Showing posts with label அத்தையின் அருள். Show all posts
Showing posts with label அத்தையின் அருள். Show all posts

13.4.13

அத்தையின் அருள்


அத்தையின் அருள்
நண்பர், பிரெஞ்சுப் பேராசிரியர் முசியே சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள், தம் அத்தை அல்லியங்கோதை (11.08.1911 - 20.11.1994) அம்மாள் குறித்துப் படைத்துள்ள உயிரோட்டம் மிகுந்த வாழ்க்கை வரலாற்று நூல்தான் 'அத்தையின் அருள்.' நம் நண்பர் நாயகரை அவர்தம் அத்தை அழைத்த செல்லப் பெயர்தான் 'அருள்.' என்னிடம்கூட, அருள் என்றுதான் அவரைக் குறிப்பிட்டார் அவர். "நாயக்கர், தனது குருவான அத்தையம்மாவை நூலில் இலக்கியமாகப் பதிவு செய்துவிட்டார்" என்று ஐயா கி.ரா. அவர்கள் 17/03/13 அன்று குறிப்பிட்டது 100% பொருந்தும். விரைவில் இக்காவியத்தைப் பிரெஞ்சில் தர அருளை அன்போடு வேண்டுகிறேன்.