வெள்ளிமாலை
[2017\07\21]