12.11.13

கலைமாமணி முனைவர் எ.மு.இராஜன் தனது "சிலந்தி வலை" யில்


காந்தியின் கைத்தடி
1984
முதல்
சிலந்தி வலை 2013
வரை
31 தமிழ் நூல்கள்
Political Economy of Income Taxation in India 1997
முதல்
Learning Disabilities
(தொகுப்.)
2008
வரை
6 ஆங்கில நூல்கள்
“சிலந்திவலை”
துளிப்பாக்கள் 500, பக்கம்: 128 ரூ.80
எ.மு.ராஜன் (கலைமாமணி முனைவர்) நவம்பர் 2013.

பூட்டிய வீட்டில்
சிலந்தி வரைகிறது
ஓவியம் (3)

படிக்கும் காலத்தில் புரியவில்லை
இப்போது புரிகிறது
முதுமை (7)

பேசக்கற்றுக் கொடுத்த பெற்றோர்
பேசாமலிருக்கக் கற்றுக் கொடுக்கும்
பிள்ளைகள் (12)

தாள்களைத் தவிர்க்கிறோம்
தப்பித்துப் போகட்டும்
மரங்கள் (21)

இனிவரும் துளிகளில் நிறுத்தற்குறி - அடி பிரிப்பு:-

வீட்டுக்கு மேல்/வீடு, இன்னும் தெருவில், மக்கள் (48)
அடுத்ததைப் பிடிக்கும் முன், பிடித்ததை விட்டு விடாதீர்கள், குரங்குப் பிடி (77)
வகுப்பறையை விட, வெளியில் மகிழ்ச்சியாக, மாணவர்கள் (79)
கோடிக்கணக்கானோர் வருகை, ஆன்மீகப் பொருளாதாரம், ஐயப்பா சரணம் (122)
பழங்கால வாழ்க்கை, மீண்டும், மின்வெட்டு (184)
எறும்புகள் ஏமாந்தன, வாசலில், கோலம் (191)
இன்னும் இருட்டு, விடியவே இல்லை, இலங்கைத் தமிழர் (200)
கடவுளுக்குப் புரியும், தமிழிலும், மந்திரம் (252)
எல்லா முகத்தையும், பொறுத்துக் கொள்ளும், கண்ணாடி (256)
வாழ இடமில்லை, வானமே எல்லை (259)
புட்டிப் பால் எதற்கு, தாய்ப் பால் இருக்கிறது, தமிழ் (282)
கொலை செய்வதுதான் தர்மம், கெளரவர்களுக்கும் பொருந்தும், கீதை (290)
அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள், நடத்துகிறார்கள் தனியார் பள்ளிகள் (300)
எனக்கு வேண்டும் இலவசம், எனது வாக்கு, விலைக்கு (296)
முகத்துக்கு அழகு, மூடிக்கிடக்கும் வாய் (306)
பிரிப்பதால் வலிக்கிறது, கத்திரிக்கோல் (320)
(John Donne Compares Love to a pair of Scissors (Facebook: Calavady Passoupati)
ஆங்கிலத்தில், ஆண் எப்போதும், மேல் (Male) (321)
இருப்பதைக், காட்டு, வாழ்ந்து (322)
எல்லாம் இயந்திரமயம், இருந்தும் வேண்டும், விரல் நுனி (344)
உயர்த்திப் பிடித்தார், காந்தி, கைத்தடி (350)
பேருந்தில் நெரிசல், உரசுகின்றன, எருமைகள் (349)
போனது 100, சென்றது, 108. (374)
யாரென்று தெரியாத, எதிர் வீட்டுக்காரர், அடுக்குமாடி (383)
தானாடா விட்டாலும், தசை ஆடும், பட்டிக் காடு (392)
தாயும் தாரமும், இருதலைக் கொள்ளி, எறும்பாய் நான் (405)
இனித்தது கன்னத்தில், பேத்தியின், உதடுகள் (402)
என் பெயரைச் சொல்லி, அழைத்தாள் குழந்தையை, முன்னாள் காதலி (449)
பாலூட்டியபடியே, பசியாறினாள், தாய். (450)
உழைத்து ஓய்ந்த, பிய்ந்து போன செருப்பாய், அப்பா (455)
தவறு செய், திருத்திக் கொள், நீ மனிதன். (460)
ஆயா கடந்த காலம், ஆத்தா, நிகழ்காலம் (467)
பந்திக்கு, முந்தியதால், தொந்தி (492)
கண்ணனைப் போல், எட்டாவது பிள்ளை, எ.மு.ராஜன் (500)

6.10.13

மாடல்ல! மனுஷிதான் நான்!

மாடல்ல! மனுஷிதான் நான்!
- கொடைக்கானல்

மாடல்ல, நீங்கள்
பல்பிடித்து விலைபேச!
ஆடல்ல நீங்கள்
விரல்மறைத்து விலைபேச!

உம்மைப்போல் நாங்கள்
உயிருள்ள பிறவிகள்தாம்!
ஐரோப்பா மண்டலத்தில்
பிறந்திருந்தால் நாங்கள்;
விலைபேச வருவீரா?
வரும்நேரம், நாங்கள்
வீட்டில்தான் இருப்போமா?
இருந்தாலும் -
உம்மைத்தான் மதிப்போமா?

காலம்தான் மாறிடினும்
இந்தியர்கள் மாறவில்லை!
“கழிப்பிடம் சென்றுவந்தால்
கைகழுவவேண்டும்” என்று
விளம்பரங்கள் இந்தநாளும்
‘பிரச்சார பாரதி’யில்!

கைகழுவி வாருங்கள் - பின்னர்
பெண்ணின்விலை பேசுங்கள்!

பீகார், ராஜஸ்தான்,
ம.பி., உ.பி. -
இங்கெல்லாம்
கற்றவர் விகிதம் குறைவு!
தமிழகம் கேரளம்
வங்கம்இம் மூன்றும் - கல்வி
அறிவு பெற்றோர் அதிகம்
கொண்டும்
திருந்தவிலை இன்னும்தான்
முழுதாய்!
முப்பத்து மூன்று
பெர்செண்ட் இன்னும்
சித்திக்க வில்லையே
பையா! நீ
ஆணாக வில்லையே
இன்னும்! - நல்ல
ஆணாக இருப்பவர்கள்
பெண்களுக்கு - முந்தி
ஏற்ற இடம்
தருவார்கள் அன்றோ?

பெண்ணை மதிக்காத தேசம்
பாழ்பட்டுப் போகும் என்று
மண்ணில் உரக்கவே சொல்லுங்கள்!

தனைப்பெற்ற தாயைப்
போன்றவர்கள் பெண்கள் - என்று
உணராத ஆணுமொரு ஆணா?- தன்னை
மதிக்காமல் வாழ்பவளும் பெண்ணா?

நன்றி: திண்ணை.காம்
posted by கொடைக்கானல் @ 5:53 AM

22.9.13

நாயகர் - குறுந்தொகை முழுதும் பிரெஞ்சிலாக்கியவர்

புலம்பெயர்ந்த நண்பர்களுடன் நானும் தியாகுவும் நிகழ்த்திய சொல்லாடலின் சிறுபகுதிதானிது: *நாயகர் - குறுந்தொகை முழுதும் பிரெஞ்சிலாக்கியவர். Destination : Le Tamoul parlé (edtions Astarté Rs.500/-) புதுச்சேரிப் பொதுஅறிவு வினாவிடை, அத்தையின் அருள், அப்பாவின் துப்பாக்கி முதலான நூல்களைப் படைத்தவர். அண்மையில் 'திசை எட்டும்' மொழியாக்கக் காலாண்டிதழ்வழி பிரெஞ்சு மொழி இலக்கியச் சிறப்பிதழ் தொகுத்தவர். முழுப்பெயர் - சுப்புராய ஆறுமுக வெங்கட சுப்புராய நாயகர். பிரெஞ்சில் Dr. Vengada Soupraya Nayagar. (Prof. & Head, Dept. of French, Kaanji Maamunivar Centre for Postgraduate Studies, Lawspet, Puducherry-605008. India.)

3.6.13

Poèmes de A.Pasupathy. (DEVAMAINDAN) - Traduit par R.Kichenamourty.

Poèmes de A.Pasupathy. (DEVAMAINDAN)

DEVAMAINDAN (pseudonyme de A.Pasupathy), est l’auteur de plusieurs recueils de poèmes (Ungal Thérouvil Orou Pâdagane – 1976, Poul Veli – 1980 ; Bonsaï Manidargal -1993 etc.) qui lui ont valu un succès immédiat à la fois auprès de l’élite et auprès des lecteurs moyens. Ancien professeur de tamoul dans les différents établissements universitaires de l’Etat de Pondichéry, il explore les aléas de la vie quotidienne en Inde et plus particulièrement dans le pays tamoul.
Le plus grand exploit
Des gens escaladent des rochers
Glissent sur des glaciers,
S’inscrivent au marathon des courses,
S’exercent des heures durant à la natation,
Se contorsionnent, s’arc-boutent
Et s’élancent à travers des cercles enflammés.
C’est pour se faire distinguer
Et s’immortaliser dans le Guinness des records.
Vanité ! Vanité ! Tout n’est que vanité !
Pourquoi ? Je vous le demande.
Car n’étant pas né dans nos bidonvilles,
Nul ne sait que nous autres
Qui y vivotons
Nous avons battu maintes fois tous leurs records
Et les battrons toujours, encore. Bonsaï Manitharkal (1993)

La souricière
Enfin,
Poussé par le désir du gâteau,
On est pris au piège.
Affolé,
On est allé
Battant de son corps
Les parois de la prison,
Et se cognant la tête
A ses barreaux.
De guerre lasse,
On se tient serein.
En tout cas, ce cachot
Se débouchera
Dans un sac sans trou.
Et des gars sans merci
Attendront
Pour nous donner
Des coups de bâton.
Tant pis.
Mangeons donc le reste de l’appât
Nous mettant en tête, toutefois,
De ne plus empiéter,
Dans une vie future,
Sur le domaine d’autrui.
- Bonsaï Manitharkal (1993)

Courtesy: http://franceindechassecroise.wordpress.com/

13.4.13

அத்தையின் அருள்


அத்தையின் அருள்
நண்பர், பிரெஞ்சுப் பேராசிரியர் முசியே சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள், தம் அத்தை அல்லியங்கோதை (11.08.1911 - 20.11.1994) அம்மாள் குறித்துப் படைத்துள்ள உயிரோட்டம் மிகுந்த வாழ்க்கை வரலாற்று நூல்தான் 'அத்தையின் அருள்.' நம் நண்பர் நாயகரை அவர்தம் அத்தை அழைத்த செல்லப் பெயர்தான் 'அருள்.' என்னிடம்கூட, அருள் என்றுதான் அவரைக் குறிப்பிட்டார் அவர். "நாயக்கர், தனது குருவான அத்தையம்மாவை நூலில் இலக்கியமாகப் பதிவு செய்துவிட்டார்" என்று ஐயா கி.ரா. அவர்கள் 17/03/13 அன்று குறிப்பிட்டது 100% பொருந்தும். விரைவில் இக்காவியத்தைப் பிரெஞ்சில் தர அருளை அன்போடு வேண்டுகிறேன்.

Aunt's Grace (Aththaiyin Aroul)



This's a very nice, easily readable, sweet biography of a magnanimous auntie of Dr.S.A.Vengada Soupraya Nayagar, Prof. in French, Kaanji Maamunivar Center for PG Studies, Lawspet, Puducherry, 605008 INDIA. The narration of the Professor about his aunt's beatiful life is excellent. Every westerner or European who wants to visit to know the breathing of Puducherry people should read this to understand the essence of a PONDICHERIAN'S life and her/his lively language. The eminent writer Ki.Raa is 100% correct while he said, " Nayakar has registered his aunt ALLIYANGODHAI as literature as she was his GURU, in this treatise. I really hope and request my friend Monsieur Nayagar to kindly translate this lovely book into Francaise and English ASAP.

11.3.13

இரண்டு குறுங்காவியங்கள்: 'காதல் பறவை,' 'பெண்மை போராடுகிறது'

இரண்டு குறுங்காவியங்கள்:

'காதல் பறவை,' 'பெண்மை போராடுகிறது'

முதலாவது 'காதல் பறவை' ஆசிரியர் வில்லிசை வேந்தர் கலைமாமணி இ. பட்டாபிராமன் அவர்கள்.

"சீர்த்த கொள்கைகள் செறிந்த"தாகவும் குமுகாயச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வு தருவதாகவும் இக்குறுங்காவியம் அமைகிறது.

இரண்டாவது 'பெண்மை போராடுகிறது' ஆசிரியர் புலவர் ப. பாவண்ணன் அவர்கள்.

போலிக் கலைகள் காலூன்றிவிட்ட சூழலில், ஊடகங்களில் நிலவும் முதலாளியக் கலைக்கு மாற்றாக, அதன் பிடியிலிருந்து விடுதலை செய்யும் முயற்சியில் உண்மையான கலையின் அடிமை விலங்கு அறுந்திட அடிக்கப்பெறும் சம்மட்டி வீச்சாக இக்குறுங்காவியம் திகழ்கிறது.

தொடர்பு முகவரி:

கலைமாமணி புலவர் இ. பட்டாபிராமன், க.மு., கல்.இ.,
16, வள்ளலார் தெரு,
குயவர்பாளையம்,
புதுச்சேரி - 605 013

தொ.பே: 0413 2245358
அ.பே: 9952449300


4.3.13

இணையத்தில் பாவாணர் மடல்கள்

இணையத்தில் பாவாணர் மடல்கள்

தனித்தமிழ்க் கழக, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை பத்தாம் சொற்பொழிவின் முதற்பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். புதுச்சேரி இலாசுப்பேட்டை முதன்மைச் சாலையில் அரசு நூலகத்துக்கருகில் உள்ள திரிபுரசுந்தரி அம்மாள் இல்லத்தில் 02.03.2013 (தி.ஆ.2044, கும்பம் 18 காரி) அன்று முற்பகல் 11 முதல் நண்பகல் 12:45 மணிவரை ஆற்றப் பெற்ற என் சொற்பொழிவின் ஒருபகுதியே இது. பிற பகுதிகளில் முழுமையாகத் தரவுகள் மட்டுமே உள்ளன. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர், ஆய்வு மாணவர் மாணவியர், புதுச்சேரித் தமிழ்ப் புலவர்கள், தமிழியக்கங்களின் அமைப்பாளர்கள், இதழாசிரியர்கள், ஊடக நண்பர்கள் முதலானோர் நிரம்பிய அவையை நோக்கிய பொழிவாதலின், இணையத்திலுள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் பாவாணரின் மடல்கள் குறித்த பொழிவுப் பகுதி மட்டுமே இங்கு தரப்பெறுகிறது.

இவ்வுரையில் இணையத்தில் மொழிஞாயிற்றைப் பற்றிய பதிவுகளைக் குறித்து மட்டுமே மொழிவதென்பது வரையறை. முதலில், தமிழநம்பி என்ற வலைப்பதிவைப் பார்ப்போம். திறக்கும் தளத்தில் வலது பக்கமாகத் தெரியும் இறங்கு நிரலில் “பாவாணர் (2)” என்பதைப் பார்க்கலாம். ‘பாவாணரின் மடல்கள்’ என்ற பதிவை விரிவானதாக 16 மேத்திங்கள் 2011 அன்று (கிழமையும் திங்கள்) பதிந்துள்ளார்.

முன்னுரையுடன் - மடல் ஊடகத்தின் சிறப்பு, மடல் இலக்கியம், இலக்கியங்களில் மடல்கள், இக்கால மடல் இலக்கியங்கள், பாவாணர் [இத்தலைப்பினுள்], பாவாணர் மடல்கள் [யார் யாருக்கு - எத்தகையோர்க்கு - ஆயிரக் கணக்கில் - பாதியளவு புலவர் இரா. இளங்குமரன் ஐயாவால் தொகுக்கப்பெற்று 1.பாவாணர் கடிதங்கள் 2.பாவாணர் மடல்கள் என்றிரண்டு நூல்கள் - முதலாவதில், இருபத்தெட்டுத் தலைப்புகள் - இரண்டாவதில், பத்துத் தலைப்புகள் - இவற்றின் கீழ், பகுதி மடல்கள் மட்டும் - 'பாவாணர் கடிதங்கள்’ என்ற தொகுப்பின் 28ஆம் தலைப்பின்கீழ் [சில கடிதங்கள்] 12 மடல்கள் முழுமையாக, முதல் பதினொன்றும் தி.தெ.சை.சி.நூ.ப. கழக ஆட்சியாளர் தாமரைத்திரு வ.சுப்பையா அவர்களுக்கும், பன்னிரண்டாம் மடல் [தொகுப்பாளரான / இரா.இளங்குமரன்] தமக்கும் என்றவாறு, முதல் தொகுப்பு, மடல் விளக்கம், பாவாணர் மடல்களில் எழுதிய வகை, வ.சு.வுக்கு எழுதிய மடல்கள் (ஆயிரத்துக்கும் மேற்பட்டவை), அன்பர்க்கும் ஆர்வலர்க்கும் எழுதிய மடல்கள், முதல் தொகுப்பில் கொடுத்துள்ள மடற்பகுதிகளில் சில, தொண்டின் உறைப்பு, பாவாணர் வீறு, முதல் தாய்மொழியும் ஆங்கில நூலும் (The Primary Classical Language of the World), வேர்ச்சொற் போலிகை (மாதிரி), சொல்லாக்க விளக்கங்கள், பிழையும் திருத்தமும், தனித்தமிழ்க் கழகம் [தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க் கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறேன் 01.09.1964 எழுதப்பெற்றவர் பெயரில்லை] [“உறுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேச வேண்டும் என்றும் யாப்புரவில்லை. தணித்தமிழ்ப் பற்றிருந்தால் போதும்” - 01.08.1964; எழுதப்பெற்றவர் பெயரில்லை], தனித்தமிழ்ப் பெயரீடு [“சாத்தையா என்னும் விளிவடிவைச் ‘சாத்தையன்’ என்று மாற்றுக” - 16.10.1979 தமிழ்க் குடிமகன்], தமிழ்ப் புலவர் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி, உலகத் தமிழ்க் கழகம், அகரமுதலிப் பணி, தொல்காப்பியச் சீர்மை, விளம்பரம் விலக்கல் (“நானும் விளம்பர வெறுப்பினன்” 6.3.’80 கு.பூங்காவனம்), கிழங்கு வகைகள், மனைவி மக்கள், நோய் நொடி நொம்பலம், சிதறிய மணிகள், முத்துமாலை, இரண்டாம் தொகுப்பு (“இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரனார் ஐயாவே ‘பாவாணர் மடல்கள்’ என்னும் இரண்டாம் நூலையும் தொகுத்திருக்கின்றார்......”), இரண்டாம் தொகுப்பில் உள்ள மடல் பகுதிகள் சில - உடலும் உள்ளதும், அன்பும் நண்பும், அகரமுதலிப் பணி, இரண்டு தொகுப்புகளிலும் பாவாணர் அயற்சொற்களைத் தவிர்த்து எழுதிய சொல்லாட்சிகளுள் சில (Thesis-இடுநூல்; சாதனை - நிலைநாட்டம்; Jet-பின்னுந்தி; மதியம் - உச்சிவேளை, உருமம், நண்பகல்; Fiddle-கின்னரம்; சன்மார்க்க சபை-நன்னெறி யவை; Apple-செம்பேரி; Cooker-அடுவான்; Extremists-முனைவாளர்), இன்னுமுள்ள மடல்கள் (“பாவாணர் பாவலரேற்றுக்கு எழுதிய பன்னூறு மடல்கள்” -பாவலரேறு மறைந்ததை அடுத்து வந்த ‘தென்மொழி’ மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சிறப்பிதழ்/சுவடி:17 ஓலை-6-7 பக்கம் 64-இல்), அரும்பெறலன்பர், ‘சுற்றுக் கவலையும் குச்சிக் கிழங்கும்', திருமண வாழ்த்து (1992 - 11.7.1972 ஆம் நாளிட்ட அஞ்சலட்டையில் வாழ்த்து “மங்கலத் திருவளர் தமிழநம்பி மலர்க்கொடியர் திருமண வாழ்த்து), முடிவாக... ஆகிய துணைத்தலைப்புகளின் கீழ் இந்தப் பதிவு அமைந்துள்ளது.

தனிநூலாக அச்சில் வரவேண்டிய இவ்விடுகையின் துணைத்தலைப்புகளின் கீழ் வரும் செய்திகள் மேலும் உள் தலைப்புகளின் அடியில் பகுக்கப் பெற்றுள்ளமை கண்டு மலைத்துப் போனேன். புதுச்சேரித் தனித்தமிழ்க் கழக நண்பர்கள் இவ்விணையப் பதிவை அச்சு நூலாக்க விரைவில் ஆவன மேற்கொள்ள வேண்டுகிறேன். ஏனெனில் இப்பதிவு -

1. பாவாணர் கடிதங்கள் (கழகம், 1985) - புலவர் இரா.இளங்குமரன்.

2. பாவாணர் பாடல்களும் மடல்களும் - புலவர் இரா.இளங்குமரன்.

3. தேவநேயப் பாவாணர் (சாகித்ய அகாதெமி 2002) - புலவர் இரா. இளங்குமரன்.

4. பாவாணர் வரலாறு (கழகம் 2000) - புலவர் இரா.இளங்குமரன்.

5. தென்மொழி சுவடி 7: ஓலை 6-7 - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

என்ற ஐந்தன் பிழிவு. சுளைகளுடன் கூடிய சாறு. துணை / உள் தலைப்புகளே சுளைகள் என்பேன்.


3.3.13

தேடல் - தேவமைந்தன்


"தேடல் மட்டுமே வாழ்வின் எச்சம்

நிகழ்'இன்று' மட்டுமே

உனக்கு மிச்சம்." - தேவமைந்தன்

26/12/1998 (பாட்டரங்கம்)


"தேடல் மட்டுமே வாழ்வின் எச்சம்
நிகழ் 'இன்று' மட்டுமே உனக்கு
மிச்சம்." - தேவமைந்தன்
26/12/1998 (பாட்டரங்கம்)

"தேடல் மட்டுமே வாழ்வின் எச்சம்
நிகழ் 'இன்று' மட்டுமே உனக்கு
மிச்சம்." - தேவமைந்தன்
26/12/1998 (பாட்டரங்கம்)

26.2.13


"இணையத்தில் மொழிஞாயிறு" என்று உரிய காப்புரிமை பெற்ற என் தரவுத்தொகுப்பை, "பாவாணரும் இணையமும்" என்ற தலைப்பில், வரும் காரி 2/3/2013 அன்று தனித்தமிழ்க் கழகப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவாக நிகழ்த்துகிறேன். விடப்படக்கூடாது என்று கருதும் இணையப்பதிவான -100% தலைப்புத் தொடர்பான தங்கள் தரவை, 01/03/13 மாலைக்குள் இதன் கருத்துரைப் பகுதியில் தவறாமல் தருக!

11.2.13

தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் / சனி, 2 பிப்ரவரி, 2013


சனி, 2 பிப்ரவரி, 2013
புதுவையில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் 5.30 மணி வரை
இடம் : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்.
66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.
தொடக்க விழா
காலை 9.30 மணிக்கு

தலைமை:
திரு. வீர. முருகையன்
தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

நோக்க உரை:
திரு. இரா. சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.

முன்னிலை:
பேராசிரியர் நாக. இளங்கோ,
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்.
திரு. ஓவியர் இரா. இராசராசன்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம், புதுச்சேரி.
பொறியாளர் இரா. தேவதாசு
துணைத்தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

முகாமைத் தொடக்கி வைப்பவர்:
மாண்புமிகு திரு. வ. சபாபதி அவர்கள்
சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு.
‘தமிழா’ தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:
மாண்புமிகு திரு. தி. தியாகராசன் அவர்கள்
மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.
பெறுதல்:
திரு. கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
வாழ்த்துரை:
திரு. இரா.விசுவநாதன் அவர்கள்
மாநிலச் செயலர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI), புதுச்சேரி.

அமர்வு 1: காலை 10.30 முதல் 11.15 வரை

தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu), தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு, தமிழில் இணைய உலாவிகள் (Web Browsers),ஒருங்குகுறி, TAM, TAB, TSCII பற்றிய விளக்கம் மற்றும் குறியீடு மாற்றம்
(font conversion)

திரு. இரா.சுகுமாரன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.
பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு பயன்பாட்டாளர்கள்.

அமர்வு 2: காலை 11.15 முதல் 11.30 வரை
தமிழில் தட்டச்சு மென் பொருட்கள் நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்.
திரு. க. அருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.
காலை 11.30 முதல் 11.45 வரை
தேநீர் இடைவேளை
அமர்வு 3: காலை 11.45 முதல் 12.30வரை
வலைப்பதிவு செய்தல்: பிளாக், வேர்டு பிரசு, பிற…
பரமேசுவரி
அமர்வு 4: பகல் 12.30முதல் 1.15 வரை
திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி,திரட்டி
கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற…
திரு. ஏ. வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.
உணவு இடைவேளை
பகல் 1.16 முதல் 2.00 வரை
அமர்வு 5: பிற்பகல் 2.00 முதல் 2.45வரை
திரு. கோ.சுகுமாரன்
தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
சமுக வலைத்தளங்கள்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு

அமர்வு 6:பிற்பகல் 2.46முதல் 3.15 வரை

பேராசிரியர் நாக. இளங்கோ
தமிழில் மின்னூல் உருவாக்குதல்
அமர்வு 7:பிற்பகல் 3.15முதல் 4.00 வரை
கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
த. சீனிவாசன், - கணியம் மின்னிதழ் - ஆசிரியர்.

அமர்வு 8:பிற்பகல் 4.00முதல் 4.15 வரை

தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள், தமிழ் தொடர்பான பிற…
திரு. தமிழநம்பி , விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
தேநீர் இடைவேளை
பிற்பகல் 4.15 முதல் 4.30 வரை
நிறைவு விழா: மாலை 4.30 மணி
தலைமை:
திரு. எல்லை. சிவக்குமார் பொதுச்செயலர்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
சான்றிதழ் வழங்கல்:
பேராசிரியர் பசுபதி
நிறைவுரை:
திரு. அ.கு. சலீம்,
துணைத்தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
தொடர்புக்கு:
இரா. சுகுமாரன்: 94431 05825, எல்லை. சிவக்குமார்:
பேராசிரியர் நாக. இளங்கோ:9943646563, கோ.சுகுமாரன்: 9894054640
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, ellai.sivakumar@gmail.com
இணையம்: www.pudhuvaitamilbloggers.org/ வலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/

Posted by thamizha nambi at 9:03 PM 1 comments

6.12.12

தொல்காப்பியர் விருது பெற்ற வில்லியனூர் கலைமாமணி புலவர் ந. வேங்கடேசனின் ஆய்வுப் பணிகள்

கண்டுபிடிப்புகள்
தினமணியில் வெளிவந்தவை
07.07.1978 ஆழியூர் சோழர் கால கல்வெட்டு
26.09.1978 சேஷங்கனூரில் பாண்டியர் கல்வெட்டு
11.02.1979 காரைக்கால் வட்டத்தில் சோழர் கால கல்வெட்டு
.04.1979 வில்லியனூர் கல்வெட்டு

தினமலரில் வெளிவந்தவை
11.05.1982 கீழ்வாலை ஓவியம் கண்டுபிடிப்பு
04.04.1984 பறையம்பட்டு வட்டெழுத்து கண்டுபிடிப்பு
24.11.1992 பல்லவர் சோழர் நடுகற்கள் கண்டுபிடிப்பு
15.12.1992 செஞ்சி அருகே பல்லவர் காலச் சிறப்புகள்
18.12.1992 நடுகற்கள் கண்டுபிடிப்பு
29.11.1999 விழுப்புரம் அருகே முற்கால பல்லவ சிற்பங்கள் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு நாளிதழில் வெளிவந்த கட்டுரை
1967இல் கல்வி

தினமணி சுடரில் கட்டுரைகள்
19.11.1978 ஆழியூர் பூஞ்சோலையுடையார்
18.03.1979 மரக்காணம் பூமிசுவரமுடையார்
10.06.1979 வில்லியநல்லூர் திருக்காமீச்சுரம்
14.01.1989 குன்றுடைய மகாதேவர்

தினமணி கதிரில் வெளிவந்தவை
02.10.1983 மேல்சாத்தமங்கலத்தில் தொல்லியல் ஆய்வு
03.11.1985 வாஞ்சிக்குப் பயிற்சி தந்தவர்
23.02.1992 சுதந்திரப்போராட்டத்தில் புதுவையின் பங்கு
07.01.1996 புதுச்சேரி ஆயி நினைவுச் சின்னம்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் [புதுச்சேரி]
நான்காவது தமிழ் மொழியியற் கருத்தரங்கம்
மாநாடு: 1994 உரை மற்றும் கட்டுரை
புதுவை மாநிலக் கல்வெட்டுத் தமிழ்

பாக்கியலஷ்மி மாத இதழில் கட்டுரை
1962இல் அருமைத் தங்கைக்கு

திருமால் மாத இதழில் கட்டுரை
பிப்ரவரி 1989 எழிலிழந்த எண்ணாயிரம்
ஆகஸ்டு 1991 குந்தவை விண்ணகர் ஆழ்வார்கோயில்
செப்டம்பர் 1992 கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
அக்டோபர் 1992 கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
நவம்பர் 1992 கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
பிப்ரவரி 1993 தண்சேறை எம்பெருமான்
மார்ச்சு 1993 திருமால் திருப்பதி கல்வெட்டுகளில் - கல்லூரிகள்
மே 1993 வரலாற்றில் ஸ்ரீஇராமாநுசர்
சூன் 1993 வரலாற்றில் ஸ்ரீஇராமாநுசர்
சூலை 1993 வரலாற்றில் ஸ்ரீஇராமாநுசர்
மார்ச்சு 1994 திருமலை கல்வெட்டுகளில் அரிய செய்திகள்
ஏப்ரல் 1994 திருமலை கல்வெட்டுகளில் அரிய செய்திகள்
பிப்ரவரி 2000 வீரநாராயண விண்ணகரும் இராஜராஜ விண்ணகரும்
மார்ச்சு 2000 கல்வெட்டுகளில் திருவாய்மொழி
பிப்ரவரி 2001 சயாமில் அவனி நாரணன்

முக்குடை - திங்கள் இதழில்
நவம்பர் 1997 ஆறகளூர் சமணச் சிற்பம்
திசம்பர் 2000 தாதாபுரத்து குந்தவை ஜினாலயம்

புதுமை - திங்களிதழில்
சூன் 1990 கல்வெட்டில் சமுதாயப்பணி
திசம்பர் 1992 புதுவை மாநிலக் கல்வெட்டில் நாணயம்
திசம்பர் 1996 புதுவை மாநிலக் கல்வெட்டில் ஆரியக்கூத்து

ஆண்டிதழ் - புதுச்சேரி வரலாற்றுக் கழகம்
31.12.1980 வரலாற்றுச்சுவடுகள் ஆழியூரில் ஒரு ஆய்வுப்பணி

வெல்லும் தூய தமிழில் சூலை 1995
கல்வெட்டு காட்டும் வரிகள்

புதுச்சேரி ஸ்ரீமத் இராமாநுச நாவலர் சுவாமிகள் மன்றம் - சிறப்பு மலரில்
30.07.1988
10.07.1998
கல்வெட்டில் திருமால் திருப்பதிகள்

ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோயில் - புதுச்சேரி
குடமுழுக்கு விழா மலர் 06.08.1999 கள ஆய்வும் - சிவன்கோயில்களும்

தொகுப்பு நூல்களில்
சனவரி 1980 வரலாற்றுக் களஞ்சியம்
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்

அறிவுலகின் குருதேவர் சனவரி 1981
பல்கலைச்செல்வர்
சங்கநூல் ஆய்வும் - பி.எல்.சாமியும் - சூலை 1999
வான் கலந்த நுண்மாண் நுழைபுலம்!

புதுச்சேரி - பல்கலைக்கழக வெளியீடு
ஆனந்ததரங்கர் காலத் தமிழ்ச் சமுதாயம்
மார்ச்சு 1997 வணிகவியற் செய்திகள் 1, 2.

தமிழோசை இதழில்
17.03.2008 கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்
02.05.2008 திருவிண்ணகரங்கள் கல்வெட்டுகளில் திருவாய்மொழி விண்ணப்பித்தல்

ஆனந்தரங்கம் 1999
நாட்குறிப்பில் வணிக நிலை 1, 2
எழுதிய நூல்கள்
1. பண்பும் பயனும் ஆகஸ்ட் 1978 பிப்ரவரி 2002
2. வரலாற்றில் வில்லியனூர் சூன் 1979 சூன் 2001
3. வரலாற்றுச் சின்னங்கள் ஆகஸ்ட் 1982
4. பல்லவன் கண்ட பனைமலைக் கோயில் சனவரி 1990
5. வரலாற்றில் அரிக்கமேடு திசம்பர் 1990
6. கல்வெட்டுகளில் புதுமை மாநில ஊர்ப் பெயர்கள் திசம்பர் 1991
7. கல்வெட்டுகளில் அரிய செய்திகள் திசம்பர் 1992
8. புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் நாடும் வளநாடும் திசம்பர் 1993
9. வரலாற்றில் ஆரிய வைசியர் மே 1993
10. கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள் திசம்பர் 1994
11. கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதிகள் திசம்பர் 2000
12. கல்வெட்டுகளில் நீர்நிலைகளும் வரிகளும் திசம்பர் 2000
13. வரலாற்றில் திரிபுவனை திசம்பர் 2002
14. வரலாற்றில் திருவண்டார் கோயில் திசம்பர் 2003
15. வரலாற்றில் மதகடிப்பட்டு 2003 தொல்காப்பியர் விருது நூல்.
16. நடுநாட்டில் சமணம் 2004
17. தேவாரத்தில் இசைக் கருவிகள் 2005
18. புதுச்சேரி மாநிலச் செப்பேடுகள் 2009
19. கல்வெட்டுகளில் சில வரலாறுகள் 2009
20. பொன் பரப்பின வாண கோவரையர் 2006

புதுச்சேரி வானொலி நிலையத்தில் உரையாற்றியமை
13.10.1978 புறநானூற்றில் உழவு
26.10.1979 புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் ஊரும் பேரும்
04.01.1980 சோழ பாண்டியபுரம் கல்வெட்டுகள்
1981 பாண்டியக் கோவை
23.04.1985 இடுக்கண் வருங்கால் நகுக
30.04.1985 உயர்ந்த நோக்கங்கள் உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன
07.05.1985 ஒரு மனிதனின் தலை சிறந்த நண்பர்கள்
02.08.1986 திரு.வி.க. சிந்தனைகள்
16.09.1986 குறள்நெறி - இரவு அதிகாரம்
10.10.1987 அரிக்கமேடு உரையாடல்
09.09.1992 தமிழ்வளர்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்களின் கொடை
16.09.1992 தமிழ் வளர்ச்சிக்கும் கல்வெட்டாய்வாளர் கொடை
23.09.1992 தமிழ் வளர்ச்சிக்குப் பத்திரிகை ஆசிரியர் கொடை
20.06.1993 பக்தி இலக்கியத்தில் வரலாற்றுச் சிந்தனைகள்
23.09.1993 புதுவையின் வரலாற்றுச் சின்னங்களும் பண்பாட்டுப் பாரம்பரியமும்
30.11.2004 திருமூலரின் சிந்தனைகள்
07.12.2004 திருமூலரின் சிந்தனைகள்
14.12.2004 திருமூலரின் சிந்தனைகள்
10.2006 கல்வெட்டில் அரிய செய்திகள்

புதுச்சேரி தொலைக்காட்சியில்
வில்லியனூர் - கோயில்கள்
திருபுவனை - பற்றிய
பாகூர் - நிகழ்ச்சிகள்

சன் தொலைக்காட்சியில்
வணக்கம் தமிழகம் 10.04.2006

மக்கள் தொலைக்காட்சியில்
“ஊர்மனம்” ஐம்பது தொடர்கள்

நிகழ்த்திய - கருத்தரங்கு நிகழ்ச்சிகள்
04.10.1997 அனைத்துலக திராவிட மொழியியல் கழகம் புதுவை - கல்வெட்டில் சமுதாயப்பணி
09.05.1983 கும்பகோணம் - இராஜகம்பிரன் பெருவிழா கல்வெட்டில் அரிய செய்திகள்
12.08.1984 புதுச்சேரி ஸ்ரீ வைணவ மாநாடு கல்வெட்டில் திருமால் திருப்பதிகள்
06.04.1986 பண்ருட்டி ஸ்ரீ வைணவ மாநாடு வைணவத் திருக்கோயில்
28.07.1991 புதுச்சேரி ஸ்ரீ வைணவ மாநாடு வரலாற்றில் ஸ்ரீ இராமானுஜர்
27.01.1992 புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி கல்வெட்டுகளில் புதுவைச் சமுதாயம்
20.11.1992 புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம் புதுவைக் கல்வெட்டுகளில் சமுதாயப்
பண்பாட்டுத் தரவுகள்
30.03.1992 ஆனந்தரங்கர் அறக்கட்டளைச் சொற்பொழிவு வணிகவியற் செய்திகள்
22.05.1994 புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம் புதுவை கல்வெட்டில் கல்வெட்டுத்தமிழ்

திருச்சிற்பல்பலம் சைவ திங்கள் இதழ் துணை ஆசிரியர்
அதில் தொடர்ந்து கட்டுரை
தொண்டை நாட்டுத் திருமுறைத் தலங்கள்

புதுவை வானம்பாடி - பல்சுவைத் திங்கள் இதழில்
திசம்பர் 2004 இல் இருந்து தொடர்ந்து
“சிலைகள் சொல்லும் வரலாறு”

தஞ்சைப் பல்கலைக்கழகம் - தமிழகத் தொல்லியல் கழகம்
“ஆவணம்” ஆண்டு இதழ்
2002 வாகூர் பற்றிய கல்வெட்டுகள்
2003 இராம்பாக்கம் கல்வெட்டுகள்
2004 பாக்கம் கல்வெட்டுகள்
2005 தாதாபுரம் மாணிக்கேஸ்வரம் கல்வெட்டுகள்

திருப்பனந்தாள் காசித்திருமடமும் களம்பூர் கோவிந்தசாமி அடிகளார் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய திருநாவுக்கரசர் ஆய்வு மாநாட்டில் காசிக்குச் சென்று கட்டுரைப் படித்தது.

2003 ஆய்வு மலரில் “நாவுக்கரசரில் இசைக்கருவிகள்”,
திசம்பர் 2005 இல் “சுந்தரர் ஆய்வு மாநாட்டில்”
“சுந்தரர் தேவாரத்தில் இசைக்கருவிகள்” கட்டுரைகள் அளித்துள்ளேன்.

மே-2005 ரிஷிகேசத்தில் நடந்த தமிழ் உணர்த்தும் பக்தி மாநாட்டில் கலந்து கொண்டு
“கல்வெட்டு உணர்த்தும் பக்தி”
எனும் கட்டுரையை அளித்துள்ளேன்.

நவம்பர் - 2006
திருப்பனந்தாள் காசித்திருமடம்: மாணிக்க வாசகர் காலம்

தொகுப்பு நூல்கள்:
சங்க நூலாய்வும் சாமியும் 1999
அறிஞர் பி.எல். சாமியின் ஆய்வுக் கட்டுரைகள் 2002.
பன்னாட்டு - தமிழர் - காசியில் ஆகஸ்ட் 2012 நடந்த சைவமாநாட்டில்
“கல்வெட்டில் திருமுறை விண்ணப்பம் செய்தல்” கட்டுரை அளித்தல்.

இப் பதிவில் சேர்க்கவும்:

அண்மை நூல்: ‘விண்ணகரக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள்’ - வில்லியனூர்ப்புலவர் ந. வேங்கடேசன்.
பக்கங்கள் 104. உருபா 65. திருமுடி பதிப்பகம். 40 கிழக்குச் சந்நதி தெரு, வில்லியனூர், புதுச்சேரி 605 110.
புலவரின் கைப்பேசி: 94420 66599



தொல்காப்பியர் விருது பெற்ற வில்லியனூர் - கலைமாமணி புலவர் ந. வேங்கடேசன் அவர்கள்


25.11.12

தெளிதமிழ் அன்பர்கட்கு மீண்டும் வேண்டுகோள்! - பேரா. ம.இலெ.தங்கப்பா


தெளிதமிழ் அன்பர்கட்கு மீண்டும் வேண்டுகோள்

தெளிதமிழ் உறுப்பினர் மிகக் குறைந்த எண்ணிக்கையினராகவே உள்ளனர். ஆண்டு உறுப்பினர் கட்டண மொத்தத் தொகையும் கூட இதழ் அச்சிடும் செலவில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. அவ்வப்பொழுது கிடைக்கும் நன்கொடையும் வாழ்நாள் உறுப்பினர் கட்டணமுமே இதழைத் தூக்கி நிறுத்துகின்றன. அவையும் அருகிவருவதால் இதழ்ச் செலவைச் சரிக்கட்டுவது மிகுந்த இடர்ப்பாடுடையதாக உள்ளது.

உறுப்பினர் சிலர் ஆண்டுக்கணக்காகக் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். நினைவூட்டு மடல் எழுதியும் பலர் குறித்தகாலத்தில் கட்டணம் விடுப்பதில்லை. மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இனியேனும் செவிசாய்த்துக் குறித்த காலத்தில் கட்டணம் விடுக்கவும் நிலுவையைச் சரி செய்யவும் வேண்டுகின்றோம். மேலும் இக்காலப் பொருள் புழக்கம், வருவாய் நிலைகளில் உரூபா. 1500 என்பது பெருந்தொகை அன்று. ஆண்டுறுப்பினாராயிருக்கும் பலர் வாய்நாள் அல்லது புரப்புக் கட்டணம் உரூ.1500 செலுத்துமளவு பொருள் வளம் கொண்டிருப்பர் என்பதை அறிவோம். கல்லூரி விரிவுரையாளராகவும் உயர் பள்ளி ஆசிரியராகவும் இருக்கும் உறுப்பினர் நினைத்தால் மிக எளிதில் தங்களைத் தெளிதமிழின் புரப்போர் ஆக்கிக் கொள்ளலாம். அல்லது நன் கொடையாகவேனும் வழங்கலாம். ஏற்கெனவே வாழ்நாள் கட்டணம் செலுத்தி ஐந்தாண்டுகளேனும் கழிந்தவர்கள் இன்றைய விலைவாசி ஏற்றத்தை உளங்கொண்டு பணம் செலுத்திம் புரப்போராகிக் கொள்ளவும் வேண்டுகின்றோம். தெளிதமிழ் இதழின் பணியைப் பாராட்டி எழுதும் உறுப்பினர்கள் தங்களை வாழ்நாள் உறுப்பினர் அல்லது புரப்போர் ஆக்கிக் கொள்ளலாமே. தங்கள் நண்பர் சிலரையும் உறுப்பினராக்கலாம். இதழ் நடத்த வியலாத நிலை ஏற்படுமுன் அன்பர்கள் போர்க்கால அடிப்படையில் இயங்கி இதழ் தொடர்ந்து வெளிவர உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
- (ஆ.ர்)

தெளிதமிழ் திங்கள் இதழ் TELI TAMIZH - TAMIL MONTHLY
ஆசிரியர்: பேரா.ம.இலெ. தங்கப்பா
தி.ஆ. 2043, நளி க 16/11/2012 ப-31.

படத்துக்கு நன்றி; nakkheeran.in

23.11.12

மறைந்த மெய்த்தமிழாசான் இலக்கணச் சுடர் முனைவர் இரா. திருமுருகன் அவர்களின் பாடல் பகுதி (நன்றி: திரு ம.இலெ. தங்கப்பா ஐயா)

சிறந்த பத்து

அழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று
ஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.
இறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து
அறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.
நீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே
மாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை
நாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு
ஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்
பலபல துறைகளில் பலபல கற்றிட
அலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்
பொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து
எய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்
கொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை
உடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
நாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து
ஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்
அரும்பொருள் கருத்துஓர் ஆயிரம் பேச
விரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்
பயங்கெழு மதநெறி பாரினில் எமது என...
...................................................................

- முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்.
தெளி தமிழ், புதுச்சேரி. தி.ஆ. 2043, நளி க 16-11-2012.
பக்கம் 6.

13.11.12

'வானவில்' நூல்வெளியீட்டு விழாவில் இவ்வலைப்பதிவாசான் பேரா. அ. பசுபதி (தேவமைந்தன்)


இடமிருந்து வலம்:

கலைமாமணி சு.வேல்முருகன், 'வானவில்' ஆசிரியர் ஆர். மணவாளன், கலைமாமணி முனைவர் எ.மு. ராஜன், புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன், வலைப்பதிவர் பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்), முனைவர் க. பஞ்சு, வழக்கறிஞர் ப. தமிழரசன் ஆகியோர்

5.11.12

புதுச்சேரி சுதந்திரம் - நாகரத்தினம் கிருஷ்ணா

கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.
இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன. புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு பட்டாசு.
1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.
இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது. இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.
இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.
‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய யுத்தத்தில் மிகக்கடுமையாக தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில் அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.
தனிமனிதனாகட்டும் ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.

http://nagarathinamkrishna.wordpress.com/