27.8.05

உங்கள் தெருவில் ஒரு பாடகன் [1976]

நானொரு பாட்டுப் பாடவந்தேன் - அதை நலமிகு முறையில் பாடிநின்றேன் நான் பாடிய பாடல் பலரும் கேட்கும் பாக்கியம் பெறவில்லை - ஆம் பாக்கியம் பெறவில்லை [நானொரு... தெருக்கள் கூடும் சந்திகளில்நான் தெளிவாய்ப் பாடிநின்றேன் உமட்டும் சாக்கடை ஓரம்நின்றும் உண்மையைப் பாடவந்தேன் - ஆம் உண்மையைப் பாடவந்தேன் [நானொரு... நான் பாடும்பாடல் பாடியபின்னால் எனக்கே சொந்தமில்லை வானில் பாடித்திரியும் பறவைகளாலே யாருக்கும் தொல்லையில்லை - ஆம் யாருக்கும் தொல்லையில்லை [நானொரு... தோப்பினில் மாங்குயில் கூவிடுமே! அது கேட்பவர் புகழ்ச்சியை நாடிடுமோ? இங்கே சிலநாள் பாடிடுவேன் - பின் எங்கோ சென்று மறைந்திடுவேன் [நானொரு... (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976)

1 comment:

நளாயினி said...

கவிதையில் உயிர்ப்பு இருக்கிறது. கவிஞனின் மனசில் இல்லையே? ஏன்? பாராட்டுக்கள்.