27.9.18

ஐந்து தூண் மண்டபம்!

ஐந்து தூண்கள் உள்ள மண்டபத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது, நடக்கவும் பேசவும் அவதானித்திருக்கிறீர்களா?
அந்த ஐந்து தூண்களுக்கும் 'சால்பு' என்று பெயர். அவற்றின் இயல்புகள்:
1. அன்பு (LOVE)
வேண்டியவர் வேண்டாதார் யாரிடமும் காட்டப்படும் அன்பு.
2. நாணம் (MODESTY)
நிகழ்சமுதாயத்தில் மற்றவர் யாருக்கும் நேர்முகமாகவோ மறைமுகவோ தீமை செய்ய வெட்கப்படுதல்.
3. ஒப்புரவு (ALTRUISM)
சகமாந்தர் அனைவரையும் சமமாக உணர்தல்.
4. கண்ணோட்டம் (COMPASSION) சக உயிர் எதுவாயினும் அவற்றை/அவர்களை நேசித்தல்.
5. வாய்மை (TRUTHFULNESS)
நிகழ்சமூகத்தில் வெறியர்களிடம் யாரையும் காட்டிக்கொடுக்காத வாய்மை மொழிதல்.
இத்தகைய ஐந்து சால்பு எனும் தூண்கள் காலங்காலமாய்த் தாங்குகிற மண்டபங்களை மட்டுமே 'சான்றோர்'கள் என்று சொல்ல வேண்டும்.
மற்றவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மக்களே.
------------------------------------------------
*அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்*
*The pillars of excellence are five -- love, modesty,
Altruism, compassion, truthfulness*

#Tirukural #nobility #சான்றாண்மை #nobles #சான்றோர்

No comments: