24.8.11

அன்புள்ள நண்பருக்கு வணக்கம். புள்ளுவக்குடி பள்ளிக்கட்டடத் திறப்புவிழவைப்பற்றிய உங்கள் பதிவைப் பார்த்து மகிழ்ந்தேன். மகிழ்ச்சி. நம் மக்கள் பயன்பெற அவர்கள் இபப்டி உதவுவது சந்தோஷமாக உள்ளது. * தற்செயலாக உங்கள் பதிவில் பேராசிரியர் வெங்கடராமன் கட்டுரையை ஒட்டி யாரும் எழுதவில்லை என்கிற பதிவையும் பார்த்தேன். வெங்கடராமன் நூல் பற்றி திண்ணையில் நான் விரிவாகவே எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட பிறகுதான் ஆவுடை அக்காள் பாடல்தொகுப்பை வாங்கிப் படித்துவிட்டு, அதையொட்டி ஒரு விரிவான க்ட்டுரையை எழுதியிருந்தேன். அக்கட்டுரை உங்கள் நூலகம் இதழில் அப்போது வெளிவந்தது. அதன் இணைப்பு அப்போது கீற்று இணைய தளத்தில் இருந்தது. இன்னும் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஓய்விருக்கும்போது நீங்கள் ஒருமுறை ப்டித்துப் பாருங்கள். * அன்புடன் பாவண்ணன்

No comments: