24.5.06

ஆன்மீகம்: ஞானசபை

ஆன்மீகம்: ஞானசபை சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் ஞானசபையின் தோற்றம் 1871-ஆம் ஆண்டில், வள்ளலார் மேட்டுக்குப்பம் சித்திவளாக மாளிகையில் இருந்தவந்தபொழுது, ஒருநாள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் “தான் அருள்நடம் புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபையை வடலூர் பார்வதிபுரத்திலுள்ள உத்தரஞான சிதம்பரத்தில் காணுதல் வேண்டும்” என்று தன் திருக்குறிப்பால் அவருக்கு அறிவித்தார். ‘தாம் அகத்தே கண்ட அருளனுபவத்தை, புறத்தே உலகமக்களுக்கும் பாவனையாகக் காட்டவேண்டும்’ என்ற குறிக்கோளில் இருந்துவந்த வள்ளலாரும் ஆண்டவர் கட்டளையை விருப்புடன் ஏற்றார். ஞானசபைக்கான வரைப்படத்தை தன் திருக்கரத்தாலேயே வரைந்து, அதன் அடிப்படையில் சபையைக் கட்டும் பணியை மேற்கொண்டார்.

No comments: