15.6.17

பாட்டிமார்களும் பேத்திமார்களும்

'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்ற நாவலை என் முனைவர்ப் பட்ட /Ph.D ஆராய்ச்சிக்காலத்தில் ஆழமாக வாசித்தேன். எழுத்தாளர் த. ஜெயகாந்தன் குறித்த ஆய்வு. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். (தரமணி, அடையாறு, சென்னை). முதன்மை வழிகாட்டி: முனைவர் தா.வே. வீராசாமி. மேற்பார்வையாளர்கள்: முனைவர் இரா. இளவரசு. முனைவர் ஏ.என். பெருமாள். ஆய்வேடளித்த நாள்: 24.4.1986. ஏன் 'பாட்டிமார்களும் பேரன்மார்களும்' என்ற தலைப்பைத் தராமல், 'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்று தந்திருக்கிறார் ஜெ. என்று குழப்பம். அவரையே கேட்கலாம் என்றால் ஏற்கெனவே தன் ஆய்வாளர்களைக் கொச்சைப் படுத்தியிருந்தார் என்பதால் கேட்கவில்லை. பகுதிநேர ஆய்வாளர் என்பதாலும் கோவையிலிருந்தே நட்பு இருந்ததாலும் என்னை அன்புடன்தான் நடத்தி வந்தார். தன் காரில் அழைத்துச் செல்வார். தன் கையெழுத்துப்படிகளைக் காட்டுவார். இன்னபிற. ஆனாலும் கேட்கவில்லை. எங்கள் மகள்வழிப் பேத்தி பிறந்து வளர்ந்து தன் பாட்டிக்குத் தோழிபோல் நடந்துகொள்வதைப் பார்க்கும்பொழுதுதான் ஏன் 'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்ற தலைப்பை அவர் வைத்தார் என்பது துல்லியமாகப் புரிகிறது. எல்லார் வீடுகளிலும் பாட்டிமாரும் பேத்திமாரும்தான் 'அன்னியோன்யம்' போல!..

photo courtesy: www.udumalai.com

#Jeyakanthan
#த.ஜெயகாந்தன்
#ஜெயகாந்தன்

No comments: