5.3.15

என் முகநூல் பக்கத்திலிருந்து மூன்றே துளிகள்

"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்." - உலகநாதனார். இதற்கு, புலவர் குழந்தை அவர்கள் உரை:- "ஒருவர் மேலும் குற்றம் சொல்ல வேண்டாம்... யார் மீதும் குற்றங் கூறக் கூடாது."
# Never blame anybody. - Ulaga Needhi (a didactic literature in Tamil)

எந்தப் பிரச்சினை ஆனாலும் ஒத்திப்போடாதே. சாட்சிக்காரனை நயந்து கொள்ளாமல், சண்டைக்காரனைச் சந்தி. வாய்விட்டுப் பேசு. அவன் பிரச்சினை என்ன என்று கேள். முடிந்தால் தீர்த்து வை. இல்லாவிட்டால் 'bye' சொல்லிவிட்டு வந்துவிடு. - என்று அறிவுறுத்திய தந்தை சொல்லைக் கடைப்பிடித்தே சோதனை பல வென்றேன்..
'Go to the centre. Never compromise. Talk. Win. If you couldn't have chance to talk, BID GOOD BYE to the gentleman. Never turn back. Go on.' - Dad Mr. P.K. Annan

"தெரியாததைத் தெரிந்தது போலப் பேசுவது உமாருக்கு வெறுப்பையே விளைத்தது. அறியாமையினூடே படாடோபமான வார்த்தைகளைப் பேசி நாம் நடிக்கிறோம்." எஸ். வையாபுரிப் பிள்ளை(1951) பாரசிகப் பாவலன் உமர்கயாம் குறித்து.

3 comments:

Michaelpillai said...

முற்றிலும் உண்மையே.

Michaelpillai said...

முற்றிலும் உண்மையே

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

நன்றி அல்விற் :-)