27.10.06

காணவில்லை, "வள்ளல்கள்..." - தேவமைந்தன்

அன்றெல்லாம் வழங்கினராம் அளவில்லாத கொடைகள்பல. எதைக்கேட்ட போதினிலும் அதைஅதை அந்தஅந்த முறைப்படி வாரிவாரி வழங்கிடவே வள்ளல்கள் வாழ்ந்தனராம். வாய்திறந்து கேட்காத தேருக்கும் மயிலுக்கும் நுண்ணுணர்வால் ஆராய்ந்து கொடைகள்தாம் அளித்தனராம். இன்றைக்கு- நாணக்கொடை இறக்குமதி நடிகையர்க்கும் நேர்மைக்கொடை கட்சிகளின் தலைவர்கட்கும் அறிவுக்கொடை ‘டவுன்லோடு’ எழுத்தாளர்க்கும் நினைவுக்கொடை வாக்காளும் மக்களுக்கும் உண்மைக்கொடை தொலைக்காட்சி நடத்துநர்க்கும் ‘லாஜிக்-கொடை,’ தொடர்களை இயக்குநர்க்கும் - தன் மானக்கொடை மனிதர்கள் அனைவருக்கும் கைசிவக்க வழங்குதற்கு வள்ளல் இல்லையே. ஈகைகளைச் செய்வதற்கு மனமும் தொல்லையே…

No comments: