16.12.23

பனிக்காலமே நல்லது!

"பனிக்காலமே நல்லது."
பனிக்கு+ஆலமே நல்லது.
ஆலம் = கொடிய நஞ்சு (கடும் விஷம்)

இறுமாப்பு

இறுமாப்பு மிகுந்த
விண்மீன்
கறுத்து
எரிகல்லாய்த்
தரம்தாழ்ந்து
பொறுமை நிறைந்த
பூமிமேல் 
உறுத்து வீழ
நேரம் பார்க்கிறது.
- தேவமைந்தன்

16.10.23

அகதியாக அப்பா...

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பர்மா அகதியாகக் கோவைக்கு வந்தபின் அப்பாவுக்கு ஆறுதல் மிகவும் தேவைப்பட்டிருக்கிறது. மறுகுடியமர்த்தச் சான்றிதழ்(Repatriate certificate) பெறுவதற்காகச் சென்னைக்குச் சென்றிருக்கிறார். ஊழலற்ற அரசு இருந்ததால் போன அன்றே சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அடுத்து, தனக்குப் பிடித்த சுவாமி விவேகானந்தரின் இந்தப் புத்தகத்தை 29/6/1946 அன்று வாங்கிக்கொண்டு கோவை திரும்பியிருக்கிறார். அதில் தன் பர்மா நிறுவனமான ஓரியண்டல் நிட்டிங் ஃபேக்டரி முத்திரை குத்தியிருக்கிறார். ஏராளமான செல்வம், இரண்டு கார்கள் எல்லாமிழந்து, எங்களை 'ஐராவதி' என்ற கப்பலில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, தன் நண்பர்களான கண.முத்தையா செட்டியார், வெ.சாமிநாத சர்மா முதலானோரோடு சிரபுஞ்சி வழியே நடைப்பயணமாக காஷ்மீர் வழியாக இந்தியா வந்திருக்கிறார் தந்தை இரங்கூன் பி.கே. அண்ணார். இதைத் திண்ணை.காம் வலையேட்டில் கட்டுரையாக எழுதியிருக்கிறேன். திண்ணை.காம் வலையேட்டின் முன்னை ஆசிரியரான திருவாளர் கோபால் ராஜாராம் பெருமைப்படுத்திப் பதிப்பித்தார். பி.கே.அண்ணன் என்று நான் தட்டெழுதியதைத் திருத்தி 'ஒரு மனிதரின் வாழ்க்கை: பி.கே.அண்ணார்' என்ற தலைப்பில் வெளியிட்டார். அப்போது அவர் அமெரிக்கா, நியூ ஜெர்சியில் பணியாற்றினார். என் தந்தை மீதிருந்த அன்பால், நாகரத்தினம் கிருஷ்ணாவின் புகழ்மிக்க நாவல் 'நீலக்கடல்' குறித்த என் வயணமான  கட்டுரையை வெளியிட்டபோது அட்டைப்படமாக என் படத்தை வெளியிட்டார். அகதியான தந்தையைப் பற்றி ஒரு பேராசிரியர் இவ்வளவு ஆழமாக எழுதியிருந்தார் என்ற அன்பாலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' குறித்த கட்டுரையைப் பாராட்டுமுகமாகவும் என் படத்தை வெளியிட்டதாக அவர் குடும்பத் திருமணத்தின்போது அறிந்து கொண்டேன்.


23.3.22

திருக்குறள் ஒப்புமை காட்டும் தீயநட்பு வகை

உறுவது சீர்தூக்கு[ம்] நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு[ம்] நேர்

(திருக்குறள். தீ நட்பு 3)

நட்பின் அளவைப் பாராமல்,  அந்நட்பால் தமக்கு வரும் பயனின் அளவை மட்டுமே நோக்கும் நண்பரும்; கொடுப்பவர் குணத்தைக் கருத்தில் கொள்ளாது, அவர் கொடுக்கும் பொருளின் அளவை மட்டுமே கவனத்திற் கொள்ளும் பொதுமகளிரும்; பிறர் அடையவுள்ள கேடு நோக்காது, அவர் சோர்ந்திருப்பதை மட்டுமே அவதானிக்கும் கள்வரும் --- தம்முள் ஒரே இயல்பை உடையவர்களே!

கொடுக்கும் பொருள் - விலை. இதனாலேயே கணிகையர்களுக்கு (தாசிகள்) விலைமாதர் என்ற பெயர் வந்தது. தீய நண்பர்கள் பயனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வஞ்சித்து நடந்து கொள்வதால் விலைமாதர் கள்வர் ஆகியோரோடு ஒப்பாயினர்.

26.10.21

சாதி சமய சழக்கை விட்ட ஆல்வள்ளி...

 *சாதிசமயச் சழக்கு*கள் இல்லாத ஆல்வள்ளி, தோட்டத்தில் தென்னையின்மேல் *விட்டு விடுதலையாக*ப் படர்ந்திருக்கிறது.

#உயர்பிறவி

24.10.21

"நா! காந்தி பக்தனுங்கோ..."

அண்மையில் திருவாளர் சுப்பிரமணியன் சுவாமி காந்தியடிகளை 'பிராமணர்' என்று தன் ஆய்வுப் பேச்சொன்றில் சொல்லியுள்ளார். திருவாளர் சொக்கு சுப்பிரமணியன் புதுச்சேரியில் நடத்திய 'வண்ணங்கள்' என்ற சிற்றேட்டின் சிறப்பு வெளியீடான 'ஊமைக் காயங்கள்' என்ற கையேட்டில் இச்சேதியை - 'நா! காந்தி பக்தனுங்கோ...' என்ற கவிதைவழி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலப்படுத்தியுள்ளேன். இதை என் கவனத்துக்குக்ண கொண்டு வந்தவர் புதுச்சேரி உளவியல் மருத்துவர் எஸ்.இலட்சுமணன் அவர்கள்.அவருக்கு மிக்க நன்றி. - தேவமைந்தன்

31.7.20

கவி கோ.கமலக்கண்ணன் நூலுக்கு தமிழ்மாமணி க.நாராயணன் அணிந்துரை

*திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை* இயற்றியவர் கவி கோ.கமலக்கண்ணன் @Kamalakkannan Govindhan அணிந்துரை தமிழ்மாமணி பேராசிரியர் டாக்டர் க.நாராயணன், M.A(Phil),M.A(Psych),M.Ed,Phd., புதுச்சேரி-18-04-2001 --------------------------------------------------------------------------------------------------------------------- #உலகம், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனைச் சுற்றி வருகிறது என்பது அறிவியல் உண்மை.தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு,பகல் போன்ற மாற்றங்களும் கதிரவனைச் சுற்றி வருவதால் வெப்பம், காற்று ,மழை பருவகாலம் போன்ற மாற்றங்களும் புறத்தளவில் நிகழ்கின்றன.இம்மாற்றங்களுக்கேற்ப மனிதன் தன் புறத்தளவில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறான். அறிவியல் வளர்ச்சியும் தொழில்துறை நுட்பங்களும் மனித வாழ்வில் அளப்பரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மனித வாழ்க்கைச் சூழலையும் இன்றுள்ள மனித வாழ்க்கைச் சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனித வாழ்க்கை வியத்தகு மாற்றங்களினூடே நடந்து வந்திருப்பதை உணரக்கூடும்.இத்தகைய மாற்றங்களினூடே நடந்து வந்த மனிதன் பலவற்றை இழந்திருக்கிறான்.சிலவற்றை மறந்திருக்கிறான்.சிலவற்றைப் புதிதாக உருவாக்கிக் கொண்டுள்ளான்.இத்துணை மாற்றங்களினூடேயும் மனிதனின் இறைநம்பிக்கையும் அதன் வெளிப்பாடான ஆன்மிகமும் பக்தியும் மாறாதிருக்கின்றன. இறைமறுப்பாளர்கள் கூட ஆன்மிகம் என்ற போர்வையில் தம் துன்பக்குளிரைப் போக்கிக்கொள்ள முற்படுகின்றனர். ஆன்மிகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பக்தி எனும் நீள்வட்டப் பாதைவழி இறை நம்பிக்கை எனும் கதிரவனை சுற்றி வருகிறதெனலாம்.ஆன்மிகம் எனும் தற்சுழச்சி இல்லை என்றால் பக்தி எனும் நடைபாதை பயனற்று புதர்கள் மண்டிப் பாழ்பட்டுப் போய்விடும்.பக்தி எனும் பாதை இல்லை என்றால் ஆன்மிகம் செல்லும் திசையறியாத வீண்பயணம் ஆகிவிடும்.இறை நம்பிக்கையைச் சுற்றிச் செல்லாத ஆன்மிகமும் பக்தியும் மனித மனத்தைச் செம்மைப் படுத்தாத வெற்றுச் சடங்குகளாகிவிடும். புறத்தளவில் பரபரப்பும் அகத்தளவில் மன உளைச்சலும் மிகுந்ததாக இன்றைய மனித வாழ்க்கை அமைந்துள்ளது.பணப்பெருக்கம் ,பொருள்வசதி எனப் பரபரப்பாக அலையும் மனிதனை நிலைப்படுத்தவும் மனப்புழுக்கத்தில் ஆழ்ந்து மூச்சுத்திணரும் மனிதனை அமைதிப்படுத்தவும் ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் இன்றி வேறு வழியில்லை . உண்மையான ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் மனிதனுக்கு அமைதியையும் உள்ளார்ந்த ஆனந்தத்தையும் தரும். ஆன்மிக நெறியையும்,பக்தி நெறியையும் செம்மைப்படுத்திச் சீர்தூக்கும் நிலையான முயற்சியில் ஈடுபட வேண்டும்.சமுதாயத்தின் பல துறைகளிலும் நன்னெறி தழைக்க வழிகாண வேண்டும்.அத்தகைய முயற்சிகளுள் ஒன்றுதான் ஆன்மிகம்,பக்தி ஆகிய நெறிகளைச் சார்ந்த நூல்கள் எழுதி வெளியிடுவது ஆகும்.இந்த அரிய முயற்சிக்கு ஒரு படியாக அமைவது என் இனிய நண்பர் கவி கோ.கமலக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ள 'திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை' எனும் இந்நூல் ஆகும். நூலாசிரியர் கமலக்கண்ணன் இந்நூலைப் பத்ரகாளியம்மன் வரலாறு,அற்புதங்கள்,புகழ்மாலை,போற்றிப் பாடல்கள்,சரணம் ஆகிய ஐந்து பகுதிகளாக அமைத்து எழுதியுள்ளார்.பத்ரகாளியம்மன் திருக்களாச்சேரியில் எழுந்தருளிய வரலாற்றையும் அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்ட அரிய செயலையும் அன்னையவள் அன்பர்கள் பலரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களையும்,அன்னையை வழிபட வகை செய்யும் போற்றிப் பாடல்களையும் அன்னையின் பெருமையைக் கூறும் புகழ்ப்பாடல்களையும் கூறிப் படிப்போர் நெஞ்சில் பக்தியையும் பத்ரகாளியைக் காணவேண்டும் என்ற வேட்கையையும் தருவதாக இந்நூல் அமைந்துள்ளது.எனவே இந்நூலைத் திருக்களாச்சேரி *பத்ரகாளியம்மன் ஆற்றுப்படை* என்றும் கொள்ளலாம் திரு.கமலக்கண்ணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதை இந்நூல் வழி அறிய முடிகிறது.அவருடைய மொழிப்பற்று இந்நூலில் பத்ரகாளியம்மன் புகழ்மாலை என்ற பகுதியில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுகிறது.எடுத்துக்காட்டாக சிலவற்றைக் கூறலாம். 'இன்பத்தமிழில் இசைபாடி'(8) 'பழகு தமிழில் பாட்டெழுதி'(15) 'உருகித் தமிழில் துதிபாட'(36) 'கரும்பில் தேனைக் கலந்தெடுத்துத் தருமென் மொழியே'(40)'தென்பால் தமிழால் உனைப்பாடும்'(41) தமிழைக் குணமாய்க் கொண்டவளே'(44) 'நல்ல தமிழால் நாமுறைப்போம்'(54) 'தெள்ளுதமிழால் வழிபட்டால்'(86) 'செந்தமிழ்ப் பாட்டில் மயங்கிடுவாள்'(104) இத்தொடர்களெள்ளாம் ஆசிரியர் கொண்டுள்ள மொழிப்பற்றுக்குச் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. கடவுளுக்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற வினா ஓயாது ஒளிக்கின்ற வினா.உண்டென்பாரும் இல்லை என்பாரும் தத்தம் புலமைக்கேற்ப வாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இதுவெறும் வாதத்தோடு நிற்காமல் சில மனிதர்களை நாகரிகமற்ற செயல்களுக்கும் இழுத்துச் சென்றுவிடுவதைக் காண்கிறோம். ஒருபொருள்,உருவமாகவும் இருக்கக்கூடும் அருவமாகவும் இருக்கக்கூடும் என்பதை இயற்பியல் அறிவியல் ஏற்றுக் கொள்கிறது.தலவரலாற்றைக் கூறும் ஆசிரியர் திருக்களாச்சேரி பத்ரகாளியம்மன் அருவ,உருவ,அருவுருவ நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாங்கினை சிறப்பாகப் பொருத்திக் காட்டியுள்ளார்.பத்ரகாளி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதை அருவநிலை என்றும்,பூசைவிழாவின் போது அருள்பாலிப்பதை உருவநிலை என்றும் பூசைவிழா முடிந்தபின் பேழையுள் இருந்து அருள்தருவதை அருவுருவ நிலை என்றும் ஆசிரியர் பொருத்திக் காட்டுவது பாராட்டிற்குரியது. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் கூறுவது போல இறைவனை வணங்கவும் வழிபடவுங்கூட இறைவன் அருள் இருந்தால்தான் இயலும்,வாய்ப்புகள் இருந்தும் பொருள்வசதி இருந்தும் இறைவனின் அருட்பார்வை இல்லையெனின் இறைவனை வணங்க இயலாது என்பது மாணிக்கவாசகர் கருத்து.நூலாசிரியருக்கு அன்னையின் அருள் வழிகாட்டியாக இருந்திருக்கிறது.இவ்வருளே அன்னையின் அருள்பெற்றுப் பயனுற்ற பலரை நூலாசிரியருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.அடியவரைக் காண்பது ஆண்டவனைக் காண்பதிலும் சிறந்தது என்பர்.திரு.கமலக்கண்ணன் அன்னையின் அருள்பெற்ற பல அடியவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.இவ்வற்புதங்கள் வாயிலாக அன்னையின் அருள் பலருக்கும் கிட்ட நூலாசிரியர் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். பத்ரகாளியம்மனின் பல்வேறு திருப்பெயர்களையும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் எழுதியுள்ள போற்றிப்பாடல் பலவகையிலும் சிறப்புடையது.பக்தனின் உணர்வை இறைவன் அறிந்து கொள்ள மொழி தேவையே இல்லை.இறைவன் உள்ளத்தின் உள்ளெழும் உணர்வுகளைக் காண்கிறானே தவிர உதட்டிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கேட்பதில்லை.மொழி வழியாகத் தன் உணர்வுகளைக் கொட்டுவது மனிதனின் இயல்பு.அவரவர் அறிந்த மொழியிலே உணர்வுகளை வெளிப்படுத்தி வழிபடுவதே இயல்பான வழி.இந்த மொழிதான் உகந்தது என்று கூறி ஒரு மொழியை உயர்த்தியும் பிற மொழியைத் தாழ்த்தியும் பேசுவது மனிதனின் அறியாமையையும் குறுகிய மனப்பான்மையையும் காட்டுகிறது.பொருளறிவு வாராத மழலைச் சொல்லிலும் மானுடத்தாய் மகிழ்வதைக் காண்கிறோம்.பால்நினைந்தூட்டும் தெய்வத்தாய் நாம் எண்ணினாலே புரிந்துகொண்டு அருள்செய்வாள் எனின் தமிழில் வேண்டினால் செவிசாய்க்க மாட்டாளா? தமிழில் வழிபாடு செய்ய ஊக்கம்தரும் வகையில் இப்போற்றிப் பகுதியில் உள்ள பாடல்கள் இயற்றப்பட்டன. அகவழிபாடாகவோ புறவழிபாடாகவோ அன்னையின் திருவடிகளில் மலர்கள் தூவியோ குங்குமம் தூவியோ வழிபாடு செய்ய விரும்பும் அன்பர்கட்குத் துணை செய்யும் வகையில் அழகிய தமிழில் 'போற்றி போற்றி'என முடியும் வண்ணம் துதிப்பாடலை இயற்றியுள்ளார்.இப்பாடலை அன்பர்கள் அன்றாட வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். புகழ்மாலையில் உள்ள பாடல்கள் கருத்துச் செறிவும் ,சொல்வளமும் ஓசைநயமும் உள்ளவை.உள்ளதை உள்ளவாறு பிறர் உணரும் வண்ணம் கூறுவது அரிய கலை.ஆசிரியருக்கு உள்ள இந்த ஆற்றல் நூலின் பல பாடல்களில் வெளிப்பட்டாலும் குறிப்பாக பூசைநாளில் பத்ரகாளியின் அலங்காரத்தை விவரிக்கும் போது சிறப்பாக வெளிப்படுகிறது.பூசைநாளில் திருக்களாச்சேரி செல்ல இயலாதவர்களும்,செல்ல வாய்ப்பில்லாதவரும்,சென்றாலும் அருகிருந்து கண்டுகளிக்க முடியாதவரும் தம் மனக்கண்ணால் கண்டுகளிக்கும் வண்ணம் அழகாக உரைத்துள்ளார். சொல்வளமும் கருத்தாழமும் மிக்க பாடல்கள் பல இருப்பினும் என் இதயத்துள் சென்று குறுதியில் கலந்த இரு பாடல்களை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சேற்றில் உழன்ற பாவியென்னைத் தேற்றிக் கரும வினையகற்றிப் போற்றிப் பாட வைத்தவளே ஏற்றி வைத்தேன் இதயத்தில் (63) தாயினும் மேலாய்ப் பரிந்தென்றன் வாயினால் பாடத் தமிழ்தந்தாய் ஓய்விலா துனையே நினைக்கின்ற தேய்விலா அறிவைத் தந்திடம்மா (85) கருத்தோட்டமும் ஓசைநயமும் மிக்க பாடல்களும் புகழ்மாலைப் பகுதியில் நிறைந்துள்ளன.பின்வரும் இரு பாடல்களும் வாய்விட்டுப் படிக்கும் போது என் செவிவழி புகுந்து உள்ளத்திற்கு இன்பம் தந்தன.சான்றுக்காக அவற்றைக் குறிப்பிடுகின்றேன். துடித்தேன் துன்பம் மனம்பிழிய வடித்தேன் கண்ணீர் விழிவழிய படித்தேன் அமுதாய் நீவந்தாய் பிடித்தேன் பாதம் நீகாத்தாய்(47) எப்பிழை புரிந்துநான் இருந்தாலும் அப்பிழை பொறுத்திடும் அம்மைநீ எப்பிறப் பெடுத்துநான் வந்தாலும் அப்பனும் அம்மையும் நீயம்மா(81) அன்பன் க.நாராயணன் *திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை* இயற்றியவர் கவி கோ.கமலக்கண்ணன் @Kamalakkannan Govindhan அணிந்துரை தமிழ்மாமணி பேராசிரியர் டாக்டர் க.நாராயணன், M.A(Phil),M.A(Psych),M.Ed,Phd., புதுச்சேரி-18-04-2001 உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனைச் சுற்றி வருகிறது என்பது அறிவியல் உண்மை.தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு,பகல் போன்ற மாற்றங்களும் கதிரவனைச் சுற்றி வருவதால் வெப்பம், காற்று ,மழை பருவகாலம் போன்ற மாற்றங்களும் புறத்தளவில் நிகழ்கின்றன.இம்மாற்றங்களுக்கேற்ப மனிதன் தன் புறத்தளவில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறான். அறிவியல் வளர்ச்சியும் தொழில்துறை நுட்பங்களும் மனித வாழ்வில் அளப்பரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மனித வாழ்க்கைச் சூழலையும் இன்றுள்ள மனித வாழ்க்கைச் சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனித வாழ்க்கை வியத்தகு மாற்றங்களினூடே நடந்து வந்திருப்பதை உணரக்கூடும்.இத்தகைய மாற்றங்களினூடே நடந்து வந்த மனிதன் பலவற்றை இழந்திருக்கிறான்.சிலவற்றை மறந்திருக்கிறான்.சிலவற்றைப் புதிதாக உருவாக்கிக் கொண்டுள்ளான்.இத்துணை மாற்றங்களினூடேயும் மனிதனின் இறைநம்பிக்கையும் அதன் வெளிப்பாடான ஆன்மிகமும் பக்தியும் மாறாதிருக்கின்றன. இறைமறுப்பாளர்கள் கூட ஆன்மிகம் என்ற போர்வையில் தம் துன்பக்குளிரைப் போக்கிக்கொள்ள முற்படுகின்றனர். ஆன்மிகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பக்தி எனும் நீள்வட்டப் பாதைவழி இறை நம்பிக்கை எனும் கதிரவனை சுற்றி வருகிறதெனலாம்.ஆன்மிகம் எனும் தற்சுழச்சி இல்லை என்றால் பக்தி எனும் நடைபாதை பயனற்று புதர்கள் மண்டிப் பாழ்பட்டுப் போய்விடும்.பக்தி எனும் பாதை இல்லை என்றால் ஆன்மிகம் செல்லும் திசையறியாத வீண்பயணம் ஆகிவிடும்.இறை நம்பிக்கையைச் சுற்றிச் செல்லாத ஆன்மிகமும் பக்தியும் மனித மனத்தைச் செம்மைப் படுத்தாத வெற்றுச் சடங்குகளாகிவிடும். புறத்தளவில் பரபரப்பும் அகத்தளவில் மன உளைச்சலும் மிகுந்ததாக இன்றைய மனித வாழ்க்கை அமைந்துள்ளது.பணப்பெருக்கம் ,பொருள்வசதி எனப் பரபரப்பாக அலையும் மனிதனை நிலைப்படுத்தவும் மனப்புழுக்கத்தில் ஆழ்ந்து மூச்சுத்திணரும் மனிதனை அமைதிப்படுத்தவும் ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் இன்றி வேறு வழியில்லை . உண்மையான ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் மனிதனுக்கு அமைதியையும் உள்ளார்ந்த ஆனந்தத்தையும் தரும். ஆன்மிக நெறியையும்,பக்தி நெறியையும் செம்மைப்படுத்திச் சீர்தூக்கும் நிலையான முயற்சியில் ஈடுபட வேண்டும்.சமுதாயத்தின் பல துறைகளிலும் நன்னெறி தழைக்க வழிகாண வேண்டும்.அத்தகைய முயற்சிகளுள் ஒன்றுதான் ஆன்மிகம்,பக்தி ஆகிய நெறிகளைச் சார்ந்த நூல்கள் எழுதி வெளியிடுவது ஆகும்.இந்த அரிய முயற்சிக்கு ஒரு படியாக அமைவது என் இனிய நண்பர் கவி கோ.கமலக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ள 'திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை' எனும் இந்நூல் ஆகும். நூலாசிரியர் கமலக்கண்ணன் இந்நூலைப் பத்ரகாளியம்மன் வரலாறு,அற்புதங்கள்,புகழ்மாலை,போற்றிப் பாடல்கள்,சரணம் ஆகிய ஐந்து பகுதிகளாக அமைத்து எழுதியுள்ளார்.பத்ரகாளியம்மன் திருக்களாச்சேரியில் எழுந்தருளிய வரலாற்றையும் அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்ட அரிய செயலையும் அன்னையவள் அன்பர்கள் பலரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களையும்,அன்னையை வழிபட வகை செய்யும் போற்றிப் பாடல்களையும் அன்னையின் பெருமையைக் கூறும் புகழ்ப்பாடல்களையும் கூறிப் படிப்போர் நெஞ்சில் பக்தியையும் பத்ரகாளியைக் காணவேண்டும் என்ற வேட்கையையும் தருவதாக இந்நூல் அமைந்துள்ளது.எனவே இந்நூலைத் திருக்களாச்சேரி *பத்ரகாளியம்மன் ஆற்றுப்படை* என்றும் கொள்ளலாம் திரு.கமலக்கண்ணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதை இந்நூல் வழி அறிய முடிகிறது.அவருடைய மொழிப்பற்று இந்நூலில் பத்ரகாளியம்மன் புகழ்மாலை என்ற பகுதியில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுகிறது.எடுத்துக்காட்டாக சிலவற்றைக் கூறலாம். 'இன்பத்தமிழில் இசைபாடி'(8) 'பழகு தமிழில் பாட்டெழுதி'(15) 'உருகித் தமிழில் துதிபாட'(36) 'கரும்பில் தேனைக் கலந்தெடுத்துத் தருமென் மொழியே'(40)'தென்பால் தமிழால் உனைப்பாடும்'(41) தமிழைக் குணமாய்க் கொண்டவளே'(44) 'நல்ல தமிழால் நாமுறைப்போம்'(54) 'தெள்ளுதமிழால் வழிபட்டால்'(86) 'செந்தமிழ்ப் பாட்டில் மயங்கிடுவாள்'(104) இத்தொடர்களெள்ளாம் ஆசிரியர் கொண்டுள்ள மொழிப்பற்றுக்குச் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. கடவுளுக்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற வினா ஓயாது ஒளிக்கின்ற வினா.உண்டென்பாரும் இல்லை என்பாரும் தத்தம் புலமைக்கேற்ப வாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இதுவெறும் வாதத்தோடு நிற்காமல் சில மனிதர்களை நாகரிகமற்ற செயல்களுக்கும் இழுத்துச் சென்றுவிடுவதைக் காண்கிறோம். ஒருபொருள்,உருவமாகவும் இருக்கக்கூடும் அருவமாகவும் இருக்கக்கூடும் என்பதை இயற்பியல் அறிவியல் ஏற்றுக் கொள்கிறது.தலவரலாற்றைக் கூறும் ஆசிரியர் திருக்களாச்சேரி பத்ரகாளியம்மன் அருவ,உருவ,அருவுருவ நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாங்கினை சிறப்பாகப் பொருத்திக் காட்டியுள்ளார்.பத்ரகாளி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதை அருவநிலை என்றும்,பூசைவிழாவின் போது அருள்பாலிப்பதை உருவநிலை என்றும் பூசைவிழா முடிந்தபின் பேழையுள் இருந்து அருள்தருவதை அருவுருவ நிலை என்றும் ஆசிரியர் பொருத்திக் காட்டுவது பாராட்டிற்குரியது. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் கூறுவது போல இறைவனை வணங்கவும் வழிபடவுங்கூட இறைவன் அருள் இருந்தால்தான் இயலும்,வாய்ப்புகள் இருந்தும் பொருள்வசதி இருந்தும் இறைவனின் அருட்பார்வை இல்லையெனின் இறைவனை வணங்க இயலாது என்பது மாணிக்கவாசகர் கருத்து.நூலாசிரியருக்கு அன்னையின் அருள் வழிகாட்டியாக இருந்திருக்கிறது.இவ்வருளே அன்னையின் அருள்பெற்றுப் பயனுற்ற பலரை நூலாசிரியருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.அடியவரைக் காண்பது ஆண்டவனைக் காண்பதிலும் சிறந்தது என்பர்.திரு.கமலக்கண்ணன் அன்னையின் அருள்பெற்ற பல அடியவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.இவ்வற்புதங்கள் வாயிலாக அன்னையின் அருள் பலருக்கும் கிட்ட நூலாசிரியர் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். பத்ரகாளியம்மனின் பல்வேறு திருப்பெயர்களையும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் எழுதியுள்ள போற்றிப்பாடல் பலவகையிலும் சிறப்புடையது.பக்தனின் உணர்வை இறைவன் அறிந்து கொள்ள மொழி தேவையே இல்லை.இறைவன் உள்ளத்தின் உள்ளெழும் உணர்வுகளைக் காண்கிறானே தவிர உதட்டிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கேட்பதில்லை.மொழி வழியாகத் தன் உணர்வுகளைக் கொட்டுவது மனிதனின் இயல்பு.அவரவர் அறிந்த மொழியிலே உணர்வுகளை வெளிப்படுத்தி வழிபடுவதே இயல்பான வழி.இந்த மொழிதான் உகந்தது என்று கூறி ஒரு மொழியை உயர்த்தியும் பிற மொழியைத் தாழ்த்தியும் பேசுவது மனிதனின் அறியாமையையும் குறுகிய மனப்பான்மையையும் காட்டுகிறது.பொருளறிவு வாராத மழலைச் சொல்லிலும் மானுடத்தாய் மகிழ்வதைக் காண்கிறோம்.பால்நினைந்தூட்டும் தெய்வத்தாய் நாம் எண்ணினாலே புரிந்துகொண்டு அருள்செய்வாள் எனின் தமிழில் வேண்டினால் செவிசாய்க்க மாட்டாளா? தமிழில் வழிபாடு செய்ய ஊக்கம்தரும் வகையில் இப்போற்றிப் பகுதியில் உள்ள பாடல்கள் இயற்றப்பட்டன. அகவழிபாடாகவோ புறவழிபாடாகவோ அன்னையின் திருவடிகளில் மலர்கள் தூவியோ குங்குமம் தூவியோ வழிபாடு செய்ய விரும்பும் அன்பர்கட்குத் துணை செய்யும் வகையில் அழகிய தமிழில் 'போற்றி போற்றி'என முடியும் வண்ணம் துதிப்பாடலை இயற்றியுள்ளார்.இப்பாடலை அன்பர்கள் அன்றாட வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். புகழ்மாலையில் உள்ள பாடல்கள் கருத்துச் செறிவும் ,சொல்வளமும் ஓசைநயமும் உள்ளவை.உள்ளதை உள்ளவாறு பிறர் உணரும் வண்ணம் கூறுவது அரிய கலை.ஆசிரியருக்கு உள்ள இந்த ஆற்றல் நூலின் பல பாடல்களில் வெளிப்பட்டாலும் குறிப்பாக பூசைநாளில் பத்ரகாளியின் அலங்காரத்தை விவரிக்கும் போது சிறப்பாக வெளிப்படுகிறது.பூசைநாளில் திருக்களாச்சேரி செல்ல இயலாதவர்களும்,செல்ல வாய்ப்பில்லாதவரும்,சென்றாலும் அருகிருந்து கண்டுகளிக்க முடியாதவரும் தம் மனக்கண்ணால் கண்டுகளிக்கும் வண்ணம் அழகாக உரைத்துள்ளார். சொல்வளமும் கருத்தாழமும் மிக்க பாடல்கள் பல இருப்பினும் என் இதயத்துள் சென்று குறுதியில் கலந்த இரு பாடல்களை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சேற்றில் உழன்ற பாவியென்னைத் தேற்றிக் கரும வினையகற்றிப் போற்றிப் பாட வைத்தவளே ஏற்றி வைத்தேன் இதயத்தில் (63) தாயினும் மேலாய்ப் பரிந்தென்றன் வாயினால் பாடத் தமிழ்தந்தாய் ஓய்விலா துனையே நினைக்கின்ற தேய்விலா அறிவைத் தந்திடம்மா (85) கருத்தோட்டமும் ஓசைநயமும் மிக்க பாடல்களும் புகழ்மாலைப் பகுதியில் நிறைந்துள்ளன.பின்வரும் இரு பாடல்களும் வாய்விட்டுப் படிக்கும் போது என் செவிவழி புகுந்து உள்ளத்திற்கு இன்பம் தந்தன.சான்றுக்காக அவற்றைக் குறிப்பிடுகின்றேன். துடித்தேன் துன்பம் மனம்பிழிய வடித்தேன் கண்ணீர் விழிவழிய படித்தேன் அமுதாய் நீவந்தாய் பிடித்தேன் பாதம் நீகாத்தாய்(47) எப்பிழை புரிந்துநான் இருந்தாலும் அப்பிழை பொறுத்திடும் அம்மைநீ எப்பிறப் பெடுத்துநான் வந்தாலும் அப்பனும் அம்மையும் நீயம்மா(81) அன்பன் க.நாராயணன்

21.10.18

institut francais Pondicherry library

institut francaise Pondicherry (ifP)
All of my articles in websites are from the materials provided by this institution. I thank the Librarian, Asst.Librarians - Monsieur Saravanane, Monsieur Ramanujam and others who extended their wholehearted cooperation to me.
This is the sacred place where I met GOPALAIYYAR('Gopalayyan' he used to name him) and Pulavar VILLIANUR VENKATESAN.

நிகழ் உலகம்!

கருவறைக்குள் முடங்கிக்
கிடந்த கிடப்பே மேல்.
- தேவமைந்தன்

18.10.18

மோனஞானம் ~ ஓர் இணர்

'எதை வெறுக்கிறோமோ, அதையே பின்னர் விரும்புகிறோம். எதை விரும்புகிறோமோ, அதையே ஒரு காலத்தில் வெறுக்கிறோம். எதிரெதிரான உணர்ச்சிகளே நம் உள்ளத்தை ஆட்டி வைக்கின்றன. அதனால்தான் மெய்ஞ்ஞானிகளும் சித்தர்களும் கடைசியில் மௌனமாகி விடுகின்றனர். உலகியலை ஆழ்ந்து கற்று அறிந்ததன்பின் அருணகிரிநாதர், *ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அநுபூதி பிறந் ததுவே!* என்று நுணுக்கமாக உரைப்பதும் இதையே.'

10.10.18

அறிவியல் ஒன்றே கடவுள்!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமை; கடந்த ஆட்சியில் ஒப்பந்த|தொகுப்பூதிய முறையில் வேலைகொடுக்கப் பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்தல்; தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுதல்; அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் மானியங்களை நயவஞ்சகமாகப் பிடுங்குதல்; நம்பிய மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு பொதுமேடைகளில் நடிகநடிகைகளே அசந்து போகும்படியாக, அரசியல் பங்காளிகளுடன் முகம்விரியச் சிரித்துக் காட்டுதல். இவை, நீதிநூல்கள் நம்மை வற்புறுத்திய அறமதிப்பீடுகள் அனைத்தும் அறவே வீழ்ந்துவிட்டன என்பதற்கான அடையாளங்கள் அல்லாமல் வேறென்ன? பார்க்கப்போனால், இன்றைய நிலையில் நம் நாட்டின் வலிமையான எதிர்க்கட்சிகளாக ~ முகநூல் வாட்சப் யூடியூப் முதலான வலைத்தளங்கள் மட்டுமே உயிர்ப்போடு இயங்கி வருகின்றன. இவற்றையும் கெடுப்பதற்கென்றே, கோட்டு சூட்டுப் போட்டுக்கொண்டு அடையாளம் கிடைக்காத இடங்களிலிருந்து, நாம் இன்னும் சிற்சில ஆண்டுகளில் அழிந்துபோவோம் என்று இனவழிப்பு ஆரூடங்கள் சொல்லிக்கொண்டவாறே தங்கள் வசதிகளை மட்டும் மேலும் பெருக்கியவாறு இருக்கிறது'கள் - சில புதிய 'அருள் வாக்கு'கள்.
மக்கள் தொடர்பு சாதனங்கள் அசுரவளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றன. இருந்தும் திருந்தாத அரசியல்வாணர்களின் அரசியல் முகவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து தம் கட்சியின் தேர்தல் வீணடிப்புகளுக்காக கரன்சிகளைக் குவிக்கிறார்கள்.
நிகழ் சமூகத்திலும் தம்மிடமுள்ள உபரிப்பணத்தை உருப்படியாகச் செலவிடாமல், சகமாந்தரை வீழ்த்தவும் சிதைக்கவும் தற்கொலைகளுக்காளாக்கவும் *பயன்* படுத்தும் தீயவர்களைப் படைக்கிறார்கள்.
*மனித சுயநலத் தீவிரவாத*த்தால் அழிவுக்கு உள்ளாக்கப்படும் கானுயிர்களும்; அளவிறந்த சூழல்மாசுகளால் நோயெதிர்ப்பாற்றலைக் கூட இழந்துவாடும் அனைத்துலக மக்களும்; அந்த அழிவிழப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் முதலாளித்துவமும் மென்மேலும் வெற்றிபெற்று வருகின்றன. திரைப்படத்துறையும் திரையரங்கங்களும் புதிய கடன்காரர்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கின்றன.
இந்த நிலையில் ஆத்திக மடத்துத் தலைவர்கள் போலவே ஆகிவரும் நாத்திக(மடத்துத்) தலைவர்கள், தம் பெரியோர்- சமூகச் சீர்திருத்தத்துக்காகச் சேர்ந்த நிதிக்குவைமேல் 'மான'ம் மிகுந்து வீரமாக உட்கார்ந்து கொண்டு மணிமணியான புத்தகங்களை 'மாட்டிக்கெண்டவனை'ச் செலவுசெய்யவைத்து இலட்சக்கணக்கில் வெளியிடும் 'நம்பிக்கைச் சுரண்டல்' வேறு.
**கரப்பான்பூச்சிகளைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்** என்று ஆர்.ஈ.தான்சி என்னும் நரம்பியல் பௌதிக ஆய்வாளர் அறிவுறுத்துவதைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.
**********************
முழுமையான அறிவியல் நோக்கும் போக்கும் மட்டுமே இந்த நாசகாரக் கும்பல்களிடமிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளும் ஒரே வழி.

#அறிவியல் #நோக்கு #மட்டுமே #நம்மை #காக்கும்

(This also appears in Devamaindan's Timeline in Facebook)

27.9.18

ஐந்து தூண் மண்டபம்!

ஐந்து தூண்கள் உள்ள மண்டபத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது, நடக்கவும் பேசவும் அவதானித்திருக்கிறீர்களா?
அந்த ஐந்து தூண்களுக்கும் 'சால்பு' என்று பெயர். அவற்றின் இயல்புகள்:
1. அன்பு (LOVE)
வேண்டியவர் வேண்டாதார் யாரிடமும் காட்டப்படும் அன்பு.
2. நாணம் (MODESTY)
நிகழ்சமுதாயத்தில் மற்றவர் யாருக்கும் நேர்முகமாகவோ மறைமுகவோ தீமை செய்ய வெட்கப்படுதல்.
3. ஒப்புரவு (ALTRUISM)
சகமாந்தர் அனைவரையும் சமமாக உணர்தல்.
4. கண்ணோட்டம் (COMPASSION) சக உயிர் எதுவாயினும் அவற்றை/அவர்களை நேசித்தல்.
5. வாய்மை (TRUTHFULNESS)
நிகழ்சமூகத்தில் வெறியர்களிடம் யாரையும் காட்டிக்கொடுக்காத வாய்மை மொழிதல்.
இத்தகைய ஐந்து சால்பு எனும் தூண்கள் காலங்காலமாய்த் தாங்குகிற மண்டபங்களை மட்டுமே 'சான்றோர்'கள் என்று சொல்ல வேண்டும்.
மற்றவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மக்களே.
------------------------------------------------
*அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்*
*The pillars of excellence are five -- love, modesty,
Altruism, compassion, truthfulness*

#Tirukural #nobility #சான்றாண்மை #nobles #சான்றோர்

10.9.18

*காந்திக் கணக்கு* - தலைகீழாக மாற்றிவிட்டார்கள்!

காந்திக் கணக்கு
----------------------------
காந்தி கடைசிவரை சில்லறைச் செலவுகளை எண்ணி எண்ணி கணக்கு வைத்திருந்தார். பிறரிடமும் அதேபோல பைசாக்கணக்கு கேட்டார். கடைசி காங்கிரஸ் தொண்டனும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அவரது கணக்கு கேட்கும் போக்கில் மனம் வெறுத்து 'மகாத்மாக்களை வழிபடலாம். சேர்ந்து பணியாற்ற முடியாது' என்று கணக்குப்புத்தகங்களை அவர் முன் வீசிவிட்டு ராஜாஜி வெளியிருக்கிறார். ஆனால் 'ஒரு பைசா என்பது பல லட்சம் ரூபாயின் முதல் அலகு' என காந்தி எண்ணினார். ...ஒரு விஷயத்தைச் செய்ய மிகச் செலவுகுறைந்த வழி என்ன என்பதையே எப்போதும் அவர் கவனித்தார்.
- இன்றைய காந்தி.

7.9.18

என் இணையதள குரு.
Professor Pas Pasupathy
Professor Emeritus,
University of Toronto.
Canada.


"தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கி கும்பிட்டார். அதுவே இந்தியா முழுக்க சென்று சேர்ந்த செய்தி."

24.4.18

இன்று காலை 09:10மணிக்குத் தான் விழித்தேன். நேற்றிரவு 9 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். குப்பை வண்டிக்காரம்மா விசிலடித்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். குப்பைப்பையை எடுத்துக்கொண்டு கோலக்கார அரங்கசாமி நாயக்கர் பள்ளி வரை சென்று அங்குள்ள பெரிய குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஆட்டுக்கறிக் கடையைத் தாண்டியிருப்பேன். அதனருகில் உள்ள கடையிலிருந்து புட்லாயி அம்மா, "என்னப்பா இந்த வேக்காட்டுல..." என்று கடைக்குள் கூப்பிட்டு விசிறிக்கொள்ள பனைஓலை விசிறி கொடுத்தார். அப்போது பாரத்து, கோவை நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர், நான் தூங்கிய 12 மணிக்குள் பலமுறை ஃபோனடித்தாராம். விவரம் சொன்னேன். " பசுபதி.. இந்த வயசில் இவ்வளவு தூக்கம் கூடாது.. உங்க அண்ணி இப்படித்தான் உறங்கி இறந்து போனாங்க.." என்றார். புருவத்தில் வினாக்குறியுடன் புட்லாயி அம்மா "என்னவாம் அப்பா?" என்றார். "ஓண்ணுமில்லை'ம்மா" என்று கிளம்பினேன். 'பத்திரம் பத்திரம்' என்று அனுப்பினார். குப்பென்று வியர்த்தது. சட்டையெல்லாம் தொப்பலாக நனைந்து போனது. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் படிக்கட்டில் ஆறுதலாக உட்கார்ந்து.. அப்புறம் பொடிநடையாக வழக்கறிஞர் அன்பழகன்(பி.ஜே.பி.) கடைவரை நடந்து, மொட்டான் போடச்சொல்லி உட்கார்ந்து ஃபோன் விவரம் சொல்ல சிரித்தார். "நல்லாத் தூங்குனாத்தான் உடம்பு நல்லாருக்கும் சார்..." என்று சொன்னார். பி.ஜே.பி. பரப்புரை படம்போட்ட விசிறிகள் சிலவும் வாழைப்பழங்களும் தந்தனுப்பினார். வீட்டுக்கு வந்து இரும்பு கேட்டைத் திறந்து பார்த்தால், அன்பழகன் வெளியே நின்று பார்த்துக்கொண்டே இருக்கிறார். அன்பு.
#இருக்கும்போதே அக்கம்பக்கம் ஊரார் அன்பு செலுத்த வாழ்ந்துவிட வேண்டும். செத்தபின் இறுதிப்பயணத்தின்போது தலைக்குப் பின் கடனே என எத்தனைப் பேர் வந்தாலென்ன.. வராவிட்டாலென்ன?
#lifebeforedeath

22.4.18

பிஞ்சுக் குழந்தையின்
பஞ்சுப் பாதங்கள்
நெஞ்சில் உதைத்தன.
சொர்க்கம் கண்டேன்.
- தேவமைந்தன்
19.4.2018

23.3.18

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கீன்
தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
காலச்சுவடு பதிப்பகம், திசம்பர், 2017.
----------------------------------------------
அசல் நாவல் வெளியீடானதற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின் காலச்சுவடு புண்ணியத்தாலும் எஸ்.ஆர். கிருஷ்ணமுர்த்தி மொழியறிவுழைப்பாலும் இந்த அற்புதமான நாவலின் குறும்பதிப்பு வாசகர் கையில்.
இந்தக் கதையைச் சொல்லி வரும் ஷுட்டோவ் ரஷ்யநாட்டினன். பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தவன். முதிர்நடுவயதுக்காரன். எழுத்தாளன். பிரஞ்சில் எழுதுபவன். முப்பதாண்டுகளுக்குமேல் பிரான்சில் இருந்து எழுதிவாழ்கிறான். தற்செயலாக மகள் வயதே உள்ள லெயா என்ற பெண்ணுக்கு உதவப்போய் அவளுடைய காதலனாகவுமாகிறான். வேறுவிதத்தில் சொன்னால், லெயா அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள். தன் வயதுக்குத் தக்க உடல்வளம் வசதியுள்ள இன்னொருவன் கிடைக்கும் வரை. இவனுக்கேற்ப வாழ்தலின் தருணங்களில், மற்ற ரஷ்ய எழுத்தாளர்களைவிட செக்காவ்வின் எழுத்துகள் குறித்த விவாதங்களில் ஈடுபடுகிறாள். தன்னை அறிவுத்திருப்திப்படுத்த லெயா இப்படியெல்லாம் பேசுவதை அறியாத முதிர்மூளையால் நெருடலாகவும் தன்னொத்த எழுத்தாளர்களிடம் விவாதம் பண்ணுவதுபோலவும் அவளிடம் பேசி லெயாவின் வெறுப்பையும் சந்திக்கிறான். செக்காவ் சிறுகதைக்குக் கூறிய முடிவிலக்கணத்தைக் காதல் உறவின முறிவுக்கு லெயா மேற்கோள் மொழியும் அளவு, காரணமாகிக் கொள்கிறான் ஷூட்டோவ். அவன் பெயரையே லெயா விமர்சனத்துக்குட்படுத்தும் அளவு வெறுப்பேற்றி விடுகிறான். விளைவு காதல் நிரந்தரமுறிவு. புதிய இளங்காதலனோடு லெயா பிரிந்துபோய்விடுகிறாள். மனம் முறியும் வேளையில், வழக்கமாக எல்லோருக்கும் வருவது போல, பூர்விக நாடும் அந்நாட்டின் பூர்விகக் காதலி யானாவும் ஷுட்டோவின் மனவெளியில் செறிந்து நினைவுக்கு அழுத்தமாக வருகிறார்கள். யானாவுக்குப் போன் பேசிவிட்டு, விமானம் பிடித்து ரஷ்யாவுக்கு மீள்கிறான் கதைசொல்லிவரும் ஷுட்டோவ். தோராயமாக முப்பத்தோராண்டு காலஇடைவெளிக்குப்பின் ரஷ்யாவின் இருத்தல் நிலைகள் அமெரிக்க வாழ்நிலைபோல நவீனமாயிருத்தலுக்கும்; பழைய காதலி யானா பெரிய புள்ளியாகி உள்ள நிலைமைக்கும்; அவள் மகன் விலாத் அத்தருணம் பொருளாதார & புகழ் வெற்றியுடன் கூடிய பதிப்பகத்தானாக நிலைநிற்றலுக்கும் ஈடுகொடுக்க ஏராளமான 'சிலுவைப்பாடுகள்' படுகிறான். யானா அவனை ஏற்க மறுக்கவில்லை. ஆனால் அன்னியனாகத் தன்னுடன் ஒருபக்கம் வாழ்ந்திருக்க விடுகிறாள். அவள் சகவாச தோஷமும் பிரபலமும் பன்முகப்பட்ட அரசியல் மேட்டுக்குடித் துறுதுறுப்பும் ஷுட்டோவை வாயடைத்துப்போக வைக்கின்றன. பரிதாபத்துக்குரிய அவனைப் பக்கத்திருத்தி, நேரமொதுக்கி, நவீன புத்தகப்பதிப்பின் உயிர்நிலையான சந்தைப்படுத்தலைப் 'பழம்பெருச்சாளி'யாகவே நீடிக்கும் ஷுட்டோவ் அறியுமாறு கற்பிக்கிறான் விலாத். அந்த இடங்கள் எல்லாம் அட்டகாசம் போங்கள். எனக்கு எஸ்.ரா. தொடர்பான சென்னை புக்ஃபேர் அடுத்த மனுஷ்யபுத்திரனனின் இராயல்டி - விளக்க - ஒளிக்காணல்கள் பம்மிப்பம்மி ஓர்மைக்கு வந்தன. ஏனோ விலாத்தையும் நண்பர் மனுஷ்யபுத்திரனாகக் காண முடிந்ததற்கு ஆந்திரேயி மக்கீன்தான் காரணம். சரி விடுங்கள். விலாத்துக்கு இன்னொரு பொறுப்பு. பென்ஷன் வாங்கும் செவியடைத்த & பேசாதவொரு முதியவரைக் கண்காணித்தல். தொடர்பான நுட்பங்களுக்குப் போக வேண்டாம். படித்துத் தெரிந்து கொள்ளட்டும். விலாத்தாலும் அவன் தாய் யானாவாலும் முதியோரில்லத்துக்குத் தாட்டிவிடத் திட்டமிடப்படலினூடு அவர்களோடு "இருக்கிற" முதியவர்... ஷுட்டோவுக்கு மட்டும் செவிகேட்டு வாய்பேசுகிற, ஒருமணித் தியாலத்தில் தன் சாதனை வாழ்வை ஷுட்டோவுக்குச் சொல்கிறவர். அந்த அற்புதத் தருணங்களை நமக்கு உண்டாக்குபவளான விலாத்தின் காதலிக்கு நன்றி. வோல்ஸ்கி என்ற அந்தப் பெரியவர் பட்ட பாடுகள் அமரமானவை. இரண்டாமுலகப் போரில், லெனின்கிராட் என்ற பூர்வப்பெயர் மாற்றப்பட்ட செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் முற்றுகைக் காலமான, மனிதநேயம் மாய்ந்து இருபது லட்சம் மக்கள் மாய்க்கப்பட்ட காலகட்டத்தில் போர்க்களத்தில் நிராயுதபாணியாகிவிட்ட ஜெர்மானிய இளைஞனை அமைதியாகப் போகவிடுதலாகட்டும்; அதையடுத்த தூய்மையரசியல் வெறியுடன் அப்பாவிகளைச் சிறைப்படுத்தும் - வதைப்படுத்தும் - சுட்டுக்கொல்லும் 'The Great Purge' என்றழைக்கப்பட்ட தலைவர் ஸ்டாலினின் கொடுமை ஓங்கிய காலகட்டமாகட்டும் ~ போரிசைக் கலைஞராகவும் போராலும் 'பர்'ஜாலும் வாடிவதங்கிச் சீரழிந்த மனிதர்களைக் கொண்டும் அனாதை மற்றும் மாற்றுத் திறன்கொண்ட ஏதிலிப்பிள்ளைகளைக் கொண்டும் நாடகங்கள் இசைநிகழ்ச்சிகள் நடத்திய பெருஞ்சாதனையாளர். மானுடக் கொடுமையின் வகைமாதிரிகள் எல்லாவற்றுக்கும் ஆளான, அனாதைப் பிள்ளைகளைக் காப்பாற்ற இராணுவத்தாருக்கு வேசியாக மாறி, தன்னுடலை சிதைவுக்குட்படுத்திக் கொண்ட, லெனின்கிராட் முற்றுகைப் போரிலும் பின்தொடர்ந்த 'great purge'இலும் 'மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று'ப் போன்ற மென்மையும் பெண்மையும் மேன்மையும் இயல்புகளாகக் கொண்ட, மிலா என்ற 'அரியவகை மானுட'ப் பிறவியை ஆன்ம - இயற்கை - வான ரீதியாகக் காதலித்தவர். வோல்ஸ்கி ~ லியா காதல் அற்புதமானது. தெய்வீகக் காதல் என்று மட்டும் கொச்சைப்படுத்தக் கூடாதது. இவ்விருவரையும் நேசிக்கும், இவ்விருவராலும் நேசிக்கப்படும் சிவப்பு முடிச்சிறுவனை மறக்க முடியுமா? அவர்கள் வாழப்புகும் 'இஸ்பா' வீட்டின் சூழலைத்தான் மறக்க முடியுமா? அரசியல் தூய்மைப்படுத்தும் காலத்தில் வோல்ஸ்கியால் பயிற்றுவிக்கப்படும் போரனாதைச் சிறுவர்களுக்குக் கொடுக்கப்படும் கடும் ஒத்திகைக்குப்பின்னான நாடகத்தை கல்வி ஆய்வாளரான 'மூக்கொழுகும் தடிச்சி'யானவள், வர்க்கவோர்மையற்றது என்று கத்திக் கூப்பாடு போட்டு - பின்னர் இரசிக்கும் நிலைப்பாடுகளைப் பாராட்டவா? விளைவாக வோல்ஸ்கிக்குக் கிட்டும் விருதையும் பதவியையும் அவர் துச்சமென மதித்து ஏற்காமல் விட்டு விடுவதைச் சொல்லவா? ஸ்டாலின் இறப்புக்கு முந்திய பத்தாண்டுப்போதில்(decade) தாமிருவரும் சிறைப்பட்டபோது சுமத்தப்பட்ட இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளையெல்லாம் தானொருத்தியே ஏற்று உலகை நீத்தாலும்; உருப்படியான கலைத்தொண்டு ஆற்றவல்ல வோல்ஸ்கி என்ற காதலனைக் குறைந்த தண்டனை பெறவைத்துக் காப்பாற்றும் மிலா என்ற அந்தக் காதலி/தாய்/வேசி/தியாகி ஆனவள், மெய்யான வாசகரின் நெஞ்சைத் தன் தியாகக்குருதியால் சேற்றுழவு செய்வது நிச்சயம். இதையெல்லாம் கேட்டதோடு நில்லாமல், விலாத்துக்கும் யானாவுக்கும் மறைத்த அப்பொன்னிரவுப் பொழுதில், நன்றி மறவாமல், ஒரு விடாக்கண்டனான டாக்சி ஓட்டுநரைக் கெஞ்சிக் கூத்தாடி, பெரியவர் வோல்ஸ்கியின் இறந்தகாலக் காதல் குறியீடான வானத்தின்கீழ் உயிர்ப்புடன் ஓடும், பெரியவர் வோல்ஸ்கி 'லெனின்கிராட் முற்றுகை'யின்போது நாடக நிகழ்ச்சிகளை நடத்திய, அந்த ஆற்றுக்கு அழைத்துச் சென்று, அவரை ஆதனாரப் பாட்டுப் பாடவைத்து, "அந்தப் பாட்டுத்தான் அவன் பார்த்த எல்லாவற்றுக்கும் அடிப்படை அர்த்தத்தைத் தருவதை" உள்வாங்கி, மீண்டும் அவரை விலாது இருந்த இடத்துக்கே போய்ச் சேர்க்கிறான் ஷுட்டோவ். வம்பனான அந்த டாக்சி ஓட்டுநருங்கூட அந்தச் சம்பவத்தால் வாழ்வின் மெய்யான அர்த்தத்தை நன்றியுடன் அனுபவிக்கிறான். இதன் பின்னென்ன... முதியோரில்லத்துக்கு பெரியவர் 'தாட்ட'ப்படுகிறார். ஐந்தே நிமிடத்தில் தன் பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ஷூட்டாவும் வேளியேறுவதை அவன் பழைய காதலியின் மகன் விலாத், தடுப்பதில்லை.
ஷுட்டோவ் பிரான்சுக்கு விமானத்தில் திரும்புகையில் 'வோல்ஸ்கி வாழ்ந்த சகாப்த'தத்தை, பயங்கரமான அந்த சோவியத் காலகட்டத்தைத் தன் எழுத்தாள நெஞ்சில் சுமக்கிறான். பின்வருமொரு செப்டம்பர் மாதத்தில் ரஷ்யாவுக்குத் திரும்பும் ஷுட்டோவ், வோல்ஸ்கி சேர்க்கப்பட்ட ' முதியோர் இல்லத்'துக்குப் போகிறான். செயிண்ட்பீட்ர்ஸ்பர்க்கில் அதன் முந்திய பெயரான லெனின்கிராட் கொடிய ஊழியின் பிரதிநிதியான வோல்ஸ்கி இறந்துபோனதை பிரான்சிலேயே அறிந்த பிறகுதான் போகிறான். முதியோர் இல்லத்தின் கல்லறைகளில் வோல்ஸ்கியினதைத் தேடுகிறான். கல்லறை எதிலும் பெயர் முதலிய விவரமேதுமில்லை. காவலாளி காட்டிய சமாதிகளில் ~ 'u.w.' 'unknown woman' 'முன்பின் தெரியாத பெண்'; 'u.m.' 'unknown man' 'முன்பின் தெரியாத ஆண்' ~~ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மனித வாழ்க்கை அத்துணைப் பரிவற்று சுருக்கப்பட்டிருந்தமை ~ ஷுட்டோவுக்குச் சொல்லொணா வருத்தத்தைத் தந்தது. வோல்ஸ்கிக்கு அவர் அனைத்து விவரங்களுமடங்கிய நினைவுத்தூண் வைக்க விரும்பியதைப் பணியாள் ஒருவனிடம் ஏற்பாடு செய்து, அடுத்தநாள் அதற்கு அவன் ஒப்புதலும் தந்த பிறகு ஷுட்டோவ் யோசிக்கிறான்.... அப்படியே முழுவிவரங்களைப் பதித்தாலும் 'முன்பின் தெரியாத ஒருவன்' என்ற பதத்தைவிட என்ன அதிகமாகப் பயனாகப் போகிறது? ... ஷூட்டோவ் எழுந்து வெளியேறும்போது, எழுதப்படவேண்டிய உரிய வாசகங்கள் மனத்திரையில் தோன்றுகின்றன. " 'அடையாளம் தெரியாத பெண்களும்' 'அடையாளம் தெரியாத ஆண்களும்' காதலித்தனர், ஆனால் அவர்கள் சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லப்படாமல் போய்விட்டன..."
எல்லாம் முடிந்து வீடுதிரும்பும்போது,
பின்லாந்து வளைகுடாப் பனிமூட்டம் வழியே ஒரே பார்வையில் அவன் அதுவரை கண்டிராத அகண்ட வானவெளியைப் பார்க்கிறான் ஷூட்டோவ்.
அது வெறும் பெரும் அகண்ட வான்வெளியல்ல. தங்கள் பிரிவுகளின்போது உற்றுப் பார்த்து வோல்ஸ்கியும் அவர் காதலி மிலாவும் பிரிவுத்துன்பமற்றுக் கலந்த வானம்தான்.
-------------------------------------------
தேவமைந்தன்
Puducherry Annan Pasupathy (Facebook)


21.7.17

வம்ப மழையில் நனைந்தவை கம்பிகள் மட்டுமே!

நாட்டு ஓட்டு வீட்டின் நடுவில்
தொட்டிக் கட்டு வீட்டின் உள்ளில்
அலம்பிச் சலம்பிப் பெய்யும் மழைநீர் பார்த்தவன்,
அடுக்ககம் ஒன்றின் கூட்டினுள் இருந்தே,
கடுப்புடன் முகிலினம் வேண்டா வெறுப்பாய்
வம்பாய்த் தெளிக்கும் நீரைக்
கம்பிகள் ஊடே காணுகின் றேனே.
- தேவமைந்தன்
ஆடி ௫ வெள்ளிமாலை
[2017\07\21]