10.9.18

*காந்திக் கணக்கு* - தலைகீழாக மாற்றிவிட்டார்கள்!

காந்திக் கணக்கு
----------------------------
காந்தி கடைசிவரை சில்லறைச் செலவுகளை எண்ணி எண்ணி கணக்கு வைத்திருந்தார். பிறரிடமும் அதேபோல பைசாக்கணக்கு கேட்டார். கடைசி காங்கிரஸ் தொண்டனும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அவரது கணக்கு கேட்கும் போக்கில் மனம் வெறுத்து 'மகாத்மாக்களை வழிபடலாம். சேர்ந்து பணியாற்ற முடியாது' என்று கணக்குப்புத்தகங்களை அவர் முன் வீசிவிட்டு ராஜாஜி வெளியிருக்கிறார். ஆனால் 'ஒரு பைசா என்பது பல லட்சம் ரூபாயின் முதல் அலகு' என காந்தி எண்ணினார். ...ஒரு விஷயத்தைச் செய்ய மிகச் செலவுகுறைந்த வழி என்ன என்பதையே எப்போதும் அவர் கவனித்தார்.
- இன்றைய காந்தி.

7.9.18

என் இணையதள குரு.
Professor Pas Pasupathy
Professor Emeritus,
University of Toronto.
Canada.


"தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கி கும்பிட்டார். அதுவே இந்தியா முழுக்க சென்று சேர்ந்த செய்தி."

24.4.18

இன்று காலை 09:10மணிக்குத் தான் விழித்தேன். நேற்றிரவு 9 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். குப்பை வண்டிக்காரம்மா விசிலடித்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். குப்பைப்பையை எடுத்துக்கொண்டு கோலக்கார அரங்கசாமி நாயக்கர் பள்ளி வரை சென்று அங்குள்ள பெரிய குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஆட்டுக்கறிக் கடையைத் தாண்டியிருப்பேன். அதனருகில் உள்ள கடையிலிருந்து புட்லாயி அம்மா, "என்னப்பா இந்த வேக்காட்டுல..." என்று கடைக்குள் கூப்பிட்டு விசிறிக்கொள்ள பனைஓலை விசிறி கொடுத்தார். அப்போது பாரத்து, கோவை நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர், நான் தூங்கிய 12 மணிக்குள் பலமுறை ஃபோனடித்தாராம். விவரம் சொன்னேன். " பசுபதி.. இந்த வயசில் இவ்வளவு தூக்கம் கூடாது.. உங்க அண்ணி இப்படித்தான் உறங்கி இறந்து போனாங்க.." என்றார். புருவத்தில் வினாக்குறியுடன் புட்லாயி அம்மா "என்னவாம் அப்பா?" என்றார். "ஓண்ணுமில்லை'ம்மா" என்று கிளம்பினேன். 'பத்திரம் பத்திரம்' என்று அனுப்பினார். குப்பென்று வியர்த்தது. சட்டையெல்லாம் தொப்பலாக நனைந்து போனது. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் படிக்கட்டில் ஆறுதலாக உட்கார்ந்து.. அப்புறம் பொடிநடையாக வழக்கறிஞர் அன்பழகன்(பி.ஜே.பி.) கடைவரை நடந்து, மொட்டான் போடச்சொல்லி உட்கார்ந்து ஃபோன் விவரம் சொல்ல சிரித்தார். "நல்லாத் தூங்குனாத்தான் உடம்பு நல்லாருக்கும் சார்..." என்று சொன்னார். பி.ஜே.பி. பரப்புரை படம்போட்ட விசிறிகள் சிலவும் வாழைப்பழங்களும் தந்தனுப்பினார். வீட்டுக்கு வந்து இரும்பு கேட்டைத் திறந்து பார்த்தால், அன்பழகன் வெளியே நின்று பார்த்துக்கொண்டே இருக்கிறார். அன்பு.
#இருக்கும்போதே அக்கம்பக்கம் ஊரார் அன்பு செலுத்த வாழ்ந்துவிட வேண்டும். செத்தபின் இறுதிப்பயணத்தின்போது தலைக்குப் பின் கடனே என எத்தனைப் பேர் வந்தாலென்ன.. வராவிட்டாலென்ன?
#lifebeforedeath

22.4.18

பிஞ்சுக் குழந்தையின்
பஞ்சுப் பாதங்கள்
நெஞ்சில் உதைத்தன.
சொர்க்கம் கண்டேன்.
- தேவமைந்தன்
19.4.2018

23.3.18

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கீன்
தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
காலச்சுவடு பதிப்பகம், திசம்பர், 2017.
----------------------------------------------
அசல் நாவல் வெளியீடானதற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின் காலச்சுவடு புண்ணியத்தாலும் எஸ்.ஆர். கிருஷ்ணமுர்த்தி மொழியறிவுழைப்பாலும் இந்த அற்புதமான நாவலின் குறும்பதிப்பு வாசகர் கையில்.
இந்தக் கதையைச் சொல்லி வரும் ஷுட்டோவ் ரஷ்யநாட்டினன். பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தவன். முதிர்நடுவயதுக்காரன். எழுத்தாளன். பிரஞ்சில் எழுதுபவன். முப்பதாண்டுகளுக்குமேல் பிரான்சில் இருந்து எழுதிவாழ்கிறான். தற்செயலாக மகள் வயதே உள்ள லெயா என்ற பெண்ணுக்கு உதவப்போய் அவளுடைய காதலனாகவுமாகிறான். வேறுவிதத்தில் சொன்னால், லெயா அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள். தன் வயதுக்குத் தக்க உடல்வளம் வசதியுள்ள இன்னொருவன் கிடைக்கும் வரை. இவனுக்கேற்ப வாழ்தலின் தருணங்களில், மற்ற ரஷ்ய எழுத்தாளர்களைவிட செக்காவ்வின் எழுத்துகள் குறித்த விவாதங்களில் ஈடுபடுகிறாள். தன்னை அறிவுத்திருப்திப்படுத்த லெயா இப்படியெல்லாம் பேசுவதை அறியாத முதிர்மூளையால் நெருடலாகவும் தன்னொத்த எழுத்தாளர்களிடம் விவாதம் பண்ணுவதுபோலவும் அவளிடம் பேசி லெயாவின் வெறுப்பையும் சந்திக்கிறான். செக்காவ் சிறுகதைக்குக் கூறிய முடிவிலக்கணத்தைக் காதல் உறவின முறிவுக்கு லெயா மேற்கோள் மொழியும் அளவு, காரணமாகிக் கொள்கிறான் ஷூட்டோவ். அவன் பெயரையே லெயா விமர்சனத்துக்குட்படுத்தும் அளவு வெறுப்பேற்றி விடுகிறான். விளைவு காதல் நிரந்தரமுறிவு. புதிய இளங்காதலனோடு லெயா பிரிந்துபோய்விடுகிறாள். மனம் முறியும் வேளையில், வழக்கமாக எல்லோருக்கும் வருவது போல, பூர்விக நாடும் அந்நாட்டின் பூர்விகக் காதலி யானாவும் ஷுட்டோவின் மனவெளியில் செறிந்து நினைவுக்கு அழுத்தமாக வருகிறார்கள். யானாவுக்குப் போன் பேசிவிட்டு, விமானம் பிடித்து ரஷ்யாவுக்கு மீள்கிறான் கதைசொல்லிவரும் ஷுட்டோவ். தோராயமாக முப்பத்தோராண்டு காலஇடைவெளிக்குப்பின் ரஷ்யாவின் இருத்தல் நிலைகள் அமெரிக்க வாழ்நிலைபோல நவீனமாயிருத்தலுக்கும்; பழைய காதலி யானா பெரிய புள்ளியாகி உள்ள நிலைமைக்கும்; அவள் மகன் விலாத் அத்தருணம் பொருளாதார & புகழ் வெற்றியுடன் கூடிய பதிப்பகத்தானாக நிலைநிற்றலுக்கும் ஈடுகொடுக்க ஏராளமான 'சிலுவைப்பாடுகள்' படுகிறான். யானா அவனை ஏற்க மறுக்கவில்லை. ஆனால் அன்னியனாகத் தன்னுடன் ஒருபக்கம் வாழ்ந்திருக்க விடுகிறாள். அவள் சகவாச தோஷமும் பிரபலமும் பன்முகப்பட்ட அரசியல் மேட்டுக்குடித் துறுதுறுப்பும் ஷுட்டோவை வாயடைத்துப்போக வைக்கின்றன. பரிதாபத்துக்குரிய அவனைப் பக்கத்திருத்தி, நேரமொதுக்கி, நவீன புத்தகப்பதிப்பின் உயிர்நிலையான சந்தைப்படுத்தலைப் 'பழம்பெருச்சாளி'யாகவே நீடிக்கும் ஷுட்டோவ் அறியுமாறு கற்பிக்கிறான் விலாத். அந்த இடங்கள் எல்லாம் அட்டகாசம் போங்கள். எனக்கு எஸ்.ரா. தொடர்பான சென்னை புக்ஃபேர் அடுத்த மனுஷ்யபுத்திரனனின் இராயல்டி - விளக்க - ஒளிக்காணல்கள் பம்மிப்பம்மி ஓர்மைக்கு வந்தன. ஏனோ விலாத்தையும் நண்பர் மனுஷ்யபுத்திரனாகக் காண முடிந்ததற்கு ஆந்திரேயி மக்கீன்தான் காரணம். சரி விடுங்கள். விலாத்துக்கு இன்னொரு பொறுப்பு. பென்ஷன் வாங்கும் செவியடைத்த & பேசாதவொரு முதியவரைக் கண்காணித்தல். தொடர்பான நுட்பங்களுக்குப் போக வேண்டாம். படித்துத் தெரிந்து கொள்ளட்டும். விலாத்தாலும் அவன் தாய் யானாவாலும் முதியோரில்லத்துக்குத் தாட்டிவிடத் திட்டமிடப்படலினூடு அவர்களோடு "இருக்கிற" முதியவர்... ஷுட்டோவுக்கு மட்டும் செவிகேட்டு வாய்பேசுகிற, ஒருமணித் தியாலத்தில் தன் சாதனை வாழ்வை ஷுட்டோவுக்குச் சொல்கிறவர். அந்த அற்புதத் தருணங்களை நமக்கு உண்டாக்குபவளான விலாத்தின் காதலிக்கு நன்றி. வோல்ஸ்கி என்ற அந்தப் பெரியவர் பட்ட பாடுகள் அமரமானவை. இரண்டாமுலகப் போரில், லெனின்கிராட் என்ற பூர்வப்பெயர் மாற்றப்பட்ட செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் முற்றுகைக் காலமான, மனிதநேயம் மாய்ந்து இருபது லட்சம் மக்கள் மாய்க்கப்பட்ட காலகட்டத்தில் போர்க்களத்தில் நிராயுதபாணியாகிவிட்ட ஜெர்மானிய இளைஞனை அமைதியாகப் போகவிடுதலாகட்டும்; அதையடுத்த தூய்மையரசியல் வெறியுடன் அப்பாவிகளைச் சிறைப்படுத்தும் - வதைப்படுத்தும் - சுட்டுக்கொல்லும் 'The Great Purge' என்றழைக்கப்பட்ட தலைவர் ஸ்டாலினின் கொடுமை ஓங்கிய காலகட்டமாகட்டும் ~ போரிசைக் கலைஞராகவும் போராலும் 'பர்'ஜாலும் வாடிவதங்கிச் சீரழிந்த மனிதர்களைக் கொண்டும் அனாதை மற்றும் மாற்றுத் திறன்கொண்ட ஏதிலிப்பிள்ளைகளைக் கொண்டும் நாடகங்கள் இசைநிகழ்ச்சிகள் நடத்திய பெருஞ்சாதனையாளர். மானுடக் கொடுமையின் வகைமாதிரிகள் எல்லாவற்றுக்கும் ஆளான, அனாதைப் பிள்ளைகளைக் காப்பாற்ற இராணுவத்தாருக்கு வேசியாக மாறி, தன்னுடலை சிதைவுக்குட்படுத்திக் கொண்ட, லெனின்கிராட் முற்றுகைப் போரிலும் பின்தொடர்ந்த 'great purge'இலும் 'மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று'ப் போன்ற மென்மையும் பெண்மையும் மேன்மையும் இயல்புகளாகக் கொண்ட, மிலா என்ற 'அரியவகை மானுட'ப் பிறவியை ஆன்ம - இயற்கை - வான ரீதியாகக் காதலித்தவர். வோல்ஸ்கி ~ லியா காதல் அற்புதமானது. தெய்வீகக் காதல் என்று மட்டும் கொச்சைப்படுத்தக் கூடாதது. இவ்விருவரையும் நேசிக்கும், இவ்விருவராலும் நேசிக்கப்படும் சிவப்பு முடிச்சிறுவனை மறக்க முடியுமா? அவர்கள் வாழப்புகும் 'இஸ்பா' வீட்டின் சூழலைத்தான் மறக்க முடியுமா? அரசியல் தூய்மைப்படுத்தும் காலத்தில் வோல்ஸ்கியால் பயிற்றுவிக்கப்படும் போரனாதைச் சிறுவர்களுக்குக் கொடுக்கப்படும் கடும் ஒத்திகைக்குப்பின்னான நாடகத்தை கல்வி ஆய்வாளரான 'மூக்கொழுகும் தடிச்சி'யானவள், வர்க்கவோர்மையற்றது என்று கத்திக் கூப்பாடு போட்டு - பின்னர் இரசிக்கும் நிலைப்பாடுகளைப் பாராட்டவா? விளைவாக வோல்ஸ்கிக்குக் கிட்டும் விருதையும் பதவியையும் அவர் துச்சமென மதித்து ஏற்காமல் விட்டு விடுவதைச் சொல்லவா? ஸ்டாலின் இறப்புக்கு முந்திய பத்தாண்டுப்போதில்(decade) தாமிருவரும் சிறைப்பட்டபோது சுமத்தப்பட்ட இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளையெல்லாம் தானொருத்தியே ஏற்று உலகை நீத்தாலும்; உருப்படியான கலைத்தொண்டு ஆற்றவல்ல வோல்ஸ்கி என்ற காதலனைக் குறைந்த தண்டனை பெறவைத்துக் காப்பாற்றும் மிலா என்ற அந்தக் காதலி/தாய்/வேசி/தியாகி ஆனவள், மெய்யான வாசகரின் நெஞ்சைத் தன் தியாகக்குருதியால் சேற்றுழவு செய்வது நிச்சயம். இதையெல்லாம் கேட்டதோடு நில்லாமல், விலாத்துக்கும் யானாவுக்கும் மறைத்த அப்பொன்னிரவுப் பொழுதில், நன்றி மறவாமல், ஒரு விடாக்கண்டனான டாக்சி ஓட்டுநரைக் கெஞ்சிக் கூத்தாடி, பெரியவர் வோல்ஸ்கியின் இறந்தகாலக் காதல் குறியீடான வானத்தின்கீழ் உயிர்ப்புடன் ஓடும், பெரியவர் வோல்ஸ்கி 'லெனின்கிராட் முற்றுகை'யின்போது நாடக நிகழ்ச்சிகளை நடத்திய, அந்த ஆற்றுக்கு அழைத்துச் சென்று, அவரை ஆதனாரப் பாட்டுப் பாடவைத்து, "அந்தப் பாட்டுத்தான் அவன் பார்த்த எல்லாவற்றுக்கும் அடிப்படை அர்த்தத்தைத் தருவதை" உள்வாங்கி, மீண்டும் அவரை விலாது இருந்த இடத்துக்கே போய்ச் சேர்க்கிறான் ஷுட்டோவ். வம்பனான அந்த டாக்சி ஓட்டுநருங்கூட அந்தச் சம்பவத்தால் வாழ்வின் மெய்யான அர்த்தத்தை நன்றியுடன் அனுபவிக்கிறான். இதன் பின்னென்ன... முதியோரில்லத்துக்கு பெரியவர் 'தாட்ட'ப்படுகிறார். ஐந்தே நிமிடத்தில் தன் பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ஷூட்டாவும் வேளியேறுவதை அவன் பழைய காதலியின் மகன் விலாத், தடுப்பதில்லை.
ஷுட்டோவ் பிரான்சுக்கு விமானத்தில் திரும்புகையில் 'வோல்ஸ்கி வாழ்ந்த சகாப்த'தத்தை, பயங்கரமான அந்த சோவியத் காலகட்டத்தைத் தன் எழுத்தாள நெஞ்சில் சுமக்கிறான். பின்வருமொரு செப்டம்பர் மாதத்தில் ரஷ்யாவுக்குத் திரும்பும் ஷுட்டோவ், வோல்ஸ்கி சேர்க்கப்பட்ட ' முதியோர் இல்லத்'துக்குப் போகிறான். செயிண்ட்பீட்ர்ஸ்பர்க்கில் அதன் முந்திய பெயரான லெனின்கிராட் கொடிய ஊழியின் பிரதிநிதியான வோல்ஸ்கி இறந்துபோனதை பிரான்சிலேயே அறிந்த பிறகுதான் போகிறான். முதியோர் இல்லத்தின் கல்லறைகளில் வோல்ஸ்கியினதைத் தேடுகிறான். கல்லறை எதிலும் பெயர் முதலிய விவரமேதுமில்லை. காவலாளி காட்டிய சமாதிகளில் ~ 'u.w.' 'unknown woman' 'முன்பின் தெரியாத பெண்'; 'u.m.' 'unknown man' 'முன்பின் தெரியாத ஆண்' ~~ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மனித வாழ்க்கை அத்துணைப் பரிவற்று சுருக்கப்பட்டிருந்தமை ~ ஷுட்டோவுக்குச் சொல்லொணா வருத்தத்தைத் தந்தது. வோல்ஸ்கிக்கு அவர் அனைத்து விவரங்களுமடங்கிய நினைவுத்தூண் வைக்க விரும்பியதைப் பணியாள் ஒருவனிடம் ஏற்பாடு செய்து, அடுத்தநாள் அதற்கு அவன் ஒப்புதலும் தந்த பிறகு ஷுட்டோவ் யோசிக்கிறான்.... அப்படியே முழுவிவரங்களைப் பதித்தாலும் 'முன்பின் தெரியாத ஒருவன்' என்ற பதத்தைவிட என்ன அதிகமாகப் பயனாகப் போகிறது? ... ஷூட்டோவ் எழுந்து வெளியேறும்போது, எழுதப்படவேண்டிய உரிய வாசகங்கள் மனத்திரையில் தோன்றுகின்றன. " 'அடையாளம் தெரியாத பெண்களும்' 'அடையாளம் தெரியாத ஆண்களும்' காதலித்தனர், ஆனால் அவர்கள் சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லப்படாமல் போய்விட்டன..."
எல்லாம் முடிந்து வீடுதிரும்பும்போது,
பின்லாந்து வளைகுடாப் பனிமூட்டம் வழியே ஒரே பார்வையில் அவன் அதுவரை கண்டிராத அகண்ட வானவெளியைப் பார்க்கிறான் ஷூட்டோவ்.
அது வெறும் பெரும் அகண்ட வான்வெளியல்ல. தங்கள் பிரிவுகளின்போது உற்றுப் பார்த்து வோல்ஸ்கியும் அவர் காதலி மிலாவும் பிரிவுத்துன்பமற்றுக் கலந்த வானம்தான்.
-------------------------------------------
தேவமைந்தன்
Puducherry Annan Pasupathy (Facebook)


21.7.17

வம்ப மழையில் நனைந்தவை கம்பிகள் மட்டுமே!

நாட்டு ஓட்டு வீட்டின் நடுவில்
தொட்டிக் கட்டு வீட்டின் உள்ளில்
அலம்பிச் சலம்பிப் பெய்யும் மழைநீர் பார்த்தவன்,
அடுக்ககம் ஒன்றின் கூட்டினுள் இருந்தே,
கடுப்புடன் முகிலினம் வேண்டா வெறுப்பாய்
வம்பாய்த் தெளிக்கும் நீரைக்
கம்பிகள் ஊடே காணுகின் றேனே.
- தேவமைந்தன்
ஆடி ௫ வெள்ளிமாலை
[2017\07\21]

20.7.17

சுயத்தைத் தேடும்
அயலான வாழ்க்கை.
கிடைக்காதென்று
தெரிந்துவிட்டதை
விடாது தேடும் விளையாட்டு.
வாழ்க்கை வினாக்களால் மட்டும்
நிரம்பவில்லை.
விடைகளின் மாறுவேடங்கள்
அல்லவா வினாக்கள்???!!!?!
அந்தத்தில் தொடங்குமாம்
ஆதி.

- தேவமைந்தன்

15.6.17

பாட்டிமார்களும் பேத்திமார்களும்

'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்ற நாவலை என் முனைவர்ப் பட்ட /Ph.D ஆராய்ச்சிக்காலத்தில் ஆழமாக வாசித்தேன். எழுத்தாளர் த. ஜெயகாந்தன் குறித்த ஆய்வு. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். (தரமணி, அடையாறு, சென்னை). முதன்மை வழிகாட்டி: முனைவர் தா.வே. வீராசாமி. மேற்பார்வையாளர்கள்: முனைவர் இரா. இளவரசு. முனைவர் ஏ.என். பெருமாள். ஆய்வேடளித்த நாள்: 24.4.1986. ஏன் 'பாட்டிமார்களும் பேரன்மார்களும்' என்ற தலைப்பைத் தராமல், 'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்று தந்திருக்கிறார் ஜெ. என்று குழப்பம். அவரையே கேட்கலாம் என்றால் ஏற்கெனவே தன் ஆய்வாளர்களைக் கொச்சைப் படுத்தியிருந்தார் என்பதால் கேட்கவில்லை. பகுதிநேர ஆய்வாளர் என்பதாலும் கோவையிலிருந்தே நட்பு இருந்ததாலும் என்னை அன்புடன்தான் நடத்தி வந்தார். தன் காரில் அழைத்துச் செல்வார். தன் கையெழுத்துப்படிகளைக் காட்டுவார். இன்னபிற. ஆனாலும் கேட்கவில்லை. எங்கள் மகள்வழிப் பேத்தி பிறந்து வளர்ந்து தன் பாட்டிக்குத் தோழிபோல் நடந்துகொள்வதைப் பார்க்கும்பொழுதுதான் ஏன் 'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்ற தலைப்பை அவர் வைத்தார் என்பது துல்லியமாகப் புரிகிறது. எல்லார் வீடுகளிலும் பாட்டிமாரும் பேத்திமாரும்தான் 'அன்னியோன்யம்' போல!..

photo courtesy: www.udumalai.com

#Jeyakanthan
#த.ஜெயகாந்தன்
#ஜெயகாந்தன்

புதிதில்லை!

எதுவும் புதிது இல்லை.
துருவங்கள் இரண்டன்
இடைவெளி வாழ்க்கை.
ஆடியது அடங்கும்.
அடங்கியது ஆடும்.
நேசம் மட்டுமே
எஞ்சும் அருவமாய்.
-தேவமைந்தன்
2017/06/15

9.5.17

காலத்தால் அழியாத 'சுதந்திரம்' ஏடு குறித்த தோழர் எல்லை.சிவக்குமாரின் இதழியல் ஆய்வுப் புத்தகம்

காலத்தால் அழியாத சுதந்திரம்- ஒரு இதழியல் ஆய்வு -எல்லை. சிவக்குமாரின் புத்தகம் குறித்து எழுதும் வாய்ப்பு எனக்கு இப்பொழுதுதான் கிடைத்தது. தோழர் எல்லை. சிவக்குமாரை முதலியார்ப்பேட்டை ஜீவானந்தம் மேனிலைப்பள்ளிதான் எனக்குத் தோழர் என்ற அடையாளம் காட்டியது. என் பத்தாம் வகுப்புப் படிப்பிறுதியை ஒட்டி சென்னையில் வண்ணாரப்பேட்டை நிகழ்வுக்கு வந்த ஆசான் தோழர் ப.ஜீவா அவர்களைச் சந்தித்துப் பழகிய உணர்வை, எல்லை. சிவக்குமாருடனான தோழமை எனக்கு 1983 முதல் 2017 இன்று வரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.
தோழர் வ.சுப்பையா அவர்களுக்குப் புதுவை மக்கள் மேலிருந்த அக்கறையும் அன்பும் ஆர்வம் மற்றவர்களுக்கு வாய்ப்பது அரிது. சார்த்ர் சொன்னதுபோல், மக்கள் தாங்கள் பிறந்த பொழுதை அடுத்து வரும் சிறார்ப் பருவத்திலேயே சுதந்திர உணர்வை வெளிப்படுத்துவது குறித்து வ.சு. வுக்குக் கருத்து இருந்தது என்பது, வெள்ளாழ வீதி, 7ஆம் எண் இல்ல மொட்டைமாடிப் பகுதியில் அவர் என்னிடம் பேசியிருந்த பொழுதே எனக்குத் தெரியும். இளம் வயதிலேயே சுதந்திர உணர்வு வளரும் வேகத்திலேயே - பெற்றோர்களாலும் ஆதிக்கச் சமூகத்தாலும் ஒடுக்கப்படலாகிறது. வேகம் இயல்பானது. சுதந்திரத் தாகம் இயல்பானது. அது அடக்கப்படும் பொழுது தீவிரம் ஆகிறது. அதை நிதானப்படுத்தத்தான் படிப்பும் நூல் வாசிப்பும் என்று என்னிடம் சொன்னார் வ.சு. கண்டமங்கலம் வள்ளலார் மேனிலைப் பள்ளி (அப்பொழுது உயர்நிலை) 1970 தொடக்கத்தில் தோழர் வ.சு. தலைமையில் “தமிழில் முற்போக்கு இலக்கியம்” குறித்து நான் சிறப்புரையாற்றியது தொட்டு அவர் என் தந்தை பர்மா இரங்கூன் பி.கே.அண்ணாருக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம். என் துணைவியார் கலாவதிக்கும் சொந்தம். தற்காலிகமாக வந்தவன், புதுவை மண்ணுடன் பிணைக்கப்பட்டதும் மண்ணின் மகளைத் திருமணம் செய்து கொண்ட வாழ்வை நிலைப்படுத்தியதும் தோழர்.வ.சுப்பையாதான். மனித வளர்ச்சிக்குரிய முதல் நிபந்தனையே சுதந்திரம் என்ற ‘விவேகம்,’ மக்கள் தலைவரும் தோழருமான வ.சுப்பையாவுக்கு மிகுந்திருந்தது. அதனால்தான் ‘சுதந்திரம்’ இதழைத் தொடங்கினார். பிரெஞ்சிந்தியப் போராட்டத்தின் வித்தும் அவர்தான். விருட்சமும் அவர்தான். புதுச்சேரியை அண்ணல் காந்திக்கும் அண்ணலுக்குப் புதுச்சேரியையும் நேரடியாக அறிமுகப்படுத்தியவர் தோழர் வ.சு.தான்.
புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு ஆர்வம் தோய்ந்த ஈடுபாட்டை ஏற்படுத்தித் தந்தவரும் இவரே. குயிலாப்பாளையம் போன்ற தமிழக பிரெஞ்செல்லையில் வாழ்ந்தவர்களில் இன்னும் எஞ்சி வாழும் மக்கள் - வ.சு. அவர்களின் விடுதலைப் போர் உத்திகளையும் தலைமறைவு வாழ்க்கையின் அதிசயங்களையும் இன்றும் என்னிடம் சொல்லி வருகின்றனர். இடையார்பாளையம் ஆலைக்காரத் தோழர் இராமு அவர்களுள் ஒருவர்.
தன்னுடைய இருபத்து மூன்றாவது அகவையில் இந்தச் ‘சுதந்திரம்’ என்னும் ஆலமரத்துக்கு வித்திட்டவர் மக்கள் தலைவர் வ.சு. தன்னொத்த புதுவை மக்களின் அடிமை வாழ்க்கையை வெறுத்த சுதந்திரத்தாகமே அவரை 1929ம் ஆண்டு முதல் பற்பல சமூக இயக்கங்களை தோழமை இயக்கங்களை இயக்க உந்திற்று. அவற்றை நூலில் பரக்கக் காணலாம். வாய்ப்பேச்சால் மக்களை ஒருங்கிணைத்ததன் மாற்று வடிவப்பதிவாக இதழ் தேவைப்பட்ட பொழுதுதான் ‘சுதந்திரம்’ மாத இதழ் உருவானது. 1934ம் ஆண்டில் வெளிவந்த இத்தகைய ‘சுதந்திரம்’ மூன்று இதழ்களைத்தான் நம் தோழர் எல்லை சிவக்குமார் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வுக் கைநூலை உருவாக்கியுள்ளார். ‘சுதந்திரம்’ -- விரிவான ஆராய்ச்சி செய்ய இனிவரும் காலங்களில் முற்படும் தோழர்களுக்கு இந்நூலே கைநூலாகவும் ஆய்வுத் தடத்தின் ஆரம்பச் சுவடாகவும் புலப்படும்.
அரும் முயற்சியில் இந்த ஆய்வு உருவாக்கப்பட்டது என்ற ஒற்றை வரியில் தோழர் எல்லை.சிவக்குமாரைக் சுருக்கிவிட நான் விரும்பவில்லை.
தன்னையே இளைஞன் வ.சு.வாக வைத்து உணர்ந்து வ.சு.வாகி சுதந்திரம் (1934+) தொடங்கி அவ்வாண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பறிமுதலுக்கு உட்படாத ஜூன் செப்டம்பர் நவம்பர் ஆகிய மூன்றிதழ்களைப் பற்றிக் கொண்டு அவற்றைக் கருவூலமாக்கி ஆய்வு தொடங்குகிறார் தோழர். (1934 ஜூலை, ஆகஸ்ட் சுதந்திரம் ஏடுகள் பிரிட்டிஷ் அரசினால் பறிமுதல் செய்யப்பட்டவை).
இந்த இதழ்களில் மகாகவி பாரதியின் படைப்புகள், யோகி சுத்தானந்த பாரதியின் படைப்புகள் - தொடர்ந்து வெளியாக்கப் பெற்றன. தவிர, பரலி சு.நெல்லையப்பர், சங்கு சுப்பிரமணியன், டி.எஸ். அவினாசிலிங்க செட்டியார் முதலானவர்களின் சீரிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
1935லிருந்து வார இதழாக ‘சுதந்திரம்’ வரத் தலைப்பட்டது. பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையேடான ‘ஹுமானித்தே’ இதழில் வெளிவந்த மார்க்சியக் கட்டுரைகளும் தொடக்கத்திலேயே ‘சுதந்திர’த்தில் வெளியாயின. தமிழில் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ தான் என்கிற ஆய்வை முனைவர் ‘மலையருவி’ நா.இளங்கோ வெளிப்படுத்தியுள்ளார்.
தோழர் அமீர் ஹைதர்கான் என்ற உலகப் புரட்சியாளர்களுடன் நேரடிப் பழக்கம் கொண்ட, உலகக் கம்யூனிஸ்ட் கொள்கையாளர்களுடன் கருத்தாடல் ஏற்ற, விளைவாக ‘மூன்றாவது அகிலத்தின்’ செயற்பாட்டாளராக வி.இ.லெனின் அவர்களால் ஆக்கப்பட்ட அமீர் ஹைதர்கான், ‘சங்கர்’ என்ற புனைபெயருடன் செயல்படத் தீர்மானித்த சில நாள்களில் தோழர் வ.சுப்பையாவைச் சந்தித்து, புதுவையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அவருடன், அதாவது தோழர் வ.சு.வின் ஒப்பரிய ஒத்துழைப்பால் தொடங்குகிறார். இன்னும் துல்லியமாகச் சொன்னால் சங்கர் (எ) அமீர் ஹைதர்கான் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்தபொழுது, 1911ஆம் ஆண்டு தோன்றி, கலவைக் கல்லூரியில் படிக்கும் பதின்பருவத்திலேயே 17ஆம் வயதிலேயே சுதந்திரத்துக்காக - மாணவர் உரிமைக்காகப் போராடத் தொடங்கிவிட்ட தோழர் வ.சுப்பையாவைச் சந்தித்து இலக்கில் தடம் பதிக்கத் துணைநிற்கிறார்.
‘தி ஸ்டார் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின்’ பணியினால் கிடைத்த தொகையின் பகுதியைக் கொண்டே ‘சுதந்திரத்தை’ தொடங்கினார் தோழர் வ.சு. 1934ஆமாண்டில் மாத இதழாக வெளிவரத் தொடங்கிய பொழுது ‘சுதந்திரம்’ ஏட்டின் பதிப்பாக, அச்சீட்டாளராக, ஆசிரியராக இருந்த தோழர்.வ.சு., புதுச்சேரி கலாநிதி அச்சகத்தில் இதழை அச்சியற்றியுள்ளார்.
சுதந்திரத் தாயின் உருவகப் படத்துடன் முதலிதழ் தொடங்கியிருந்துள்ளது. மாலை:1 மலர்:1 என்ற எண்ணீடு எத்துணை ஆழமானது.. மாலை என்பது அடிமைக்கானதல்லவே.. பொதுவாக ‘volume’ ‘issue’ என்ற எண்குறியீட்டை இலக்கு விளக்கமாக நிர்ணயிக்கும் முறையிலேயே இதழின் ஆசிரியர் என்ன உட்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து விடலாம் என்பது இதழியல் நூற்பா எண்#1. முதலிதழின் இரண்டாம் பக்கம் சுதந்திரத் தாயின் விளக்கத்தில் “சுதந்திர லட்சியத்தை உலகுக்கே போதித்த பிரான்சின் குடியாட்சியில் இருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளியில் வருகிறாள்’ என்ற பகுதி குறிப்பிடத்தக்கது. 1985இல் வெளிவந்த ‘சுதந்திரம் பொன்விழா மலரில் பாரத அன்னையின் இலட்சியப் பயணம் என்ற பகுதியில் 1934 ஜூன் வெளியான சுதந்திரத்தின் முகப்பட்டைச் சித்திரம் உரிய முறையில் விளக்கப்பட்டுள்ளதைப் படித்துப் பாருங்கள். சுதந்திரத்தின் ஒவ்வோரிதழிலும் பாரதியின் “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம், எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு!” என்ற வரிகள் ‘சுதந்திரத்தின் பிரகடனமாக வெளிவந்துள்ளன. ‘அரசியல் விடுதலைக்கு முந்தியது சமூக விடுதலை’ என்ற கருத்தை முன்வைத்த வ.சு.வின் (சுதந்திரம் தொடக்கக் கட்டுரை) ஆவணக் கட்டுரையில், சமூகத்தின் அத்தனைச் சீர்கேடுகளும் விரிவாக அலசப் பெற்று, அவற்றிலிருந்து மீண்டுதான் அரசியல் விடுதலை பெறவேண்டும் என்ற முடிவும் முன்வைக்கப்பெற்றது. சரி. 1930களின் தொடக்கத்தில் புதுச்சேரியில் பரவலாக விளங்கிய மொழிமதிப்புள்ள பிரெஞ்சிலோ, பாரதியே மதித்தெழுதிய ஆங்கிலத்திலோ தானே ‘சுதந்திரத்தை’ வெளியிடவேண்டும். 1967க்குப் பிறகு தானே பொதுவாக, எல்லோருக்கும் புரியும் தமிழிலும், மறைமலையடிகளார் தொடங்கிவைத்த தனித்தமிழிலும் எழுதுவதும் நாகரிகமானது? மறுமொழியாக முன்னறிந்து தொலைநோக்குடன் தோழர்.வ.சு., 1934லேயே இதழின் மொழிநோக்கை எழுதுகிறார்.
“சுதந்திர உணர்ச்சியையூட்டுவதற்குத் தாய்மொழி வாயிலே தகுந்த முறையாம். ஆதலால் தமிழ் மொழியைப் பேண வேண்டும். அதனால் தமிழன் உள்ளம் பெருகும். தமிழன் அறிவு வளரும். அதற்காக புதைந்து கிடக்கும் நமது பழங்கலைகளைத் தோண்டியெடுத்து அவற்றை இக்காலத்திற்கேற்ற முறையில் திருத்தியமைத்துப் போற்றி வளர்த்தல் வேண்டும். எனவே நமது சுதந்திர லட்சியங்களை மக்களிடையே பரப்புவதற்கான சகல துறைகளிலும் அச்சமின்றி ஈடுபட்டு தொண்டாற்ற வேண்டுமென்ற வீர தாக்கத்துடன் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.”
சுத்தானந்த பாரதி கவிதை, சங்கு சுப்ரமணியத்தின் ‘கழுகுக் கட்டுரை’, சமுத்ர நாராயணன் கவிதை, “தொழிலாளர்களின் திண்டாட்டமும், முதலாளிகளின் கொண்டாட்டமும்” என்ற தோழர் வ.சு வின் மிக முக்கியமான மார்க்சியக் கட்டுரை, சாரணர் இயக்கம் பற்றிய இ.கிருஷ்ணசாமி கட்டுரை, ‘மோலியார் வரலாறு’ (கவியோகி கட்டுரை), இன்னும் பல. நான்காம் ‘சுதந்திரம்’ பாரதி உருவத்துடன் வெளிவந்த சேதியும் விரிவான தரவுகளும்; நேருவின் உருவத்துடன் வெளிவந்த நவம்பர் மாத இதழின் தரவுகள்..- குறிப்பாக கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்ற ‘இந்தியப் பொருளாதார நெருக்கடியின் காரணமும், அதை நிவர்த்திக்கும் வழியும்’ என்ற தலைப்பில் ஆன சென்னைத் தோழர் நா.ராஜன் கட்டுரை குறித்த தரவும் இடம் பெற்றுள்ளது. ரூ.25/- (இருபத்தைந்துரூபா) என்ற அக்காலத்துப் பணமதிப்பிலுயர்ந்த சிறுகதைப் போட்டிப் பரிசும் இந்நூல் காட்டும் தரவுகளுள் முக்கியமானது.
தாகூர் கல்லூரியானது, முன்பு இயங்கிய நகரப் பள்ளியாகிய கலவைக் கல்லூரியில் வகுப்பு நடத்தும் மொழிமுறையில் மாற்றம் வந்தபொழுது தி.அ.ரா. என்பவர், ‘தமிழும் கல்வே காலேஷூம்’ என்ற கட்டுரைவழி பெற்றோருக்குத் தாய்மொழிக் கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய கடமையினை அருமையாக வலியுறுத்தியுள்ளார். எண்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எழுதப்பட்ட காலகட்டத்தை விட மிகவும் பொருந்தக்கூடிய கட்டுரை அது. தி.அ.ரா. என்ற இத்தகைய சிந்தனையாளர் – தொலைநோக்காளர், நமக்கு முன்னர் வாழ்ந்ததை, சிந்தித்ததை, எழுதியதை வெளிப்படுத்தியவர் தோழர்.வ.சு. இதழ் ‘சுதந்திரம்’ நவம்பர் 34 இதழில் 5 சிறந்த சிறுகதைகளும் 4அறிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளமையை மட்டும் குறிப்பிடாமல் அந்த ஒன்பதும், தேசிய உணர்வையும் விடுதலை உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் விளங்குவதைத் தோழர் எல்லை. சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஆய்வானாலும் அதன் பிழிவான, அந்த ஆய்வின் முறையியலால் பெறப்பெற்ற ‘findings’ என்று சொல்லப்படும் முடிபுகள் முத்தாய்ப்பாய் நிறுவப் பெறல் முக்கியமாகும். அதை தோழர் எல்லை. சிவகுமார் சிறப்பாகச் செய்துள்ளார்.
அவையாவன:
1. உழைக்கும் வர்க்கத்துக்கு உற்ற கருத்துத் தோழனாய் புதுச்சேரி மண்ணில் பூத்தது ‘சுதந்திரம்’.
2. 1934இல் வெளியான ‘சுதந்திரம்’ மாத இதழின் நோக்கம் “சமூக சுதந்திரத்திற்கு உழைப்பதே”.
3. தோழர் வ.சுப்பையாவின் சிந்தனையின் செயல் வடிவமே ‘சுதந்திரம்’.
4. “சென்னை சர்க்கார் அச்சுச் சட்டம் என்ற பாணத்தை”, தோன்றி ஐந்து மாதமே ஆன ‘சுதந்திரத்தின்மேல்’ தொடுத்தார்கள். அடக்குமுறைச் சட்டங்களைத் தாண்டி “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! என்று வீர நடை போட்டது ‘சுதந்திரம்’.
5. மார்க்ஸ் ஏங்கல்ஸால் உருவாக்கப்பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (MANIFESTO OF THE COMMUNIST PARTY BY K.MARX AND F.ENGELS 1872) (ஜெர்மன் பதிப்பு 1872 தான் முதலாவது; ரஷ்யன் 1882; ஆங்கிலம் 1888) உலகில் நூறு மொழிகளுக்கு மேல் மொழியாக்கம் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மொழியாக்கப்பட்ட வர்க்கப் போராட்டம் நடைபெறும் அரசியல், பொருளியல், சித்தாந்தம் ஆகிய முத்தளங்களையும் 1934 ஜுன் மாதம் வெளிவந்த மாத இதழும்; 1935 லிருந்து வந்த வார இதழுமான ‘சுதந்திரம்’ தன் தத்துவ மரபாக மார்க்சீயப் பார்வையில் வந்த தமிழ் முதலிதழ் ஆகும். (C.S.சுப்ரமணியம் / ப.126).
6. மேற்சொன்ன அரசியல், பொருளியல், தத்துவம் என்ற முத்தளங்களிலும் தன் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் வீறுநடை போட்டு, தனக்கு உண்டாக்கப்பட்ட தீய-மாபெரும் இடர்களைத் தாண்டி இன்றும் தன் 84ஆம் ஆண்டில் இடைவிடாது வெளிவந்து கொண்டிருக்கிறது. “நெருப்பில் துளிர்த்தெழும் ‘பீனிக்ஸ்’ பறவையை வென்றவரும் இல்லை; அதனை எதிர்த்து அதனருகே நின்றவரும் இல்லை” என்ற உண்மை ‘சுதந்திரத்துக்கு 100% பொருந்தும்.

-தோழர் தேவமைந்தன்
(அ.பசுபதி)
முகநூல்: புதுவை பசுபதி தேவமைந்தன்
ட்விட்டர்: @PasupathyAnnan

Google+ : kruppannan.pasupathy@gmail.com

22.2.17

"தமிழகத்துச் சமுதாயக் கூட்டமைப்புப் பெரும்பாலும் கணங்களே(குலக்குழுக்கள்) சாதிகளாக அமைந்துள்ளதால் நாங்கள் -- நாம் என்ற பன்மை வேறுபாடு அப்பேச்சு வழக்கிலே தொடர்ந்து நிலவுவது, சமூக மானுடவியலாளனுக்கு ஆச்சரியத்தைத் தராது. கணநிலையில் வாழ்வோரிடத்து இவ்வேறுபாடு வினைச்சொற்களிலும் காணப்படுகிறது என்பதற்குத் தொதுவர் மொழி உதாரணமாகும். யாழ்ப்பாணத்திலே இது காணப்படாததற்கு அங்கு சாதி அமைப்பு குலக்குழு, கண அமைப்பிலல்லாது தொழிலடிப்படையிலேயே அமைந்திருத்தல் காரணமாகலாம். இலங்கைத் தமிழ் வழக்கிலும் மட்டக்களப்பில் இது நிலவிற்று என்பதற்குச் சான்றாகலாம். இந்த நாம், நாங்கள் வேறுபாடு ஆப்பிரிக்க மொழிகள் பலவற்றிலும் காணப்படுகின்றதென யெஸ்பர்ஸன் கூறுவார். அங்குக் குலக்குழு நிலைமை பேணப்பட்டமையை அவதானிக்கும்பொழுது, இதுவரை கூறப்பட்டதன் உண்மை விளங்கும்."
-- கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி

19.1.17

https://m.facebook.com/story.php?story_fbid=1199316686833377&id=100002651700649&_rdr

7.10.16

பயன் உள்ளதுதான் எதுவும்.

முகநூல்/முகப்புத்தகம்/Facebook -இல் நீடிப்பதோ, உட்புகுவதோ வீண் என்னும் நண்பர் கவனத்துக்கு இச்சேதியைக் கொண்டு வந்துள்ளேன். இரா. நாறும்பூநாதன் என்னும் முகநூல் நண்பர், (முகப்புத்தகம் என்று முகநூலை முதலிலிருந்தே சொல்லிவருபவர்) - தான் முகநூலில் பதிவனவற்றைப் புத்தகங்களாக்கி வருபவர். விற்பனையும் குறைவில்லாமல் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சான்றாக, இந்த நூல். இதன் அட்டைப்படமும் ஓர் அழிவிலாக் கோயிற்படம்தான். கழுகுமலைக் கோயில். ஓவியர் ஈசுவரமூர்த்தியால் வரையப்பெற்றது. டெம்மி அரைக்கால் அளவுள்ள பக்கங்கள் 286 கொண்டது. இந்தப் புத்தகத்தை அவர் கி.ரா. ஐயாவுக்கு அனுப்ப, அவர் தம் வழமைப்படி,குங்குமச் சிவப்பு நிறமெழுதும் தூவலால் குறித்து வாசித்தபின், முனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகருக்குக் கொடுக்க, அவர் தன் வழமைப்படி(நாயகர், எந்தப் புத்தகமானாலும் எங்களைப் போல் அடிக்கோடுகளோ குறியீடுகளோ பதிக்காமல், தூய்மையாகப் படித்துத் தருவார்)வாசித்துமுடித்து எனக்குத் தந்தார். தான் வாங்கும் எண்ணற்ற நூல்களில், தன் பெயரையும் எழுதி உடைமையாக்கிக்கொள்ள மாட்டார் அருள் (எ) நாயகர். மாறுபட்ட மனமுடையவர்களின் உலகத்தில் வேறுபட்டுத் தன்னியல்பாக வாழ்பவர்களோடு பழகுமாறு விதிக்கப்பெற்றுள்ளவன் அடியேன்.இவ்வாறு, மூன்றாவது கையாக, இந்த நூல் என்னை வந்தடைந்தது. எனக்குக் கிடைக்கும் நூல்கள் பல, இத்திறத்தனதாம். இது எனக்கும் ஆகவும் உடன்பாடே. நண்பர்களுடன் பகிர்ந்து வாசிப்பதே மனநிறைவுதான். தன்னந்தனியாக, ஒருமுறையும் புரட்டிவாசிக்கப்பெறாத புத்தம் புதிய புத்தகங்கள், அடங்காக்குமைச்சலுடன் நிலைப்பேழைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் நூலகமெல்லாம் நூலகமா? - தேவமைந்தன்

14.5.16

வியத்தலும் இலமே

"தங்களுக்கு இயல்பாகவும், பயிற்சி + முயற்சிகள் மூலமும் வாய்த்துள்ள தகுதியால் 'பெரியவர்கள் ஆனவர்களை' வியந்து பொறாமைப்படவோ, போற்றவோ நாங்கள் செய்வதில்லையே. அவ்வாறு, இயற்கையாகவே நல் வாய்ப்பைப் பெறாதவர்களாகப் பிறந்து வாழ நேர்வதால் ~~இயல்பை மீறி தங்களுக்கு அமைத்துக் கொண்ட வாய்ப்புக்களால் 'வென்றவர்கள்' வல்லாண்மை செய்யும் இந்தச் சமூகத்தால், 'சிறியவர்கள்' என்று முத்திரை குத்தப்படுபவர்களை இகழ்வது என்பதைச் செய்ய நினைக்கக் கூட மாட்டோம் :)"

- சங்ககாலப் பாவலர் கணியன் பூங்குன்றனார்

18.4.16

ஈழத்துப் பாடல்கள் - நன்றி: BBC Tamil


tag:www.bbctamil.com,2016-02-21:/tamil/sri_lanka/2016/02/160221_elathupadal5
/tamil/sri_lanka/2016/02/160221_elathupadal5
2016-02-21T15:56:59+00:00
2016-02-21T15:31:51+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி 5
இலங்கையின் பாடல்கள், இசைவடிவங்கள் குறித்து ஆராயும் எமது ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் ஐந்தாவது பகுதியில் தாலாட்டு மற்றும் ஒப்பாரி பாடல்கள் குறித்து ஆராய்கிறோம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 5





tag:www.bbctamil.com,2016-02-13:/tamil/sri_lanka/2016/02/160213_eelaththu4
/tamil/sri_lanka/2016/02/160213_eelaththu4
2016-02-14T16:55:52+00:00
2016-02-13T14:26:14+00:00


ஈழத்துப்பாடல்கள் - பகுதி 4
இலங்கையின் இசை வடிவங்கள் குறித்து ஆராயும் ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் இந்த நான்காவது பகுதியில் இலங்கையின் நாட்டார் பாடல்கள் குறித்த சில கருத்துக்களை கேட்கலாம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 4





tag:www.bbctamil.com,2016-02-07:/tamil/sri_lanka/2016/02/160207_eelaththupadal3
/tamil/sri_lanka/2016/02/160207_eelaththupadal3
2016-02-07T16:23:52+00:00
2016-02-07T15:31:43+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி - 3
ஈழத்துப்பாடல்கள் என்னும் தலைப்பிலான எமது இலங்கையின் பாடல்கள் குறித்த இந்தத்தொடரின் இந்த மூன்றாம் பகுதியில் அங்கு புழக்கத்தில் இருக்கும் நாட்டுக்கூத்துப் பாடல்கள் குறித்து பார்க்கலாம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 3





tag:www.bbctamil.com,2016-01-31:/tamil/arts_and_culture/2016/01/160131_eelaththupadal2
/tamil/arts_and_culture/2016/01/160131_eelaththupadal2
2016-01-31T15:41:44+00:00
2016-01-31T15:39:24+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி இரண்டு
இலங்கையின் பாடல்கள் குறித்த இந்த தொடரின் இந்த பகுதியில் அங்குள்ள சடங்குப்பாடல்கள் குறித்து பேசப்படுகின்றது.



ஈழத்துப்பாடல்கள் பகுதி இரண்டு





tag:www.bbctamil.com,2016-01-24:/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1
/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1
2016-01-24T13:28:12+00:00
2016-01-24T12:46:06+00:00


ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று
இலங்கை தமிழர்களின் பாடல்கள் மற்றும் இசை வடிவங்கள் குறித்த தொடரின் முதல் பகுதி.



ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று





ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர். (இக்கதை இடம் பெற்ற தொகுப்பு நூல்: “கடவுள் கற்ற பாடம்’ நற்றிணை பதிப்பகம், சென்னை - 5. ஆகஸ்ட் 2015)
உலகின் அழகான சாலைகள் சந்திக்கும் ஷான்லிசே சதுக்கம் அமைந்திருந்த- கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலையத்தில், இருபத்து மூன்று வயதில், கைகளைப் பராமரித்து அழகு சேர்க்கும் பணியில் ழினேத் சேர்ந்தது, இப்பணி மீது அவளுக்கிருந்த நாட்டத்தினால் அல்ல. ஆண்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக வரும் இந்த இடத்தில்,அவளுக்கான கணவரைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் முக்கிய காரணம். பத்தொன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை இவளிடம் கைகளைக் காட்டிய எந்த ஆண்மகனும், இவளது கைகளைக் கேட்டபாடில்லை` ~ என்று நண்பர் நாயகர் நடையில் சுவாரசியமாகத் தொடங்கும், ஆன்றி த்ரோயா’வின் ‘கைகள்’ கதையின் போக்கு அட்டகாசமானது. பிரான்சில் சொந்தக்காலில் நிற்கும் ஓர் இளம்பெண் முதிர்கன்னியாகும் வரை, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கைகளை நீட்டும் ஆண்தகைமை[பெளருஷம்], அவளிடம் பதினேழாண்டுகளாக ‘விரல்பராமரிப்பு’க்காகக் கையை நீட்டும் எவனுக்கும் வாய்க்கவில்லை என்பதை நுண்ணுணர்வை இரசிக்கும் வாசகர் எவரானாலும் - ஆணானாலும், பெண்ணானாலும், உணர்ந்து வருந்தவே செய்வர். பிரெஞ்சிளைஞர் பார்வையில்தான் ஏதோ குறை என்று நாம் நினைக்கும்போது, ஆன்றி த்ரோயா சொல்கிறார்: “... இவளது உடற்கட்டில் ஆண்களின் உணர்வைப் பற்றவைத்துக் குடும்பம் நடத்தத் தூண்டும் ஏதோ ஒன்று குறைகிறது என்பது மட்டும் உண்மை.” (கடவுள் கற்ற பாடம், பக்கம் 25)
உயரமானவள். வெள்ளை. ஆட்டுக்குட்டியை நினைவூட்டும், அவள் கண்களின் இடைவெளி. மென்மையான பார்வை. அசைவுகளில் சஞ்சலம் கொண்டவள். மற்ற பெண்களுக்கு வெட்கம் வராத சூழலுக்குக்கூட நாணமடையும் இயல்பு உடையவள். வேலை இடைவேளையில், உடன்பணியாற்றும் இளந்தோழிகளின் அரட்டையில் கலந்துகொள்ள மாட்டாள். ஒப்பனை: வானத்துக்கு மேகம்போலக் கொஞ்சம் ‘மேக்கப் பவுடர்’ ஒப்பனை; செவிமடல்களின் பின்பக்கம் இரண்டு சொட்டு ‘பெர்ஃபியூம்.’ அவ்வளவுதான்.
நாற்பது வயது வரை தனது கன்னிமையைத் துன்பமெனக் கருதியவள், இப்பொழுது அதைத் ‘தனிமை’ என்று அடையாளப்படுத்த விழைகிறாள். நகங்களைச் சீர்படுத்துவதில் ழினேத்தை விஞ்ச எவருமில்லை. ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலைய’த்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், அவள் ‘அப்பாய்ன்ட்மென்ட்’ கிடைப்பதற்கு ஒருநாள் தள்ளிப் போனாலும் கவலைப்பட மாட்டார்கள்.
தன்னுடன் வேலைசெய்பவர்கள் பலர் இந்தத் தொழிலை ‘போரடிக்கும் எந்திரமயமானது’ என்று நினைத்திருந்தனர். ழினேத்துக்கோ, அதில் ஒருவிதமான கவித்துவமும் சுவாரசியமும் அடங்கியிருக்கின்றன என்பது கருத்து. கீழ்த்தளத்தில் வாய்மூடித் தன் பணியே கவனமாக இவள் இருக்கையில் மேல்தளத்தில், இவளும் அணியும், கம்பெனியின் முதலெழுத்துகள் பொறித்த வெள்ளைநிறச் சீருடை அணிந்த ‘முடிவெட்டுபவள்’ வாடிக்கையாளருடன் அடிக்கும் அரட்டையும் அதன் விளைவாக விளையும் வெடிச்சிரிப்புகளும், தெளிவாகப் புரிகிறதோ இல்லையோ, இவள் கன்னங்களில் சிவப்பை அப்பும். ழினேத்துடன் பணிபுரியும் பெண்கள் தம் உடம்பை ஓரளவேனும் வெளிக்காட்ட முயலும் நிலையில், இவள் ‘கவரிங் புரூச்சுகளை’ப் போட்டு அந்த இடங்களை மறைத்துக் கொள்வாள். கொஞ்சம் தாரளமாக இந்த விஷயத்தில் அவள் இருந்திருந்தால், இந்நேரம் அவளுக்குக் கணவன் அமைந்திருக்கலாம், “இயல்பை வலிந்து சென்று மாற்றுவதால் எவ்விதப் பலனும் இல்லை ~~ என்று எண்ணி, அத்தகைய எண்ணம் வரும்போதெல்லாம் அமைதி அடைந்து கொள்வாள் ழினேத்.
ஆண்கள் அருகிலிருந்து பணிசெய்வதில் கிடைக்கும் ‘இத்தகைய பிரச்சினை எதுவுமற்ற பரவசம்’ மூலம் ழினேத் எதையும் குறிப்பாக எதிர்நோக்குவதில்லை. ஆனாலும் நாள்தோறும் இயல்பாக அவளுக்கு அமையும் இச்சூழல், போதைப்பொருளைப் போல அவசியமாகிவிட்டது. [இந்தச் சூழல் விவரம் கதையில்] வேலை முடிந்து இரவில், குவியோன்சேன்சீரிலுள்ள தன் அறைக்குத் திரும்பும்போது, மிகவும் சோர்வாக இருப்பாள். ஆண்களின் பலவிதமான கைகள் ~ மென்மையாகவும் ஈரமாகவும், வறண்டும் எலும்பாகவும், மேற்புறம் முடியடர்ந்திருப்பவை என்று ~ அவள் மனத்திரையில் வந்துபோகும். மணிக்கட்டிலிருந்து பிரிந்து காற்றில் மிதக்கும் கைகளில் சில, கனவுகளிலும் பின்தொடரும். ஆனாலும் அடுத்தநாள் காலை கண்விழித்து எழும்போது, எப்பொழுதும்போலவே, தெளிவான மனத்துடன் இருப்பாள்.
ஒரு மே மாத சனிக்கிழமை. ஒரு நக அலங்கார வேலையை முடித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை கிடைக்கும் தற்காலிக இடைவெளியின்பொழுது, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ழினேத். அப்பொழுது, கடைக்கு உள்ளே ஒரு குள்ளமான நபர் வந்தார். சாம்பல்நிற முடியும் வெளிறிய வட்டமான முகமும் கொண்டவராக இருந்தார். அவரது வயிற்றுப் பகுதியில் மேடாக இருந்தது. அவர் அணிந்திருந்த கறுப்புநிறக் கோட், விறைப்பான காலர், அவரது சிவப்பு ‘டை’யில் காணப்பட்ட முத்து எல்லாம் சேர்ந்து...... உறுதியாக இவர் ஒரு பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்புக்கு வந்தாள் ழினேத். ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்காரக் கடை’க்கு அவர் வருவது இதுதான் முதல் முறை என்பது மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்.
[விதி நல்லபடி ஆகும். அதைத்தானே திருவள்ளுவர் ‘ஆகூழ்’ என்று கூறுகிறார். தன் 23 வயது முதல் 40 வயது வரை, மற்ற தன்னொத்த வேலை செய்யும் பெண்கள் போலல்லாமல் கன்னிமையை பேச்சிலும் கூடக் காத்துவந்த ழினேத்தின் வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறவர் அந்த நபர் என்பது ழினேத்துக்கு அந்த தருணத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? நமக்கும் கதையை முழுதாகப் படிக்கும்வரை தெரிய வேண்டாம்;-) ]

10.3.16

kalapathy கலாபதி: ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரை இல்லாத ராஜகுமாரன்' - க...

kalapathy கலாபதி: ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரை இல்லாத ராஜகுமாரன்' - க...: Rajaji III காதல் சம்பந்தமான கதைகளும்; பெண்களின் உணர்வுகள் தொடர்பான கதைகளும் மட்டுமே பெண்களை மிகவும் கவருகின்றன என்பதை, இந்த மதிப்புரை...

ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரை இல்லாத ராஜகுமாரன்' - கலாபதி தேவமைந்தன் மதிப்புரை: நிறைவுப் பகுதி

Rajaji III
காதல் சம்பந்தமான கதைகளும்; பெண்களின் உணர்வுகள் தொடர்பான கதைகளும் மட்டுமே பெண்களை மிகவும் கவருகின்றன என்பதை, இந்த மதிப்புரையை நான் எழுத ஒத்துழைத்த நண்பியர் எண்பித்தனர். இது எனக்கு வியப்பை மட்டுமின்று, தமிழ்த் திரைப்படக் கதைப்போக்குக் குறித்த விழிப்பையும் ஏற்படுத்தியது. ‘பாசமலர்’ படக் காலக்கட்டத்தில், அரங்கை விட்டு வெளிவரும் பெண்களின் முந்தானை நனைந்து பிழியப்பட்டிருப்பதையும்; மழைவிட்ட தூவானம் போல் அவர்களின் விழிகள் வெளிறியிருப்பதையும், கோவை இராயல் தியேட்டருக்கு முன்பு எங்கள் பள்ளி இருந்ததால் கண்டிருக்கிறேன். இப்பொழுது நயன்தாரா த்ரிஷா போன்றவர்கள் அந்தப் போக்கை மாற்றிவிட்டனர். இபொழுதெல்லாம் ஆண்கள் ‘சப்ஜெக்ட்’ படங்கள் அதிகமாதலால் ~ சூது வாது பொய் கபடம் மதம் மாச்சரியம் முதலான அறுவகைக்குணங்கள் தமிழ்த் திரையுலகை ஆள்கின்றன. இப்பொழுது நாம் ராஜாஜி ராஜகோபாலனின் மறுபக்கக் கதைகளுக்கு வருவோம்.
ஆயுள்வேத “டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்” என்று ‘பத்தியம்’ கதை விழிக்கிறது. “மயில்வாகனம் காதிலிருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார்” என்று தூங்கப் போகிறது. இடையில் பத்தியம் பத்தியமாகவே ஜெயிக்கிறது. ஆயுள்வேதத்தையே சத்துவ-பத்திய வாழ்க்கையாகக் கொண்டொழுகும் அவர், தன் தொழில் தர்மமே குறியென்று வாழ்கிறார். ‘Non compromising medication’ என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் ‘திட்டவட்டமான பண்டுவமுறை’யையே தன் இயல்பாகக் கொள்கிறார். செல்வாக்கு மிக்கவர்தான். ஆனால், செல்வம் சேர்க்காதவர். ஏழ்மையே தாழ்வில்லை; எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலைபோய் விடக்கூடாது என்பதில் ‘வஜ்ரம்’ அவர். ஈழத்தமிழ் கொஞ்சி விளயாடும் இந்தக் கதையைப் படித்துப் பார்ப்பவர்கள் ‘பாக்கியவான்கள்.’ பானைக்கொரு சோறு:
“சேர்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியெலோ வரவேணும்.”
“காசு எவ்வளவெண்டாலும்...”
“அது எனக்குத் தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டுவாருங்கோ”
இப்படிப் பேசுபவர் “வீட்டில் இருந்ததெல்லாம் உழுத்துப்போன உரல் உலக்கைகளும் மருந்துச் சீசாவுகளும்தான்.”(49)
‘விழிப்புகள்’ -- இந்தக் கதை நனவோடை முறையிலும் கனவுகாண் நிலைமையிலும் [stream of consciousness + dreaming brainy state] சொல்லப்பட்டிருப்பதைச் சொல்லிக்காட்ட வேண்டியது முக்கியம். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ ~ நின்ற மரத்தின் கதை. இது விழுந்த மரத்துக்கும் மனிதனுக்கும் நிகழும் ‘நிகழ்மை’ [synchronicity என்பது உளத்தியல் தத்துவத்தில் வருவது; synchronization என்பது திரைப்பட அறிவியலில் வருவது] அவன் புலன்கள் ஒடுங்கவில்லை. ஆனால் சிந்தனை ஒடுங்குகிறது. மனமோ, மோனப் பெருவெளியில் மிதக்கும் பரவசம் எய்துகிறது. பானுமதி என்னும் செவிலி/ உயிர்த்தோழி/ காதலியின் ‘அந்த’ முறுவல் அவனின் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.
‘கறுத்தக்கொழும்பான்’ - அகோ.. வாரும் பிள்ளாய்... இந்தக் கதைதானே ராஜாஜியையும் தேவமைந்தனையும் நட்பால் பிணைத்தது...சரசுவதி என்ற யதார்த்தமான ‘கேரக்டர்’...உலகெங்கும் சாதி மத மொழி நாடு பேதமற்றுப் பார்க்கக் கூடிய பெண்பாத்திரம்...”வேலிக்கு இந்தப் பக்கத்திலிருந்து ஒப்பாரிவைத்த சரசுவதியின் தொண்டை எந்த அளவுக்குத் திறந்திருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு எந்த அளவு தூரத்திலுள்ள ஆளுக்கு முறைப்பாடு செய்கிறாள் அல்லது அள்ளி வைக்கிறாள் என்பதை அந்த ஊரில் எவரும் அறிந்து கொள்வர்”(71) என்று அவள் அறிமுகம் தொடங்குகிறது. எங்களூரில் ஒருவர்.. பக்கத்து ஊரில் உள்ளவர்க்குப் போன் போட்டால் அதற்கேற்ப மென்மையாகவும்; தூரத்திலுள்ள ஊருக்கோ நாட்டுக்கோ போன் அடித்தால் அந்த ஊர்/நாடு எந்த அளவு தொலைவிலுள்ளதோ அந்த அளவுக்குத் தன் ‘வால்யூமை’ ஏற்றிக் கொள்வார். அப்படியிருக்கிறது, சரசுவதி, தன் ஊருக்குள்ளேயே முறைப்பாடு வைக்கிற ‘லெச்சணம்.’ சாவித்தல் அல்லது அறம் பாடுதல் அவளுக்குக் கைவந்த கலை. தருமனை தறுமன் என்று பல்லைக் கடித்துக் கொண்டு வைபவள். தலைமையாசிரியரைப் பிடிக்காத நண்பர் ஒருவர் ~ “என்ன ஹெட்மாஸ்டன் அவன்?” என்று கேட்பார் இங்கே. சரசுவதியின் மொழிப் புழங்கல், ரகர றகர ழகர ளகர லகர வேற்றுமைகளைத் தன் வயிற்றெரிச்சலுக்கேற்ப, மாற்றிக்[tune] கொள்ளும். அப்பேர்ப்பட்டவள், எந்தத் தருமனத் ‘தறுமன்’ என்று வைவாளோ, அதே தருமன் ~ வைரவசாமிக்குப் பொங்கலிட விறகு வாங்கி, சுட்டெரிக்கும் வெயிலில் அவள் சுமந்து வரும்போது பார்க்க நேர்ந்து சுமையைத் தன் தோளுக்கு மாற்றிக் கொள்ளும் பொழுதே அவள் வக்கிரம் நாண்டுகொள்ள; பரிவும் பாசமும் அவள் சித்தத்துள் நுழைந்து கோலோச்சத் தொடங்கி விடுகின்றன. மாற்றார் செய்கையால் நம் மனம் ஏற்கும் வேதியல்[ரசவாத] மாற்றமே இந்தக் கதையின் கொடுமுடி. இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழ் வாசகர்களே! ‘கொழும்பான்’ என்பது, என்ன மரமென்று சொல்லுங்கள் பார்ப்போம் ;)
‘தெற்காலை போற ஒழுங்கை’ கதையப் படிக்கும் முதியோர் இல்ல மாமியார்கள் அழுதே விடுவார்கள். தமக்கிப்படியொரு மருமகளைத் தரவில்லையே ஆண்டவரே என்று கடவுளை நொந்து கொள்வார்கள். ஒனக்கெழுதி வச்சது அப்படித்தான் என்று அடுத்த கட்டில் கெழம் சிடுக்கெடுக்கும். அப்படிப்பட்டவள் ~ இக்கதையில் வரும் பொறுப்பான மருமகள். மகன் தங்கள் குடும்பப் பொறுப்பை ஏற்பான் என்று பெற்றோர் நம்ப, ‘தயக்கம் தங்கரெத்தின’மான மகன் தயங்ங்ங்ங்க, புதிதாக வரும் மருமகளோ, “நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று அவன் தங்கைகளைக் கரையேற்றும் பொறுப்பைத் தானே ஏற்பதும்... கற்பனை போலிருந்தாலும் அருமை. நாம் பார்க்காமல் விடுவதால் அத்தி பூக்காமல் காய்க்கிறதா என்ன? ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் ‘ரெகுலர் சமாச்சாரங்களை’ விவரித்தாலும் இந்தக் கதை தெற்காலை போற ஒழுங்கான ஒழுங்கையாக, கோர்வையாக, அழகாக, நுட்பமாக நவிலப்பட்டிருப்பது ராஜாஜியைச் சிறந்த ‘கதைசொல்லி’ ஆக்குகிறது.
‘மெளனத்தின் சப்தங்கள்’ - ‘ழுஃதனெ[ய்]சிய’ என்று அழைக்கப்படும் ~ ‘கருணைக்கொலை’ என்று பிழையாகச் சொல்லப்படும் அறச்செயல் குறித்து மீயுயர் மாந்தநேயத்துடன் ஆராயும் அரிய கதையாடல். இதற்காகவே ராஜாஜியின் கோட்டில் ‘எம்.வி.பி.’ பதக்கத்தை அணிவிக்கிறேன். Sue Miller எழுதிய ‘While I Was Gone’(1999) என்ற அருமையான புதினத்தில், ‘அறவழி உயிர்நீக்கல்’ என்னும் euthanasia -வை ஜோயி என்றழைக்கப்பெறும் டாக்டர் பெக்கர் [Dr. Becker] என்ற கால்நடை மருத்துவர், ஆயிரக்கணக்கை எட்டும் அளவு செல்லவிலங்குகளான நாய்களுக்குச் செய்திருப்பாள்/ர். மனிதக் கொலை செய்தவனான எலெ மஃயூ என்னும் பழைய நண்பன், தன் செல்ல நாய்க்கு அந்தச் செயல் அவளால் செய்யப்படக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பான். அந்தப் புதினத்தைத் தற்கால ஆங்கிலம் அறிந்தவர்கள் வாசியுங்கள். தவற விடாதீர்கள். இங்கே வரும் மனிதர், ‘தானுண்டு தான் வேலையுண்டு’ என்று இருப்பவர். மூலிகை வைத்தியர். சிவனடியான் ~ சரியான பெயர். சிவனே வைத்திருப்பார் போல. தன் மகனாக இருந்தாலும் தீராத நோயினால் வலியால் துடிக்கும் நிலையில், வைரவசாமியை வேண்டிக்கொண்டு ‘அந்த நாள்’ மாலை முழுவதும் தன் மகன் ஐயங்கனுக்காக இறுதி ஒரே ஒரு மருத்துவமாக மூலிகைகளை அரைத்து, ஐயங்கன் ஆசையாக வளர்த்த ஆட்டின் பாலிலேயே அக்கலவையைக் கரைத்து ஊட்டுவார். “நடப்பது என்னவென்று முன்னமே அறிந்துகொண்டவன் போன்று ஐயங்கன் தன் தகப்பனை நன்றியுடன் பார்த்தான். அவன் கண்கள் ஒரேயடியாக இடுக்குகளில் சொருகிக் கொண்டபோதுதான் தன் மகனின் வேதனைகளுக்கு இறுதியில் முடிவு வந்துவிட்டதெனச் சிவனடியான் அறிந்து கொண்டார். அப்போது அவரெழுப்பிய ஓலம்தான் அந்த ஊரையே உலுக்கியெடுத்தது” என்று படித்துவிட்டு என் நண்பி அழுத அழுகைதான் ~ இந்த மதிப்புரையையே நான் அவர்களுடன் சேர்ந்து எழுதக் காரணமாயிற்று, “என்ரை மோனை..!” என்று இந்த மெளனத்தின் சப்தங்களுக்கு அந்தமும் ஆதியுமாக ஆன சிவனடியானின் ஓங்கார அலறல் உலுக்கியெடுத்துவிடும்... இக்கதையை உண்மையாக வாசிப்பவர்களை. முடிவில், “மகன் செத்ததோடை சிவனடியானுக்கு விசர் வந்திட்டுது”(115) என்று, நடந்ததை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் ஓரிருவர், ஊரெழுமுன்னே உறக்கத்திலிருந்து விழித்து கொண்டவர்கள், தமக்குள் சொல்லிக் கொள்வதாகக் கதை முடிகிறது. “தொகுப்பினுள்ளே உருக்கமான மணியான கதை” என்று என் சகவாசகியரிடம் பதக்கம் பெற்ற கதை.
‘ஆசை வெட்கம் அறியும்’ என்ற ‘கடோசி’[கரிசல் சொல்]க் கதை ஆண்மனத்தின் அபத்தமொன்றை மென்மையாக நவிலுகிறது. தன்னிலும் முப்பது வயது குறைந்தவளைச் சின்ன வீடாக ‘செட்-அப்’ செய்து சாதிக்க, சிவப்பிரகாசத்தார் தமக்கு நண்பரான ‘லாயர்’ ஒருவரைப் பயன்படுத்துகிறார். ஆனால், அந்த வழக்குரைஞரோ மனச்சாட்சியும் விவேகமும் உள்ளவர். ‘ஃபீஸ்’ஐப் பெரிதாக எண்ணாதவர். அன்னபூரணி அக்காவைத்தான் உயர்வாகக் கருதுபவர். மனவியலடிப்படையிலும் உலகியலடிப்படையிலும் குழந்தையொன்றுக்கு எடுத்துச்சொல்வதுபோல் பக்குவமாக சிவப்பிரகாசரிடம் எடுத்துச்சொல்லி, உண்மையுரைப்போனாகவும் விளங்கி, அவரைவிட்டுப் பிரிந்துபோன இல்லாளை சிவப்பிரகாசர் இல்லத்தில் இருப்பவள் ஆக்குகிறார். இந்த ‘லாயர்’ இன்னொரு கதையில் வரும் ‘ஆயுள்வேத மருத்துவர்’ இருவரும் ‘குறிக்கோள் கதைமாந்தர்’[Ideal characters] என்ற ‘கதைமாந்தர் வகை’யில் அடக்கப்பெறுவர். யாழ்ப்பாணத்துப் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்துப் பேசும் வார்த்தைகள்(213) ~ எனக்கு, இந்தியத் தமிழ்நாட்டின் முக்குலத்தோர் பேச்சு வழக்கை மிகவும் நினைவுபடுத்தியது. மிகவும் சுவாரசியமானது.. இக்கதையில் வரும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் பேச்சு வழக்குத்தான்.
‘கடவுளும் கோபாலப் பிள்ளையும்’ என்ற பதின்மூன்றாவது கதை, புதுமைப்பித்தனை, தன் தலைப்பால் நினைவூட்டுகிறது. ஆனால், இதில் கடவுள் வருவதில்லை. அவருடைய முகவர்/பிரதிநிதி/தூதுவர்/தொண்டன்... வருகிறார். அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கிறார் கோபாலப் பிள்ளை. நமக்கும், எல்லோருக்கும் இப்படிப்பட்ட கடவுளின் தூதுவரிடம் கேள்விகள் பற்பல கேட்கவேண்டும் என்ற ஆர்வம் வரும்தான். இந்தக் கதையில், மற்ற கதைகளைப் போலல்லாமல், கடவுளின் தூதரிடமிருந்து எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை. “இந்த யுகத்து இன்னல்களைத் தீர்க்கப் படைத்தவனாகிய தனக்கே வழி தெரியவில்லை என்று சொல்லி நழுவுபவர்தான் இன்றைக் காலக் கடவுள் என்று சொல்கிறீர்களோ?”(189)என்று கடோசியாகக் கேட்கும்போது, வேறு வழியில்லாமல் மாயமாய் மறைந்து போகிறார். வரமாவது வாங்கியிருக்கலாமே என்று கோபாலப் பிள்ளையின் மனைவி அங்கலாய்க்கும்பொழுது, “வரம் கொடுக்கும் வல்லமை கடவுளிடம் எப்போதோ வற்றிப்போய் விட்டது. அதை மறைக்கவே தலையைக் காட்டிவிட்டுப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் தந்திரத்தைக் கையாள்கிறார். மனிதர்கள் இனியும் அவரை அழைப்பதை மறந்துவிட்டு தமக்குள் கடவுளைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான் இன்றுள்ள இன்னல்கள் தீர ஒரேவழி”(190) என்று கோபாலப் பிள்ளை சொன்னாலும் “அவர்” மறைந்தபின் அவர் விட்டுப்போன வாசனை மட்டுமே வீட்டினுள் எஞ்சியிருந்தது. என் மனதில் மட்டும் ஏதோ ஒருவகையான சூனியம் படர்ந்ததுபோன்ற உணர்வு மேலிட்டது......என் மனம் ஏனோ கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தது”(190) என்ற கோபாலப்பிள்ளையின் ‘நன்றிநவில்தலில்’[Thanksgiving] கதை முடிகிறது.
மதிப்புரைக் காப்புரிமை: தேவமைந்தன் (Puducherry A. Pasupathy) 10/03/2016