27.10.06

மறதிப் பெருவெளி - தேவமைந்தன்

நினைந்து நடந்து முடிந்த நினைவுகள் வனைந்து மிடைந்து விளைந்த முடிவுகள் முகவரி இல்லா மொட்டை மடல்கள் மயங்கிப் பிறரை மிதிக்கும் செயல்கள் அகந்தை மிகுந்தே பிடிக்கும் அடவுகள் பிறரைப் பொறாமல் கிளப்பும் பொய்கள் வஞ்சக வாழ்த்தொடு போலிமைப் புனைவுகள் அனைத்தும் சிதைந்தே அடையாளம் இன்றி மறைந்துட் கலந்தே காணாது போகும் காலம் கடந்த பெருவெளி ஞாலம் மறந்த மறதி வெளியே…

No comments: