28.12.23

நன்று ஆகும் பொழுது......

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
(திருக்குறள் ௩௭௯ )

நன்றுஆகுங்கால் நல்லவாக் காண்பவர் = நல்லது ஆகும்போது நல்லது நல்லது என உவகை அடைந்து மகிழ்பவர்,
அன்றுஆகுங்கால்
அல்லல்படுவது எவன்? = நல்லதுஅல்லாதது (கெட்டது அல்ல; unpleasant போல) ஆகும்போது புலம்பி வருந்துவது ஏன்?

அதிகாரம் *ஊழ்* என்பதால் - 
ஆகூழ் ~ நல்வினை - பொன் விலங்கு.
போகூழ் ~தீவினை - இரும்பு விலங்கு.

ஆகு + ஊழ். ஆவதற்குக் காரண ஏதுவான வினை/ செயல். 
காட்டு - இந்த அரிசி, மாவுக்கு ஆகி வரும். திருமணமான அவ்விணையருக்கு மகவு ஆகிவருகிறது.
போகு+ ஊழ். போவதற்குக் காரண ஏதுவான வினை/செயல்.
காட்டு: இந்த அரிசி, மாவுக்கு ஆகிவராது.
அன்று அவரிடம் திரண்டிருந்த செல்வம், இன்று போயே போய்விட்டது.
I miss you.
Stop-loss Order. [A stop-loss order is a risk-management tool that automatically sells a security once it reaches a certain price (either a percentage or a dollar amount below the current market price). It is designed to limit losses in case the security's price drops below that price level.]

He lost his spouse. She lost her spouse.

முடிபு: நல்வினைப் பயனாக நன்மை வரும்போது இன்பம் அடைகிறவர், தீவினைப் பயனாகத் தீமை வரும்போது ஏன் துன்பப்பட வேண்டும்?

கொண்முடிபு: 
நன்மையும் வேண்டாம் தீமையும் வேண்டாம்; பொன்விலங்கால் தளைப்பட்டாலும் இரும்புவிலங்கால் தளைப்பட்டாலும் தளை தளையே - என்று செயல்புரியாமல் சோம்பிக் கிடப்பதை விட, நல்லதோ கெட்டதோ எதுவரினும் வரட்டும்... நான் ஓயாது செயல்படுவேன்.

COME WHAT MAY... I SHALL CONTINUE MY UNCEASING ACTIVITIES. 

Courtesy: http://kalapathy.blogspot.com

20.12.23

உலகப் புகழ் பெற்ற சிறுகதை: ஆஸ்கார் வைல்டின் 'மாதிரி கோடீஸ்வரர்' தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

மாதிரி கோடீஸ்வரர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
- ஆஸ்கார் வைல்ட்

தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

பணக்காரராக இல்லாதபோது, அழகாக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. காதல் லீலைகள் எல்லாம் வசதிபடைத்தவர்களுக்கானது. வேலை இல்லாதவர்களுக்கான வேலை அது இல்லை. ஏழை என்பவன் எதார்த்தமாகவும் கற்பனைகளில் சஞ்சரிக்காமலும் நடந்துகொள்ள வேண்டும்.
எல்லோரும் வாய்பிளந்து பார்க்கும்படி இருப்பதைவிட, நிரந்தர வருவாய் ஏதாவது இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இவைதான் இன்றைய வாழ்வியல் உண்மைகள். இவற்றைப் பற்றியெல்லாம் ஒருபோதும் யூகி எர்ஸ்கீன் யோசித்துப் பார்த்ததில்லை. பாவம் யூகி! அறிவார்ந்த நிலையில் பார்த்தால், அவன் தேர மாட்டான் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. அவன் இதுவரையில் வாழ்க்கையில் புத்திசாலித்தனமாகவோ மிகவும் கீழ்த்தரமாகவோ எதையும் சொன்னதில்லை. ஆனால், அவனுடைய விரைப்பான சாம்பல்நிறத் தலைமுடி, எடுப்பானத் தோற்றம், கச்சிதமான உடலமைப்பு எல்லாம் சேர்ந்து பார்க்க அவன் அழகாகயிருப்பான். பெண்கள், ஆண்கள் என எல்லோருடனும் நெருங்கிப் பழகி வந்தான். பணம் சம்பாதிப்பதைத் தவிர்த்து அவனால் எல்லாம் முடிந்தது. அவனுடைய அப்பா விட்டுச் சென்றதெல்லாம் இரண்டே பொருட்கள்: தான் பயன்படுத்திய வீரவாள், 15 தொகுதிகள் கொண்ட ”தீபகற்பப் போரின் வரலாறு” ஆகியவைதான். அந்த முதல் பொருளான வாளைக் கண்ணாடியின் மேல் தொங்கவிட்டான். இரண்டாவதை ஷெல்ஃபில் இருந்த ரஃபின்கைடுக்கும் பெய்லி மேகஸினுக்கும் இடையில் வைத்துவிட்டு வயதான பெரியம்மா வருஷத்துக்கு ஒருமுறை தரும் 200 பவுண்ட்டுகளைக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவனும் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்துவிட்டான். ஆறு மாத காலம் பங்குச் சந்தையில் முயற்சி செய்து பார்த்தான். காளைகளும் கரடிகளும் நடமாடும் இடத்தில் பட்டாம்பூச்சிக்கு என்ன வேலை? இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் தேநீர் விற்றுப்பார்த்தான். பெக்கோ, செஸ்ச்செங் எனச்  சீனத் தேநீர் வகைகள் விற்று அலுத்துப்போனான். அதன் பிறகு, ட்ரை ஷெரி எனும் வெள்ளை ஒயின் விற்றுப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தான். அதுவும் பலன் தரவில்லை. காரணம் இயல்பாய் இருக்க வேண்டிய அளவு இனிப்பு அதில் இல்லாமல்போனது தான். கடைசியில், அவன் எதுவும் ஆகவில்லை. உற்சாகமான, சர்வலட்சணம் பொருந்திய, எதையும் சாதிக்க இயலாத, வேலை எதுவும் இல்லாத ஒரு கலைஞனாக வலம் வந்தான்.
இருக்கும் பிரச்சனை போதாது என்று, அவன் காதலிக்க ஆரம்பித்தான். அவன் காதலித்த பெண் லோரா மெர்டன். ஓய்வு பெற்ற இராணுவத்  தளபதியின் மகள். இந்தியாவில் பணியாற்றியபோது ஏற்பட்ட கோபமும் அஜீரணக் கோளாறும் இன்னமும் அவரைவிட்டுப் போனபாடில்லை. அவன் காலில் மண்டியிடச் சொன்னால்கூட லோரா செய்யத் தயாராக இருந்தாள். அந்த அளவு அவனை அவள் காதலித்தாள். லண்டன் மாநகரிலேயே மிக அழகானதொரு ஜோடியாக வலம் வந்த இவர்களிடம் பணம் எதுவுமில்லை. யூகியை இராணுவத் தளபதிக்குப் பிடித்திருந்தாலும், தன் பெண்னைத் திருமணம் செய்யும் திட்டத்தை அவர் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
'தம்பி, 10,000 பவுன்ட் சொந்தமாகச் சம்பாதித்துக்கொண்டு என்னிடம் வா. அதைப் பற்றிப் பேசலாம்' என்ற அவரது நிபந்தனையைக் கேட்ட யூகியின் முகம் இருண்டு போனது. லோராவிடம் தான் போய் ஆறுதல் பெறவேண்டியிருந்தது.
ஒரு நாள் காலை, லோரா குடும்பம் வசித்து வந்த ஹாலந்து பார்க் பகுதிக்குச் செல்லும் வழியில் அவனுடைய நெருங்கிய நண்பன் அலென் டிரெவரைப் பார்த்துவிட்டுப் போகலாம் என நினைத்தான். டிரெவர் ஒரு ஓவியன். பார்க்கப்போனால், இப்பொழுதெல்லாம் ஒரு சிலரே இந்த நோயிலிருந்து விடுபட்டுவிடுகின்றனர். ஆனால், டிரெவர் ஒரு கலைஞனும்கூட. கலைஞர்களைப் பார்ப்பது உண்மையில் அரிது. தனிப்பட்ட முறையில் அவன் கரடுமுரடான ஆள். சூரியத் தழும்புகளும் செம்பட்டையான தாடியுடனும் வித்தியாசமானத் தோற்றமுடையவன். ஆனால், கையில் தூரிகையை எடுத்துவிட்டால் அவன் உண்மையான மேதையாக மாறிவிடுவான். அவனுடைய ஓவியங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது.
யூகியை அவன்பால் முதலில் ஈர்த்தது, தனிப்பட்ட முறையில் அவனுடைய வசீகரம்தான் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். டிரெவர் அடிக்கடிச்  சொல்வதுண்டு. “முட்டாளாகவும் அழகாகவும் உள்ள ஆட்களைத்தான் ஓவியனுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். பார்க்கக் கலையம்சத்தோடு இருக்க வேண்டும். பேசிக்கொண்டிருக்க அறிவுக்கு அதிக வேலையில்லாமல் இருக்க வேண்டும்”. மேலும், “நன்றாக உடுத்தும் ஆண்களும் பார்க்க அழகாகத் தெரியும் பெண்களும்தான் உலகினை ஆள்பவர்கள். குறைந்தது அப்படி அவர்கள் நடந்துகொள்ளவேண்டும்” என்பான். எனினும், யூகியைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்ட பிறகு, அவனுடைய உற்சாகம், குதூகலமான உணர்வு, தாராள குணம், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் ஆகியவையும் டிரெவருக்குப் பிடித்துப் போகவே, எப்பொழுது வேண்டுமானாலும் தன் ஸ்டுடியோவுக்குள் நுழையும் உரிமையை அவனுக்கு டிரெவர் தந்திருந்தான்.
அன்று யூகி உள்ளே நுழைந்தபோது, டிரெவர் ஓர் அருமையான ஓவியத்தை வரைந்து முடித்து, கடைசி நேர மெருகேற்றலில் ஈடுபட்டிருந்தான். அது ஒரு பிச்சைக்காரனின் ஆள் உயர ஓவியம். ஸ்டுடியோவின் ஓரத்தில், தரையிலிருந்து சற்றே உயர்த்தி அமைக்கப்பட்டிருந்த மேடையில் அந்தச் பிச்சைக்காரனே ஓர் உயிரோவியமாய் மாடலாய் நின்றிருந்தான். தேகமெல்லாம் சுருங்கி, முகத்திலும் சுருக்கம் விழுந்து, பரிதாபமான தோற்றத்தில் இருந்தான் அந்தக் கிழவன். அவனுடைய தோள்களின்மீது சாம்பல் நிறத்தில் மூட்டை. எல்லாம் கந்தலும் கம்பளையுமாக. அவனுடைய தடித்த காலணிகள், ஆங்காங்கே ஒட்டு போட்டுத் தைத்திருந்தது தெரிந்தது. சொரசொரப்பான கழி ஒன்றின்மீது ஒரு கையை ஊன்றியபடியும், கிழிந்துபோன தன் தொப்பியை மற்றொரு கையால் பிச்சை கேட்க ஏந்தியபடியும் நின்றிருந்தான்.
உள்ளே நழைந்த யூகி, நண்பனின் கைகளைக் குலுக்கியவாறே,
“என்ன அருமையான மாடல்!” என்று உற்சாகத்தில் கத்திவிட்டான்.
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இவனைப் போன்ற பிச்சைக்காரர்கள் அன்றாடம் கிடைக்கமாட்டார்கள். உண்மையில் ஒரு கண்டிபிடிப்புதான். இவன் ஒரு வாழும் வெலாஸ்கே! இப்படிக் கிடைத்தது என் அதிருஷ்டம்தான். ஓவியர் ரெம்பார்ட்டிடம் சிக்கியிருந்தால், இவனை வைத்து என்னவெல்லாம் செய்திருப்பான்?”
“பாவம் இந்தக் கிழவன்!” பார்க்க எவ்வளவு பரிதாபமாக இருக்கிறான். எனக்கென்னவோ, உங்களை மாதிரி ஓவியர்களைப் பொறுத்தவரை, அவனுடைய முகம்தான் அவனுக்குச் சொத்து. இல்லையா? ” என்று யூகி கேட்டான்.
“நிச்சயமாக, பிறகு பிச்சைக்காரன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றா எதிர்பார்க்க முடியும்?” எனப்  பதிலுக்குக் கேட்டான் டிரெவர்.
ஒரு சோபாவில் வசதியாக அமர்ந்திருந்தபடியே,
“இப்படி ஒரு முறை நிற்பவனுக்கு எவ்வளவு கிடைக்கும்?” என்று விசாரித்தான் யூகி.
“ஒரு மணிநேரத்துக்கு ஒரு ஷில்லிங்”
“சரி, உன் ஓவியத்துக்கு உனக்கு எவ்வளவு கிடைக்கும்?”
ஓ! இதற்கு 200 கிடைக்கும்!”
“பவுண்டுகளா?”
“இல்லை. கினியாக்கள். ஓவியர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள் இவர்களுக்கெல்லாம் எப்பொழுதும் கினியாக்கள்தான்”.
“சரி, சரி. அப்படி மாடலாக நிற்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து. உங்கள் அளவுக்கு அவர்களும் கடுமையாக உழைக்கிறார்கள்” என்று யூகி சிரித்துக்கொண்டே சொன்னான்.
“அபத்தம், முட்டாள் தனமான கருத்து. வரைவதையும், சாவகாசமாக நாள் முழுவதும் நிற்பதையும் மட்டும் ஏன் பார்க்கிறாய்? யூகி! பேசுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உடல் உழைப்பு வேலையின் அளவைக் கலையும் எட்டிப் பிடிக்கும் தருணங்களும் உண்டு என்பதை என்னால் உறுதியாகச்  சொல்ல முடியும். சரி. இப்படி நீ அரட்டை அடித்துக்கொண்டிருக்கக் கூடாது. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு பேசாமல் இரு” என்று அடக்கினான் டிரெவர். சிறிது நேரம் கழித்து, வேலையாள் ஒருவன் உள்ளே வந்து, டிரெவரைப் பார்க்க, ஓவியத்துக்குச் சட்டம் அமைப்பவர் வந்துள்ளதாகத் தெரிவித்தான்.
“எங்கேயும் போய்விடாதே, இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி வெளியே சென்றான், டிரெவர்.
டிரெவர் அங்கு இல்லாத அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்ட பிச்சைக்காரன், அவன் பின்னால் இவைல்ட்மரப்  பெஞ்சில் சற்றே உட்கார்ந்து இளைப்பாறினான். மிகவும் கைவிடப்பட்ட நிலையில் சோர்ந்துபோய் இருந்த அவனைக் கண்டு யூகியால் பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. தன் கால்சட்டைப்பையில் பணம் எவ்வளவு இருக்கிறது என்று துழாவிப் பார்த்தான். ஒரு பொற்காசும் சில செப்புக் காசுகளும் மட்டுமே இருந்தன.
“பாவம் இந்தக் கிழவன் ! என்னைவிட இவனுக்குத்தான் இப்பொழுது இது தேவை. என்ன, இன்னும் இரண்டு வாரகாலத்துக்கு எனக்குச் கோச் வண்டி இருக்காது” என்று நினைத்துக்கொணடான். ஸ்டுடியோவின் அந்தப் பக்கம் இருந்த பிச்சகைகாரனிடம் சென்று பொற்காசை அவன் கையில் கோட்டான்.
அந்த வயதான ஆள் திடுக்கிட்டான். அவனுடைய உலர்ந்த உதட்டில் லேசான புன்னகை தோன்றி மறைந்தது.
“நன்றி சார், நன்றி!” என்றான்.
பிறகு டிரெவர் வந்து விடவே, யூகி விடைபெற்றான். தான் செய்த செயலுக்குச் சற்றே நாணத்துடன் வெளியேறினான். அந்த நாளை லோராவுடன் கழித்தான். அவனது ஊதாரித்தனமான செயலுக்காகச் செல்லமாகக் கடிந்து கொண்டாள் லோரா. வீட்டுக்கு நடந்தே திரும்ப வேண்டியிருந்தது.
அன்று இரவு 11 மணி வாக்கில் பலேட் கிளப்புக்குச் சென்று யூகி, டிரெவரைப் பார்த்தான். புகைபிடிப்பவர்களுக்கான அறையில் உட்கார்நது அவன் வைன் அருந்திக் கொண்டிருந்தான்.
“என்ன அந்த ஓவியம் சரியாக வந்ததா?” என்று நண்பனின் சிகரெட்டைப் பற்றவைக்க உதவியபடியே கேட்டான்.
“முடித்து, சட்டம் போட்டுவிட்டேன், சரி, அது இருக்கட்டும். நீ ஒரு பெரிய வேலை செய்துவிட்டாய். மாடலுக்கு நின்ற அந்த வயதான ஆளுக்கு உன்னை மிகவும் பிடித்துப்போய்விட்டது. நீ யார், எங்கு வசிக்கிறாய், உன் வருவாய் என்ன, உன் எதிர்காலம் எப்படி… என உன்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லவேண்டியிருந்தது.”.
“டேய்! இப்பொழுது வீட்டுக்கு நான் திரும்பும் போது, எனக்காக அவன் அனேகமாகக் காத்திருப்பான். நீ சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறாய். பாவம் அந்தப் பிச்சைக்காரக் கிழவன். அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவ்வளவு பரிதாபமான நிலையில் இருப்பது மிகவும் கொடுமையான விஷயம். வீட்டில் நிறைய பழையத் துணிகள் வைத்திருக்கிறேன். அதில் ஏதாவது ஒன்றைத் தந்தால் வாங்குவானா? ஏன் வாங்கமாட்டான். அவன் போட்டிருந்த உடை கிழிந்து தோரணமாய்த் தொங்கிக்கொண்டிருந்தது” என்றான் யூகி.
“ஆனால், அந்த உடையில்தான் அவன் அற்புதமாக இருக்கிறான். அவனுக்குக் கோட் போட்டால் எந்த மாதிரியும் என்னால் அவனை வரைய முடியாது. நீ கந்தல்கள் என்பதை நான் காவியம் என்று சொல்வேன். உன் கண்ணுக்கு ஏழ்மையாகத் தோன்றுவது எனக்குக் கலையம்சமாகத்தெரிகிறது. எது எப்படி இருந்தாலும், நீ கொடுக்க விரும்புவதை அவனிடம் தெரிவிக்கிறேன்” என்று டிரெவர் சொன்னான்.
‘அலென், ஓவியர்களாகிய நீங்கள் எல்லோரும் இதயமற்றவர்கள்” என்று யூகி கொஞ்சம் கடுமையான தொனியில் சொன்னான்.
நிதானமாகப் பதிலளித்த டிரெவர்,
“கலைஞனின் இதயம் அவன் மூளையில் உள்ளது. மேலும், எங்கள் வேலை, நாங்கள் பார்க்கும் உலகை வடிப்பதுதான், நமக்குத் தெரிந்த அளவுக்கு அதை மாற்றுவது கிடையாது, புரிகிறதா? அவனவனுக்கு அவனவன் வேலை. போகட்டும், லோரா எப்படி இருக்கிறாள் என்று சொல். அந்த வயதான ஆள் அவளைப் பற்றி அதிகம் விசாரித்தான்”.
“அவளைப் பற்றி அவனிடம் பேசிக்கொண்டிருந்தாயா?” யூகி கேட்டான்.
“ஆமாம். பேசினேன். கறாரான இராணுவத் தளபதி, தங்கமான லோரா, 10,000 பவுண்ட் எல்லாம் அவனுக்குத் தெரியும்”.
“என் சொந்த விஷயங்கள் அத்தனையும் அந்தப் பிச்சைக்காரனிடம் சொல்லிவிட்டாயா? ” என யூகி கோபத்தில் சிவந்தான்.
சிரித்துக்கொண்டே, அமைதியாக, “அடே! நீ சொல்கிறாயே, அந்தப் பிச்சைக்காரக் கிழவன், அவன் இந்த ஐரோப்பாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவன். நினைத்தால், நாளையே தன்னிடம் உள்ள இருப்புக்கு மேல் வங்கிக் கடன் எதுவும் வாங்காமலேயே லண்டன் முழுவதையும் அவனால் வாங்கிவிட முடியும். எல்லா தலைநகரிலும் அவனுக்குச்சொந்தமாக வீடு இருக்கிறது. தங்கத் தட்டில்தான் சாப்பிடுவான். இவ்வளவு ஏன், அவன் விரும்பினால், ரஷ்யா போருக்குப் போவதைக் கூட தடுக்க முடியும்” என்று சொல்லி முடித்தான் டிரெவர்.
“என்னதான் சொல்ல வருகிறாய்?” யூகி ஆச்சரியத்தில் வாய்பிளந்தான்.
“என்ன சொல்கிறேன் என்றால், நீ இன்று ஸ்டுடீயோவில் பார்த்தது பாரன் ஹோஸ்பெர்க். எனக்கு மிகவும் வேண்டியவன். என் படங்கள் போல் மற்றப் பொருட்கள் எல்லாம் விரும்பி வாங்குபவன். அவனைப் பிச்சைக்காரனாக வைத்து ஒரு படம் வரைந்து தரமுடியுமா என்று கேட்டு ஒரு தொகையையும் சென்ற மாதம் கொடுத்திருந்தான். என்ன செய்ய சொல்கிறாய்? கோடீஸ்வரனுக்கு ஏற்பட்ட வேடிக்கையான ஆசை! சும்மா சொல்லக்கூடாது. அவனுடைய கந்தல் உடையில் – இல்லை என் கந்தல் உடையில் – அற்புதமாகப் பொருந்தினான். அந்தப் பழைய உடைகள் எனக்கு ஸ்பெயினில் கிடைத்தன” என்று டிரெவர் விளக்கினான்.
“என்ன? பாரன் ஹோஸ்பெர்க்கா?! என ஆச்சரியத்தில் கத்தினான் யூகி. “அடக் கடவுளே! அவனுக்குப்போய் நான் ஒரு பொற்காசைக் கொடுத்தேனே” என்று சொல்லியவன், ஏமாற்றத்தின் மொத்த உருவமாகச் சோபாவுக்குள் அழுந்தி உட்கார்ந்தான்.
“என்ன? அவனுக்கு ஒரு பொற்காசு கொடுத்தாயா! என்று உரக்கக் கத்திவிட்டுச் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான் டிரெவர். இங்கே கவனி. இனி உனக்கு அது கிடைக்காது. மற்றவர் பணத்தில் வாழ்வதுதான் அவனுக்கு வேலையே” என்றான்.
“என்னிடம் சொல்லியிருக்கலாமே, அலென்… இப்படி முட்டாளாகாமல் என்னைத் தடுத்திருக்கலாமே” என்றான் யூகி ஏமாற்றத்துடன்.
“யூகி! முதலில், இப்படிப் பொறுப்பற்ற முறையில் தானம் செய்வாய் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அழகான பெண் மாடல் ஒருத்திக்கு முத்தம் கொடுத்திருந்தால் என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அருவருப்பான ஆள் ஒருவனுக்குப் பொற்காசு கொடுத்தாய் என்பதைக் -கடவுள்மேல் சத்தியமாய்ப்- புரியவில்லை. மேலும், யாரிடமும் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கக்கூடிய மனநிலையில் இன்று நான் இல்லை. நீ அங்கே நுழைந்தபோது, ஹோஸ்பெர்க்குக்கும் அவன் பெயரைக் குறிப்பிடுவது, பிடித்திருக்குமா என்று சரியாக எனக்குத் தெரியவில்லை. அவன் அரைகுறை ஆடையில் இருந்ததைத்தான் நீ பார்த்தாயே!” என்று அவனுக்குச் சூழ்நிலையை விளக்கினான்.
“என்னை எந்த அளவுக்கு முண்டம் என அவன் நினைத்திருப்பான்!” என்று யூகி நொந்துகொண்டான்.
“அதுதான் கிடையாது. நீ அங்கிருந்து போனபிறகு, மிகவும் கலகலப்பாக இருந்தான். அவனுக்குள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி, தன் சுருக்கம் விழுந்த வயதான கைகளைத் தேய்த்துக்கொண்டான். உன்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள ஏன் அவ்வளவு ஆர்வம்காட்டினான் என்பது அப்பொழுது எனக்கு விளங்கவில்லை. இப்பொழுதுதான் உண்மை புரிகிறது. உனக்குப்  பதில் உன் பொற்காசை அவன் முதலீடு செய்வான். கவலைப்படாதே யூகி. ஆறு மாதத்துக்கு ஒரு முறை உனக்கு வட்டியைத் தந்து விடுவான். விருந்தின் முடிவில், ஒரு முதலீடு எப்படி வந்தது என்பதற்குப் புதிய கதை அவனுக்குக் கிடைத்துவிட்டது” என்றான் கேலியாக.
“நான் ஒரு அதிருஷ்டமில்லாத ஜென்மம்” என்று யூகி பொருமினான். “நான் இப்பொழுது உடனே செய்யக்கூடியதெல்லாம், போய் பேசாமல் தூங்குவதுதான். டேய் அலென், இதை யாருக்கும் சொல்லாதே. அப்புறம் இந்த ரோ பகுதியில் என்னால் தலைகாட்ட முடியாது”.
“என்ன பேசுகிறாய்! யூகி உன் தயாள குணத்தைப் பிரதிபலிக்கும் செயல்தான் இது. எங்கும் ஓடாதே. இதோ இன்னும் ஒரு சிகரெட்டைப் பிடி. லோரா பற்றி உன் விருப்பத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பேசு” என்று டிரெவர் அவனைச் சமாதானம் செய்தான்.
என்ன சொல்லியும் அவனை நிறுத்த முடியவில்லை. யூகி தன் வீட்டிற்கு நடந்தே போனான். மிகவும் சோகமாகக்  காணப்பட்ட நண்பன் சென்ற பிறகும் டிரெவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை, சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யூகியின் பணிப்பெண் ஒரு அட்டையைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். அதில், 'திரு. பாரன் ஹோஸ்பெர்க் சார்பாக வந்துள்ள திரு. குய்ஸ்தாவ் நொதேன்' என எழுதியிருந்தது.
“மன்னிப்புக் கேட்கும்படி சொல்ல வந்திருப்பான்” என யூகி நினைத்தான். வந்துள்ள விருந்தினரை மேலே அனுப்பும்படிப் பணிப்பெண்ணிடம் கூறினான்.
வயதான நபர் ஒருவர் சாம்பல் நிற முடியுடன், தங்க நிறத்தில் கண்ணாடி அணிந்து, அறைக்குள் நுழைந்தார். அவருடைய பேச்சில் பிரஞ்சு வாடை கொஞ்சம் வீசியது. “மிசியே எர்க்ஸ்க்சீனிடம்தான் பேசிக்கொண்டிருந்கிறேனா?” எனக் கேட்டார்.
யூகி தலைவணங்கி, ஆமாம் என ஆமோதித்தான்.
“பாரன் ஹோஸ்பெர்க் அனுப்பினார்” என்று சொன்னவர் தொடர்ந்து, “பாரன்….” என எதையோ பேசத் தொடங்கும்முன்,
“சார், தயவு செய்து அவரிடம் என் மனப்பூர்வமான வருத்தங்களைத் தெரிவித்து விடுங்கள்” என சொன்ன யூகிக்கு வார்த்தைகள் தடுமாறின.
வந்தவர் சிரித்துக்கொண்டே, “இந்தக் கடிதத்தை உங்களிடம் தருவதற்குத்தான் என்னைப் பாரன் அனுப்பியிருக்கிறார்” என்று சொல்லி, ஒட்டப்பட்ட கவர் ஒன்றை அவனிடம் அளித்தார்.
அந்த உறைக்கு வெளியே, “யூகி எர்க்ஸீனுக்கும் லோராவுக்கும் வயதான பிச்சைக்காரர் ஒருவரின் திருமண அன்பளிப்பு” என எழுதியிருந்தது. உள்ளே 10,000 பவுண்டுக்கான காசோலை இருந்தது.
அவர்களுடைய திருமணம் நடந்தபோது அலென் டிரெவர்தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான். திருமண வரவேற்பின்போது நடந்த விருந்தில் கலந்துகொண்ட பாரன், மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
“கோடீஸ்வர மாதிரிகள் மிகவும் அரிதாகத்தான் கிடைக்கின்றனர். ஆனால், கடவுள்மேல் ஆணையாகச் சொல்கிறேன், மாதிரி கோடீஸ்வரர்கள் கிடைப்பது அதைவிட அரிதாகிவிட்டது” என்று குறிப்பிட்டார்.
……..
ஆஸ்கார் வைல்ட் (1854 - 1900)
புகழ்பெற்ற எழுத்தாளரான ஆஸ்கார் வைல்ட் அயர்லாந்தைச் சேர்ந்தவர். புதினம், சிறுகதை, கவிதை, நாடகம் என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் மிளிர்ந்தவர்.
“எல்லாப்  புனிதருக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு
எல்லாக் குற்றவாளிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு”.
“உலகில் இரண்டே துயரங்கள்தான் உள்ளன. ஒன்று, தான் விரும்பியதை அடைய முடியாமல் போவது, இரண்டாவது, தான் விரும்பியதை அடைந்துவிடுவது”.
எனப் பல முத்திரை வாசகங்களை உதிர்த்தவர்.

17.12.23

இறந்த பின்...

இறந்த பின் செய்யப்படும் பந்தம் பிடித்தல், பால் ஊற்றுதல், கருமாதி திதி முதலான எல்லாச் சடங்குகளையும் உளமார வெறுக்கிறேன். அஸ்தியை ஆற்றில் கரைத்தலையும் வெறுக்கிறேன். அன்னதானம் என்ற பெயரில் நடக்கும் பல விளம்பரச் செயல்களையும் வெறுக்கிறேன். மெய்யாகவே பசித்தவர் இடம் தேடிச்சென்று பத்துப் பேருக்குத் தரும் உணவும் உதவியும் மட்டுமே உயர்ந்தவை. இறந்தவர் படங்களை வைத்து அமாவாசை முதலான சிறப்பு நாள்களில் படைத்தல் தீயதிலும் தீயது. இறந்தவர்கள் படங்களை சுவர்மேல் மாட்டுவதை என் துணைவியார் கலாவதி மிகவும் வெறுத்தார். ஒருவர் இருக்கும் வரை இயன்றவரை நன்றாகக் கவனித்தாலே போதும் என்று அடிக்கடி என்னிடம் சொன்னார். என் கருத்தும் அதுவே. இறந்தவர்கள் நினைவான அறச்செயல்களை எந்த நாள் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் விளம்பரமின்றிச் செய்யலாம்.

16.12.23

பனிக்காலமே நல்லது!

"பனிக்காலமே நல்லது."
பனிக்கு+ஆலமே நல்லது.
ஆலம் = கொடிய நஞ்சு (கடும் விஷம்)

இறுமாப்பு

இறுமாப்பு மிகுந்த
விண்மீன்
கறுத்து
எரிகல்லாய்த்
தரம்தாழ்ந்து
பொறுமை நிறைந்த
பூமிமேல் 
உறுத்து வீழ
நேரம் பார்க்கிறது.
- தேவமைந்தன்

16.10.23

அகதியாக அப்பா...

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பர்மா அகதியாகக் கோவைக்கு வந்தபின் அப்பாவுக்கு ஆறுதல் மிகவும் தேவைப்பட்டிருக்கிறது. மறுகுடியமர்த்தச் சான்றிதழ்(Repatriate certificate) பெறுவதற்காகச் சென்னைக்குச் சென்றிருக்கிறார். ஊழலற்ற அரசு இருந்ததால் போன அன்றே சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அடுத்து, தனக்குப் பிடித்த சுவாமி விவேகானந்தரின் இந்தப் புத்தகத்தை 29/6/1946 அன்று வாங்கிக்கொண்டு கோவை திரும்பியிருக்கிறார். அதில் தன் பர்மா நிறுவனமான ஓரியண்டல் நிட்டிங் ஃபேக்டரி முத்திரை குத்தியிருக்கிறார். ஏராளமான செல்வம், இரண்டு கார்கள் எல்லாமிழந்து, எங்களை 'ஐராவதி' என்ற கப்பலில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, தன் நண்பர்களான கண.முத்தையா செட்டியார், வெ.சாமிநாத சர்மா முதலானோரோடு சிரபுஞ்சி வழியே நடைப்பயணமாக காஷ்மீர் வழியாக இந்தியா வந்திருக்கிறார் தந்தை இரங்கூன் பி.கே. அண்ணார். இதைத் திண்ணை.காம் வலையேட்டில் கட்டுரையாக எழுதியிருக்கிறேன். திண்ணை.காம் வலையேட்டின் முன்னை ஆசிரியரான திருவாளர் கோபால் ராஜாராம் பெருமைப்படுத்திப் பதிப்பித்தார். பி.கே.அண்ணன் என்று நான் தட்டெழுதியதைத் திருத்தி 'ஒரு மனிதரின் வாழ்க்கை: பி.கே.அண்ணார்' என்ற தலைப்பில் வெளியிட்டார். அப்போது அவர் அமெரிக்கா, நியூ ஜெர்சியில் பணியாற்றினார். என் தந்தை மீதிருந்த அன்பால், நாகரத்தினம் கிருஷ்ணாவின் புகழ்மிக்க நாவல் 'நீலக்கடல்' குறித்த என் வயணமான  கட்டுரையை வெளியிட்டபோது அட்டைப்படமாக என் படத்தை வெளியிட்டார். அகதியான தந்தையைப் பற்றி ஒரு பேராசிரியர் இவ்வளவு ஆழமாக எழுதியிருந்தார் என்ற அன்பாலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' குறித்த கட்டுரையைப் பாராட்டுமுகமாகவும் என் படத்தை வெளியிட்டதாக அவர் குடும்பத் திருமணத்தின்போது அறிந்து கொண்டேன்.


23.3.22

திருக்குறள் ஒப்புமை காட்டும் தீயநட்பு வகை

உறுவது சீர்தூக்கு[ம்] நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு[ம்] நேர்

(திருக்குறள். தீ நட்பு 3)

நட்பின் அளவைப் பாராமல்,  அந்நட்பால் தமக்கு வரும் பயனின் அளவை மட்டுமே நோக்கும் நண்பரும்; கொடுப்பவர் குணத்தைக் கருத்தில் கொள்ளாது, அவர் கொடுக்கும் பொருளின் அளவை மட்டுமே கவனத்திற் கொள்ளும் பொதுமகளிரும்; பிறர் அடையவுள்ள கேடு நோக்காது, அவர் சோர்ந்திருப்பதை மட்டுமே அவதானிக்கும் கள்வரும் --- தம்முள் ஒரே இயல்பை உடையவர்களே!

கொடுக்கும் பொருள் - விலை. இதனாலேயே கணிகையர்களுக்கு (தாசிகள்) விலைமாதர் என்ற பெயர் வந்தது. தீய நண்பர்கள் பயனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வஞ்சித்து நடந்து கொள்வதால் விலைமாதர் கள்வர் ஆகியோரோடு ஒப்பாயினர்.

26.10.21

சாதி சமய சழக்கை விட்ட ஆல்வள்ளி...

 *சாதிசமயச் சழக்கு*கள் இல்லாத ஆல்வள்ளி, தோட்டத்தில் தென்னையின்மேல் *விட்டு விடுதலையாக*ப் படர்ந்திருக்கிறது.

#உயர்பிறவி

24.10.21

"நா! காந்தி பக்தனுங்கோ..."

அண்மையில் திருவாளர் சுப்பிரமணியன் சுவாமி காந்தியடிகளை 'பிராமணர்' என்று தன் ஆய்வுப் பேச்சொன்றில் சொல்லியுள்ளார். திருவாளர் சொக்கு சுப்பிரமணியன் புதுச்சேரியில் நடத்திய 'வண்ணங்கள்' என்ற சிற்றேட்டின் சிறப்பு வெளியீடான 'ஊமைக் காயங்கள்' என்ற கையேட்டில் இச்சேதியை - 'நா! காந்தி பக்தனுங்கோ...' என்ற கவிதைவழி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலப்படுத்தியுள்ளேன். இதை என் கவனத்துக்குக்ண கொண்டு வந்தவர் புதுச்சேரி உளவியல் மருத்துவர் எஸ்.இலட்சுமணன் அவர்கள்.அவருக்கு மிக்க நன்றி. - தேவமைந்தன்

31.7.20

கவி கோ.கமலக்கண்ணன் நூலுக்கு தமிழ்மாமணி க.நாராயணன் அணிந்துரை

*திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை* இயற்றியவர் கவி கோ.கமலக்கண்ணன் @Kamalakkannan Govindhan அணிந்துரை தமிழ்மாமணி பேராசிரியர் டாக்டர் க.நாராயணன், M.A(Phil),M.A(Psych),M.Ed,Phd., புதுச்சேரி-18-04-2001 --------------------------------------------------------------------------------------------------------------------- #உலகம், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனைச் சுற்றி வருகிறது என்பது அறிவியல் உண்மை.தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு,பகல் போன்ற மாற்றங்களும் கதிரவனைச் சுற்றி வருவதால் வெப்பம், காற்று ,மழை பருவகாலம் போன்ற மாற்றங்களும் புறத்தளவில் நிகழ்கின்றன.இம்மாற்றங்களுக்கேற்ப மனிதன் தன் புறத்தளவில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறான். அறிவியல் வளர்ச்சியும் தொழில்துறை நுட்பங்களும் மனித வாழ்வில் அளப்பரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மனித வாழ்க்கைச் சூழலையும் இன்றுள்ள மனித வாழ்க்கைச் சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனித வாழ்க்கை வியத்தகு மாற்றங்களினூடே நடந்து வந்திருப்பதை உணரக்கூடும்.இத்தகைய மாற்றங்களினூடே நடந்து வந்த மனிதன் பலவற்றை இழந்திருக்கிறான்.சிலவற்றை மறந்திருக்கிறான்.சிலவற்றைப் புதிதாக உருவாக்கிக் கொண்டுள்ளான்.இத்துணை மாற்றங்களினூடேயும் மனிதனின் இறைநம்பிக்கையும் அதன் வெளிப்பாடான ஆன்மிகமும் பக்தியும் மாறாதிருக்கின்றன. இறைமறுப்பாளர்கள் கூட ஆன்மிகம் என்ற போர்வையில் தம் துன்பக்குளிரைப் போக்கிக்கொள்ள முற்படுகின்றனர். ஆன்மிகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பக்தி எனும் நீள்வட்டப் பாதைவழி இறை நம்பிக்கை எனும் கதிரவனை சுற்றி வருகிறதெனலாம்.ஆன்மிகம் எனும் தற்சுழச்சி இல்லை என்றால் பக்தி எனும் நடைபாதை பயனற்று புதர்கள் மண்டிப் பாழ்பட்டுப் போய்விடும்.பக்தி எனும் பாதை இல்லை என்றால் ஆன்மிகம் செல்லும் திசையறியாத வீண்பயணம் ஆகிவிடும்.இறை நம்பிக்கையைச் சுற்றிச் செல்லாத ஆன்மிகமும் பக்தியும் மனித மனத்தைச் செம்மைப் படுத்தாத வெற்றுச் சடங்குகளாகிவிடும். புறத்தளவில் பரபரப்பும் அகத்தளவில் மன உளைச்சலும் மிகுந்ததாக இன்றைய மனித வாழ்க்கை அமைந்துள்ளது.பணப்பெருக்கம் ,பொருள்வசதி எனப் பரபரப்பாக அலையும் மனிதனை நிலைப்படுத்தவும் மனப்புழுக்கத்தில் ஆழ்ந்து மூச்சுத்திணரும் மனிதனை அமைதிப்படுத்தவும் ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் இன்றி வேறு வழியில்லை . உண்மையான ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் மனிதனுக்கு அமைதியையும் உள்ளார்ந்த ஆனந்தத்தையும் தரும். ஆன்மிக நெறியையும்,பக்தி நெறியையும் செம்மைப்படுத்திச் சீர்தூக்கும் நிலையான முயற்சியில் ஈடுபட வேண்டும்.சமுதாயத்தின் பல துறைகளிலும் நன்னெறி தழைக்க வழிகாண வேண்டும்.அத்தகைய முயற்சிகளுள் ஒன்றுதான் ஆன்மிகம்,பக்தி ஆகிய நெறிகளைச் சார்ந்த நூல்கள் எழுதி வெளியிடுவது ஆகும்.இந்த அரிய முயற்சிக்கு ஒரு படியாக அமைவது என் இனிய நண்பர் கவி கோ.கமலக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ள 'திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை' எனும் இந்நூல் ஆகும். நூலாசிரியர் கமலக்கண்ணன் இந்நூலைப் பத்ரகாளியம்மன் வரலாறு,அற்புதங்கள்,புகழ்மாலை,போற்றிப் பாடல்கள்,சரணம் ஆகிய ஐந்து பகுதிகளாக அமைத்து எழுதியுள்ளார்.பத்ரகாளியம்மன் திருக்களாச்சேரியில் எழுந்தருளிய வரலாற்றையும் அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்ட அரிய செயலையும் அன்னையவள் அன்பர்கள் பலரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களையும்,அன்னையை வழிபட வகை செய்யும் போற்றிப் பாடல்களையும் அன்னையின் பெருமையைக் கூறும் புகழ்ப்பாடல்களையும் கூறிப் படிப்போர் நெஞ்சில் பக்தியையும் பத்ரகாளியைக் காணவேண்டும் என்ற வேட்கையையும் தருவதாக இந்நூல் அமைந்துள்ளது.எனவே இந்நூலைத் திருக்களாச்சேரி *பத்ரகாளியம்மன் ஆற்றுப்படை* என்றும் கொள்ளலாம் திரு.கமலக்கண்ணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதை இந்நூல் வழி அறிய முடிகிறது.அவருடைய மொழிப்பற்று இந்நூலில் பத்ரகாளியம்மன் புகழ்மாலை என்ற பகுதியில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுகிறது.எடுத்துக்காட்டாக சிலவற்றைக் கூறலாம். 'இன்பத்தமிழில் இசைபாடி'(8) 'பழகு தமிழில் பாட்டெழுதி'(15) 'உருகித் தமிழில் துதிபாட'(36) 'கரும்பில் தேனைக் கலந்தெடுத்துத் தருமென் மொழியே'(40)'தென்பால் தமிழால் உனைப்பாடும்'(41) தமிழைக் குணமாய்க் கொண்டவளே'(44) 'நல்ல தமிழால் நாமுறைப்போம்'(54) 'தெள்ளுதமிழால் வழிபட்டால்'(86) 'செந்தமிழ்ப் பாட்டில் மயங்கிடுவாள்'(104) இத்தொடர்களெள்ளாம் ஆசிரியர் கொண்டுள்ள மொழிப்பற்றுக்குச் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. கடவுளுக்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற வினா ஓயாது ஒளிக்கின்ற வினா.உண்டென்பாரும் இல்லை என்பாரும் தத்தம் புலமைக்கேற்ப வாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இதுவெறும் வாதத்தோடு நிற்காமல் சில மனிதர்களை நாகரிகமற்ற செயல்களுக்கும் இழுத்துச் சென்றுவிடுவதைக் காண்கிறோம். ஒருபொருள்,உருவமாகவும் இருக்கக்கூடும் அருவமாகவும் இருக்கக்கூடும் என்பதை இயற்பியல் அறிவியல் ஏற்றுக் கொள்கிறது.தலவரலாற்றைக் கூறும் ஆசிரியர் திருக்களாச்சேரி பத்ரகாளியம்மன் அருவ,உருவ,அருவுருவ நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாங்கினை சிறப்பாகப் பொருத்திக் காட்டியுள்ளார்.பத்ரகாளி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதை அருவநிலை என்றும்,பூசைவிழாவின் போது அருள்பாலிப்பதை உருவநிலை என்றும் பூசைவிழா முடிந்தபின் பேழையுள் இருந்து அருள்தருவதை அருவுருவ நிலை என்றும் ஆசிரியர் பொருத்திக் காட்டுவது பாராட்டிற்குரியது. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் கூறுவது போல இறைவனை வணங்கவும் வழிபடவுங்கூட இறைவன் அருள் இருந்தால்தான் இயலும்,வாய்ப்புகள் இருந்தும் பொருள்வசதி இருந்தும் இறைவனின் அருட்பார்வை இல்லையெனின் இறைவனை வணங்க இயலாது என்பது மாணிக்கவாசகர் கருத்து.நூலாசிரியருக்கு அன்னையின் அருள் வழிகாட்டியாக இருந்திருக்கிறது.இவ்வருளே அன்னையின் அருள்பெற்றுப் பயனுற்ற பலரை நூலாசிரியருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.அடியவரைக் காண்பது ஆண்டவனைக் காண்பதிலும் சிறந்தது என்பர்.திரு.கமலக்கண்ணன் அன்னையின் அருள்பெற்ற பல அடியவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.இவ்வற்புதங்கள் வாயிலாக அன்னையின் அருள் பலருக்கும் கிட்ட நூலாசிரியர் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். பத்ரகாளியம்மனின் பல்வேறு திருப்பெயர்களையும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் எழுதியுள்ள போற்றிப்பாடல் பலவகையிலும் சிறப்புடையது.பக்தனின் உணர்வை இறைவன் அறிந்து கொள்ள மொழி தேவையே இல்லை.இறைவன் உள்ளத்தின் உள்ளெழும் உணர்வுகளைக் காண்கிறானே தவிர உதட்டிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கேட்பதில்லை.மொழி வழியாகத் தன் உணர்வுகளைக் கொட்டுவது மனிதனின் இயல்பு.அவரவர் அறிந்த மொழியிலே உணர்வுகளை வெளிப்படுத்தி வழிபடுவதே இயல்பான வழி.இந்த மொழிதான் உகந்தது என்று கூறி ஒரு மொழியை உயர்த்தியும் பிற மொழியைத் தாழ்த்தியும் பேசுவது மனிதனின் அறியாமையையும் குறுகிய மனப்பான்மையையும் காட்டுகிறது.பொருளறிவு வாராத மழலைச் சொல்லிலும் மானுடத்தாய் மகிழ்வதைக் காண்கிறோம்.பால்நினைந்தூட்டும் தெய்வத்தாய் நாம் எண்ணினாலே புரிந்துகொண்டு அருள்செய்வாள் எனின் தமிழில் வேண்டினால் செவிசாய்க்க மாட்டாளா? தமிழில் வழிபாடு செய்ய ஊக்கம்தரும் வகையில் இப்போற்றிப் பகுதியில் உள்ள பாடல்கள் இயற்றப்பட்டன. அகவழிபாடாகவோ புறவழிபாடாகவோ அன்னையின் திருவடிகளில் மலர்கள் தூவியோ குங்குமம் தூவியோ வழிபாடு செய்ய விரும்பும் அன்பர்கட்குத் துணை செய்யும் வகையில் அழகிய தமிழில் 'போற்றி போற்றி'என முடியும் வண்ணம் துதிப்பாடலை இயற்றியுள்ளார்.இப்பாடலை அன்பர்கள் அன்றாட வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். புகழ்மாலையில் உள்ள பாடல்கள் கருத்துச் செறிவும் ,சொல்வளமும் ஓசைநயமும் உள்ளவை.உள்ளதை உள்ளவாறு பிறர் உணரும் வண்ணம் கூறுவது அரிய கலை.ஆசிரியருக்கு உள்ள இந்த ஆற்றல் நூலின் பல பாடல்களில் வெளிப்பட்டாலும் குறிப்பாக பூசைநாளில் பத்ரகாளியின் அலங்காரத்தை விவரிக்கும் போது சிறப்பாக வெளிப்படுகிறது.பூசைநாளில் திருக்களாச்சேரி செல்ல இயலாதவர்களும்,செல்ல வாய்ப்பில்லாதவரும்,சென்றாலும் அருகிருந்து கண்டுகளிக்க முடியாதவரும் தம் மனக்கண்ணால் கண்டுகளிக்கும் வண்ணம் அழகாக உரைத்துள்ளார். சொல்வளமும் கருத்தாழமும் மிக்க பாடல்கள் பல இருப்பினும் என் இதயத்துள் சென்று குறுதியில் கலந்த இரு பாடல்களை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சேற்றில் உழன்ற பாவியென்னைத் தேற்றிக் கரும வினையகற்றிப் போற்றிப் பாட வைத்தவளே ஏற்றி வைத்தேன் இதயத்தில் (63) தாயினும் மேலாய்ப் பரிந்தென்றன் வாயினால் பாடத் தமிழ்தந்தாய் ஓய்விலா துனையே நினைக்கின்ற தேய்விலா அறிவைத் தந்திடம்மா (85) கருத்தோட்டமும் ஓசைநயமும் மிக்க பாடல்களும் புகழ்மாலைப் பகுதியில் நிறைந்துள்ளன.பின்வரும் இரு பாடல்களும் வாய்விட்டுப் படிக்கும் போது என் செவிவழி புகுந்து உள்ளத்திற்கு இன்பம் தந்தன.சான்றுக்காக அவற்றைக் குறிப்பிடுகின்றேன். துடித்தேன் துன்பம் மனம்பிழிய வடித்தேன் கண்ணீர் விழிவழிய படித்தேன் அமுதாய் நீவந்தாய் பிடித்தேன் பாதம் நீகாத்தாய்(47) எப்பிழை புரிந்துநான் இருந்தாலும் அப்பிழை பொறுத்திடும் அம்மைநீ எப்பிறப் பெடுத்துநான் வந்தாலும் அப்பனும் அம்மையும் நீயம்மா(81) அன்பன் க.நாராயணன் *திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை* இயற்றியவர் கவி கோ.கமலக்கண்ணன் @Kamalakkannan Govindhan அணிந்துரை தமிழ்மாமணி பேராசிரியர் டாக்டர் க.நாராயணன், M.A(Phil),M.A(Psych),M.Ed,Phd., புதுச்சேரி-18-04-2001 உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனைச் சுற்றி வருகிறது என்பது அறிவியல் உண்மை.தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு,பகல் போன்ற மாற்றங்களும் கதிரவனைச் சுற்றி வருவதால் வெப்பம், காற்று ,மழை பருவகாலம் போன்ற மாற்றங்களும் புறத்தளவில் நிகழ்கின்றன.இம்மாற்றங்களுக்கேற்ப மனிதன் தன் புறத்தளவில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறான். அறிவியல் வளர்ச்சியும் தொழில்துறை நுட்பங்களும் மனித வாழ்வில் அளப்பரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மனித வாழ்க்கைச் சூழலையும் இன்றுள்ள மனித வாழ்க்கைச் சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனித வாழ்க்கை வியத்தகு மாற்றங்களினூடே நடந்து வந்திருப்பதை உணரக்கூடும்.இத்தகைய மாற்றங்களினூடே நடந்து வந்த மனிதன் பலவற்றை இழந்திருக்கிறான்.சிலவற்றை மறந்திருக்கிறான்.சிலவற்றைப் புதிதாக உருவாக்கிக் கொண்டுள்ளான்.இத்துணை மாற்றங்களினூடேயும் மனிதனின் இறைநம்பிக்கையும் அதன் வெளிப்பாடான ஆன்மிகமும் பக்தியும் மாறாதிருக்கின்றன. இறைமறுப்பாளர்கள் கூட ஆன்மிகம் என்ற போர்வையில் தம் துன்பக்குளிரைப் போக்கிக்கொள்ள முற்படுகின்றனர். ஆன்மிகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பக்தி எனும் நீள்வட்டப் பாதைவழி இறை நம்பிக்கை எனும் கதிரவனை சுற்றி வருகிறதெனலாம்.ஆன்மிகம் எனும் தற்சுழச்சி இல்லை என்றால் பக்தி எனும் நடைபாதை பயனற்று புதர்கள் மண்டிப் பாழ்பட்டுப் போய்விடும்.பக்தி எனும் பாதை இல்லை என்றால் ஆன்மிகம் செல்லும் திசையறியாத வீண்பயணம் ஆகிவிடும்.இறை நம்பிக்கையைச் சுற்றிச் செல்லாத ஆன்மிகமும் பக்தியும் மனித மனத்தைச் செம்மைப் படுத்தாத வெற்றுச் சடங்குகளாகிவிடும். புறத்தளவில் பரபரப்பும் அகத்தளவில் மன உளைச்சலும் மிகுந்ததாக இன்றைய மனித வாழ்க்கை அமைந்துள்ளது.பணப்பெருக்கம் ,பொருள்வசதி எனப் பரபரப்பாக அலையும் மனிதனை நிலைப்படுத்தவும் மனப்புழுக்கத்தில் ஆழ்ந்து மூச்சுத்திணரும் மனிதனை அமைதிப்படுத்தவும் ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் இன்றி வேறு வழியில்லை . உண்மையான ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் மனிதனுக்கு அமைதியையும் உள்ளார்ந்த ஆனந்தத்தையும் தரும். ஆன்மிக நெறியையும்,பக்தி நெறியையும் செம்மைப்படுத்திச் சீர்தூக்கும் நிலையான முயற்சியில் ஈடுபட வேண்டும்.சமுதாயத்தின் பல துறைகளிலும் நன்னெறி தழைக்க வழிகாண வேண்டும்.அத்தகைய முயற்சிகளுள் ஒன்றுதான் ஆன்மிகம்,பக்தி ஆகிய நெறிகளைச் சார்ந்த நூல்கள் எழுதி வெளியிடுவது ஆகும்.இந்த அரிய முயற்சிக்கு ஒரு படியாக அமைவது என் இனிய நண்பர் கவி கோ.கமலக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ள 'திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை' எனும் இந்நூல் ஆகும். நூலாசிரியர் கமலக்கண்ணன் இந்நூலைப் பத்ரகாளியம்மன் வரலாறு,அற்புதங்கள்,புகழ்மாலை,போற்றிப் பாடல்கள்,சரணம் ஆகிய ஐந்து பகுதிகளாக அமைத்து எழுதியுள்ளார்.பத்ரகாளியம்மன் திருக்களாச்சேரியில் எழுந்தருளிய வரலாற்றையும் அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்ட அரிய செயலையும் அன்னையவள் அன்பர்கள் பலரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களையும்,அன்னையை வழிபட வகை செய்யும் போற்றிப் பாடல்களையும் அன்னையின் பெருமையைக் கூறும் புகழ்ப்பாடல்களையும் கூறிப் படிப்போர் நெஞ்சில் பக்தியையும் பத்ரகாளியைக் காணவேண்டும் என்ற வேட்கையையும் தருவதாக இந்நூல் அமைந்துள்ளது.எனவே இந்நூலைத் திருக்களாச்சேரி *பத்ரகாளியம்மன் ஆற்றுப்படை* என்றும் கொள்ளலாம் திரு.கமலக்கண்ணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதை இந்நூல் வழி அறிய முடிகிறது.அவருடைய மொழிப்பற்று இந்நூலில் பத்ரகாளியம்மன் புகழ்மாலை என்ற பகுதியில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுகிறது.எடுத்துக்காட்டாக சிலவற்றைக் கூறலாம். 'இன்பத்தமிழில் இசைபாடி'(8) 'பழகு தமிழில் பாட்டெழுதி'(15) 'உருகித் தமிழில் துதிபாட'(36) 'கரும்பில் தேனைக் கலந்தெடுத்துத் தருமென் மொழியே'(40)'தென்பால் தமிழால் உனைப்பாடும்'(41) தமிழைக் குணமாய்க் கொண்டவளே'(44) 'நல்ல தமிழால் நாமுறைப்போம்'(54) 'தெள்ளுதமிழால் வழிபட்டால்'(86) 'செந்தமிழ்ப் பாட்டில் மயங்கிடுவாள்'(104) இத்தொடர்களெள்ளாம் ஆசிரியர் கொண்டுள்ள மொழிப்பற்றுக்குச் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. கடவுளுக்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற வினா ஓயாது ஒளிக்கின்ற வினா.உண்டென்பாரும் இல்லை என்பாரும் தத்தம் புலமைக்கேற்ப வாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இதுவெறும் வாதத்தோடு நிற்காமல் சில மனிதர்களை நாகரிகமற்ற செயல்களுக்கும் இழுத்துச் சென்றுவிடுவதைக் காண்கிறோம். ஒருபொருள்,உருவமாகவும் இருக்கக்கூடும் அருவமாகவும் இருக்கக்கூடும் என்பதை இயற்பியல் அறிவியல் ஏற்றுக் கொள்கிறது.தலவரலாற்றைக் கூறும் ஆசிரியர் திருக்களாச்சேரி பத்ரகாளியம்மன் அருவ,உருவ,அருவுருவ நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாங்கினை சிறப்பாகப் பொருத்திக் காட்டியுள்ளார்.பத்ரகாளி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதை அருவநிலை என்றும்,பூசைவிழாவின் போது அருள்பாலிப்பதை உருவநிலை என்றும் பூசைவிழா முடிந்தபின் பேழையுள் இருந்து அருள்தருவதை அருவுருவ நிலை என்றும் ஆசிரியர் பொருத்திக் காட்டுவது பாராட்டிற்குரியது. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் கூறுவது போல இறைவனை வணங்கவும் வழிபடவுங்கூட இறைவன் அருள் இருந்தால்தான் இயலும்,வாய்ப்புகள் இருந்தும் பொருள்வசதி இருந்தும் இறைவனின் அருட்பார்வை இல்லையெனின் இறைவனை வணங்க இயலாது என்பது மாணிக்கவாசகர் கருத்து.நூலாசிரியருக்கு அன்னையின் அருள் வழிகாட்டியாக இருந்திருக்கிறது.இவ்வருளே அன்னையின் அருள்பெற்றுப் பயனுற்ற பலரை நூலாசிரியருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.அடியவரைக் காண்பது ஆண்டவனைக் காண்பதிலும் சிறந்தது என்பர்.திரு.கமலக்கண்ணன் அன்னையின் அருள்பெற்ற பல அடியவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.இவ்வற்புதங்கள் வாயிலாக அன்னையின் அருள் பலருக்கும் கிட்ட நூலாசிரியர் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். பத்ரகாளியம்மனின் பல்வேறு திருப்பெயர்களையும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் எழுதியுள்ள போற்றிப்பாடல் பலவகையிலும் சிறப்புடையது.பக்தனின் உணர்வை இறைவன் அறிந்து கொள்ள மொழி தேவையே இல்லை.இறைவன் உள்ளத்தின் உள்ளெழும் உணர்வுகளைக் காண்கிறானே தவிர உதட்டிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கேட்பதில்லை.மொழி வழியாகத் தன் உணர்வுகளைக் கொட்டுவது மனிதனின் இயல்பு.அவரவர் அறிந்த மொழியிலே உணர்வுகளை வெளிப்படுத்தி வழிபடுவதே இயல்பான வழி.இந்த மொழிதான் உகந்தது என்று கூறி ஒரு மொழியை உயர்த்தியும் பிற மொழியைத் தாழ்த்தியும் பேசுவது மனிதனின் அறியாமையையும் குறுகிய மனப்பான்மையையும் காட்டுகிறது.பொருளறிவு வாராத மழலைச் சொல்லிலும் மானுடத்தாய் மகிழ்வதைக் காண்கிறோம்.பால்நினைந்தூட்டும் தெய்வத்தாய் நாம் எண்ணினாலே புரிந்துகொண்டு அருள்செய்வாள் எனின் தமிழில் வேண்டினால் செவிசாய்க்க மாட்டாளா? தமிழில் வழிபாடு செய்ய ஊக்கம்தரும் வகையில் இப்போற்றிப் பகுதியில் உள்ள பாடல்கள் இயற்றப்பட்டன. அகவழிபாடாகவோ புறவழிபாடாகவோ அன்னையின் திருவடிகளில் மலர்கள் தூவியோ குங்குமம் தூவியோ வழிபாடு செய்ய விரும்பும் அன்பர்கட்குத் துணை செய்யும் வகையில் அழகிய தமிழில் 'போற்றி போற்றி'என முடியும் வண்ணம் துதிப்பாடலை இயற்றியுள்ளார்.இப்பாடலை அன்பர்கள் அன்றாட வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். புகழ்மாலையில் உள்ள பாடல்கள் கருத்துச் செறிவும் ,சொல்வளமும் ஓசைநயமும் உள்ளவை.உள்ளதை உள்ளவாறு பிறர் உணரும் வண்ணம் கூறுவது அரிய கலை.ஆசிரியருக்கு உள்ள இந்த ஆற்றல் நூலின் பல பாடல்களில் வெளிப்பட்டாலும் குறிப்பாக பூசைநாளில் பத்ரகாளியின் அலங்காரத்தை விவரிக்கும் போது சிறப்பாக வெளிப்படுகிறது.பூசைநாளில் திருக்களாச்சேரி செல்ல இயலாதவர்களும்,செல்ல வாய்ப்பில்லாதவரும்,சென்றாலும் அருகிருந்து கண்டுகளிக்க முடியாதவரும் தம் மனக்கண்ணால் கண்டுகளிக்கும் வண்ணம் அழகாக உரைத்துள்ளார். சொல்வளமும் கருத்தாழமும் மிக்க பாடல்கள் பல இருப்பினும் என் இதயத்துள் சென்று குறுதியில் கலந்த இரு பாடல்களை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சேற்றில் உழன்ற பாவியென்னைத் தேற்றிக் கரும வினையகற்றிப் போற்றிப் பாட வைத்தவளே ஏற்றி வைத்தேன் இதயத்தில் (63) தாயினும் மேலாய்ப் பரிந்தென்றன் வாயினால் பாடத் தமிழ்தந்தாய் ஓய்விலா துனையே நினைக்கின்ற தேய்விலா அறிவைத் தந்திடம்மா (85) கருத்தோட்டமும் ஓசைநயமும் மிக்க பாடல்களும் புகழ்மாலைப் பகுதியில் நிறைந்துள்ளன.பின்வரும் இரு பாடல்களும் வாய்விட்டுப் படிக்கும் போது என் செவிவழி புகுந்து உள்ளத்திற்கு இன்பம் தந்தன.சான்றுக்காக அவற்றைக் குறிப்பிடுகின்றேன். துடித்தேன் துன்பம் மனம்பிழிய வடித்தேன் கண்ணீர் விழிவழிய படித்தேன் அமுதாய் நீவந்தாய் பிடித்தேன் பாதம் நீகாத்தாய்(47) எப்பிழை புரிந்துநான் இருந்தாலும் அப்பிழை பொறுத்திடும் அம்மைநீ எப்பிறப் பெடுத்துநான் வந்தாலும் அப்பனும் அம்மையும் நீயம்மா(81) அன்பன் க.நாராயணன்

21.10.18

institut francais Pondicherry library

institut francaise Pondicherry (ifP)
All of my articles in websites are from the materials provided by this institution. I thank the Librarian, Asst.Librarians - Monsieur Saravanane, Monsieur Ramanujam and others who extended their wholehearted cooperation to me.
This is the sacred place where I met GOPALAIYYAR('Gopalayyan' he used to name him) and Pulavar VILLIANUR VENKATESAN.

நிகழ் உலகம்!

கருவறைக்குள் முடங்கிக்
கிடந்த கிடப்பே மேல்.
- தேவமைந்தன்

18.10.18

மோனஞானம் ~ ஓர் இணர்

'எதை வெறுக்கிறோமோ, அதையே பின்னர் விரும்புகிறோம். எதை விரும்புகிறோமோ, அதையே ஒரு காலத்தில் வெறுக்கிறோம். எதிரெதிரான உணர்ச்சிகளே நம் உள்ளத்தை ஆட்டி வைக்கின்றன. அதனால்தான் மெய்ஞ்ஞானிகளும் சித்தர்களும் கடைசியில் மௌனமாகி விடுகின்றனர். உலகியலை ஆழ்ந்து கற்று அறிந்ததன்பின் அருணகிரிநாதர், *ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அநுபூதி பிறந் ததுவே!* என்று நுணுக்கமாக உரைப்பதும் இதையே.'

10.10.18

அறிவியல் ஒன்றே கடவுள்!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமை; கடந்த ஆட்சியில் ஒப்பந்த|தொகுப்பூதிய முறையில் வேலைகொடுக்கப் பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்தல்; தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுதல்; அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் மானியங்களை நயவஞ்சகமாகப் பிடுங்குதல்; நம்பிய மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு பொதுமேடைகளில் நடிகநடிகைகளே அசந்து போகும்படியாக, அரசியல் பங்காளிகளுடன் முகம்விரியச் சிரித்துக் காட்டுதல். இவை, நீதிநூல்கள் நம்மை வற்புறுத்திய அறமதிப்பீடுகள் அனைத்தும் அறவே வீழ்ந்துவிட்டன என்பதற்கான அடையாளங்கள் அல்லாமல் வேறென்ன? பார்க்கப்போனால், இன்றைய நிலையில் நம் நாட்டின் வலிமையான எதிர்க்கட்சிகளாக ~ முகநூல் வாட்சப் யூடியூப் முதலான வலைத்தளங்கள் மட்டுமே உயிர்ப்போடு இயங்கி வருகின்றன. இவற்றையும் கெடுப்பதற்கென்றே, கோட்டு சூட்டுப் போட்டுக்கொண்டு அடையாளம் கிடைக்காத இடங்களிலிருந்து, நாம் இன்னும் சிற்சில ஆண்டுகளில் அழிந்துபோவோம் என்று இனவழிப்பு ஆரூடங்கள் சொல்லிக்கொண்டவாறே தங்கள் வசதிகளை மட்டும் மேலும் பெருக்கியவாறு இருக்கிறது'கள் - சில புதிய 'அருள் வாக்கு'கள்.
மக்கள் தொடர்பு சாதனங்கள் அசுரவளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றன. இருந்தும் திருந்தாத அரசியல்வாணர்களின் அரசியல் முகவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து தம் கட்சியின் தேர்தல் வீணடிப்புகளுக்காக கரன்சிகளைக் குவிக்கிறார்கள்.
நிகழ் சமூகத்திலும் தம்மிடமுள்ள உபரிப்பணத்தை உருப்படியாகச் செலவிடாமல், சகமாந்தரை வீழ்த்தவும் சிதைக்கவும் தற்கொலைகளுக்காளாக்கவும் *பயன்* படுத்தும் தீயவர்களைப் படைக்கிறார்கள்.
*மனித சுயநலத் தீவிரவாத*த்தால் அழிவுக்கு உள்ளாக்கப்படும் கானுயிர்களும்; அளவிறந்த சூழல்மாசுகளால் நோயெதிர்ப்பாற்றலைக் கூட இழந்துவாடும் அனைத்துலக மக்களும்; அந்த அழிவிழப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் முதலாளித்துவமும் மென்மேலும் வெற்றிபெற்று வருகின்றன. திரைப்படத்துறையும் திரையரங்கங்களும் புதிய கடன்காரர்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கின்றன.
இந்த நிலையில் ஆத்திக மடத்துத் தலைவர்கள் போலவே ஆகிவரும் நாத்திக(மடத்துத்) தலைவர்கள், தம் பெரியோர்- சமூகச் சீர்திருத்தத்துக்காகச் சேர்ந்த நிதிக்குவைமேல் 'மான'ம் மிகுந்து வீரமாக உட்கார்ந்து கொண்டு மணிமணியான புத்தகங்களை 'மாட்டிக்கெண்டவனை'ச் செலவுசெய்யவைத்து இலட்சக்கணக்கில் வெளியிடும் 'நம்பிக்கைச் சுரண்டல்' வேறு.
**கரப்பான்பூச்சிகளைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்** என்று ஆர்.ஈ.தான்சி என்னும் நரம்பியல் பௌதிக ஆய்வாளர் அறிவுறுத்துவதைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.
**********************
முழுமையான அறிவியல் நோக்கும் போக்கும் மட்டுமே இந்த நாசகாரக் கும்பல்களிடமிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளும் ஒரே வழி.

#அறிவியல் #நோக்கு #மட்டுமே #நம்மை #காக்கும்

(This also appears in Devamaindan's Timeline in Facebook)

27.9.18

ஐந்து தூண் மண்டபம்!

ஐந்து தூண்கள் உள்ள மண்டபத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது, நடக்கவும் பேசவும் அவதானித்திருக்கிறீர்களா?
அந்த ஐந்து தூண்களுக்கும் 'சால்பு' என்று பெயர். அவற்றின் இயல்புகள்:
1. அன்பு (LOVE)
வேண்டியவர் வேண்டாதார் யாரிடமும் காட்டப்படும் அன்பு.
2. நாணம் (MODESTY)
நிகழ்சமுதாயத்தில் மற்றவர் யாருக்கும் நேர்முகமாகவோ மறைமுகவோ தீமை செய்ய வெட்கப்படுதல்.
3. ஒப்புரவு (ALTRUISM)
சகமாந்தர் அனைவரையும் சமமாக உணர்தல்.
4. கண்ணோட்டம் (COMPASSION) சக உயிர் எதுவாயினும் அவற்றை/அவர்களை நேசித்தல்.
5. வாய்மை (TRUTHFULNESS)
நிகழ்சமூகத்தில் வெறியர்களிடம் யாரையும் காட்டிக்கொடுக்காத வாய்மை மொழிதல்.
இத்தகைய ஐந்து சால்பு எனும் தூண்கள் காலங்காலமாய்த் தாங்குகிற மண்டபங்களை மட்டுமே 'சான்றோர்'கள் என்று சொல்ல வேண்டும்.
மற்றவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மக்களே.
------------------------------------------------
*அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்*
*The pillars of excellence are five -- love, modesty,
Altruism, compassion, truthfulness*

#Tirukural #nobility #சான்றாண்மை #nobles #சான்றோர்

10.9.18

*காந்திக் கணக்கு* - தலைகீழாக மாற்றிவிட்டார்கள்!

காந்திக் கணக்கு
----------------------------
காந்தி கடைசிவரை சில்லறைச் செலவுகளை எண்ணி எண்ணி கணக்கு வைத்திருந்தார். பிறரிடமும் அதேபோல பைசாக்கணக்கு கேட்டார். கடைசி காங்கிரஸ் தொண்டனும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அவரது கணக்கு கேட்கும் போக்கில் மனம் வெறுத்து 'மகாத்மாக்களை வழிபடலாம். சேர்ந்து பணியாற்ற முடியாது' என்று கணக்குப்புத்தகங்களை அவர் முன் வீசிவிட்டு ராஜாஜி வெளியிருக்கிறார். ஆனால் 'ஒரு பைசா என்பது பல லட்சம் ரூபாயின் முதல் அலகு' என காந்தி எண்ணினார். ...ஒரு விஷயத்தைச் செய்ய மிகச் செலவுகுறைந்த வழி என்ன என்பதையே எப்போதும் அவர் கவனித்தார்.
- இன்றைய காந்தி.

7.9.18

என் இணையதள குரு.
Professor Pas Pasupathy
Professor Emeritus,
University of Toronto.
Canada.


"தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கி கும்பிட்டார். அதுவே இந்தியா முழுக்க சென்று சேர்ந்த செய்தி."

24.4.18

இன்று காலை 09:10மணிக்குத் தான் விழித்தேன். நேற்றிரவு 9 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். குப்பை வண்டிக்காரம்மா விசிலடித்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். குப்பைப்பையை எடுத்துக்கொண்டு கோலக்கார அரங்கசாமி நாயக்கர் பள்ளி வரை சென்று அங்குள்ள பெரிய குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஆட்டுக்கறிக் கடையைத் தாண்டியிருப்பேன். அதனருகில் உள்ள கடையிலிருந்து புட்லாயி அம்மா, "என்னப்பா இந்த வேக்காட்டுல..." என்று கடைக்குள் கூப்பிட்டு விசிறிக்கொள்ள பனைஓலை விசிறி கொடுத்தார். அப்போது பாரத்து, கோவை நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர், நான் தூங்கிய 12 மணிக்குள் பலமுறை ஃபோனடித்தாராம். விவரம் சொன்னேன். " பசுபதி.. இந்த வயசில் இவ்வளவு தூக்கம் கூடாது.. உங்க அண்ணி இப்படித்தான் உறங்கி இறந்து போனாங்க.." என்றார். புருவத்தில் வினாக்குறியுடன் புட்லாயி அம்மா "என்னவாம் அப்பா?" என்றார். "ஓண்ணுமில்லை'ம்மா" என்று கிளம்பினேன். 'பத்திரம் பத்திரம்' என்று அனுப்பினார். குப்பென்று வியர்த்தது. சட்டையெல்லாம் தொப்பலாக நனைந்து போனது. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் படிக்கட்டில் ஆறுதலாக உட்கார்ந்து.. அப்புறம் பொடிநடையாக வழக்கறிஞர் அன்பழகன்(பி.ஜே.பி.) கடைவரை நடந்து, மொட்டான் போடச்சொல்லி உட்கார்ந்து ஃபோன் விவரம் சொல்ல சிரித்தார். "நல்லாத் தூங்குனாத்தான் உடம்பு நல்லாருக்கும் சார்..." என்று சொன்னார். பி.ஜே.பி. பரப்புரை படம்போட்ட விசிறிகள் சிலவும் வாழைப்பழங்களும் தந்தனுப்பினார். வீட்டுக்கு வந்து இரும்பு கேட்டைத் திறந்து பார்த்தால், அன்பழகன் வெளியே நின்று பார்த்துக்கொண்டே இருக்கிறார். அன்பு.
#இருக்கும்போதே அக்கம்பக்கம் ஊரார் அன்பு செலுத்த வாழ்ந்துவிட வேண்டும். செத்தபின் இறுதிப்பயணத்தின்போது தலைக்குப் பின் கடனே என எத்தனைப் பேர் வந்தாலென்ன.. வராவிட்டாலென்ன?
#lifebeforedeath