20.12.10

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!

ஒருங்குறி(யூனிகோடு) என்றழைக்கப்படும் ஒருங்குகுறியில் இப்பொழுது நிகழ்த்தப்பட்டிருக்கும் கரவுவினை குறித்ததொரு தெளிவான கருத்தாடலை முன்வைத்திருப்பது - "கிரந்தக் கலப்பு : கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!" என்னும் புதிய கட்டுரை ஆகும்.
இதனைப் படைத்தவர் தமிழநம்பி ஐயா.
தமிழ் மொழி இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவர்; தூயதமிழியக்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்குத் தோள் கொடுத்தவர். சொல்லிக்கொண்டே போகலாம் இவர்தம் வினைப்பாட்டுப் பெருமைகளை. ஐயா விரும்பமாட்டார்.
தூய தமிழ்த்தொண்டுள்ளம் வாழ்க!
நற்றமிழ் 20சக, சிலை - 16.12.2010 இதழில்[பக்கங்கள் 7-10] இவ்வரிய கட்டுரை வெளிவந்துள்ளது.
தமிழநம்பி ஐயாவின் வலைப்பதிவான http://thamizhanambi.blogspot.com/ இலும், நமது இந்த வலைப்பதிவிலும் தேவமைந்தன் வலைப்பதிவான http://httpdevamaindhan.blogspot.comஇலும்/ இக்கட்டுரை இடுகை பெறுகிறது.
தொலைபேசி வேண்டுகொளுக்குச் செவிசாய்த்து, கட்டுரை அனுப்பிய தமிழநம்பி ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றி.
For further details view:

No comments: