5.3.15

" எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே!" - ஔவையார்

மற்றவர்கள் நம் மேல் விடும் சாபம் பலிக்கிறது என்றால், நமது மனம் நம்மைவிட அவர்களைத்தான் மதித்து ஏற்றுக் கொள்கிறது என்று அர்த்தம். திடமான மனம் உள்ளவர்கள், மற்றவர்கள் தரும் டென்ஷனை மதிக்க மாட்டார்கள்; டார்ச்சர் கொடுப்பவர்களுக்கு -'சட்டபூர்வமாக' கவுன்ட்டர்-டார்ச்சர் கொடுப்பார்கள். சம்பளம், நம் உழைப்புக்குக் கிடைப்பது. மனநோய் பிடித்தவர்களை நாமே நம் தலைமேல் உட்கார விடுவதற்குப் பிரதியாகப் பெறுவது அல்ல. பொதுத்துறை, தனியார் நிறுவனங்களின் மேலாண் இயக்குநர், தன்னிடம் -'குரூப்' சேர்க்காமல் பணிபுரியும் 'விசுவாசிகளை' 'unskilled'கள் டாரச்சர் பண்ணுவதற்கு மறைமுகமாக உதவினார் என்றால்,தகுதி மேம்பட்ட இன்னொரு நிறுவனம், அந்தப் பணியாளரை 'நேரம் பார்த்து' ஏற்றுக் கொள்ளும். " எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே!" - ஔவையார்.

No comments: